Theni

News April 4, 2025

தேனி: கடைகளில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் 

image

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே.15.க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

News April 4, 2025

தேனி : தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மில் நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட இயந்திர ஆப்ரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<> இங்கு<<>> கிளிக் செய்து 22-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

தேனி : மருத்துவர் தாமதத்தால் சிசு உயிரிழப்பு

image

போடியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி சரண்யாவை  பிரசவத்துக்காக நேற்று (ஏப்ரல்.3) அதிகாலை போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த செவிலியர்கள் பனிக்குடம் உடைந்திருப்பதாக கூறி, இரவு நேர பணி மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  மருத்துவர் வந்து பார்த்தபோது சரண்யாவின் கர்ப்ப பையிலேயே ஆண் சிசு உயிரிழந்தது தெரியவந்தது.

News April 4, 2025

இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் 03.04.2025 10 மணி முதல் 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 3, 2025

அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு பயிற்சி – ஆட்சியர்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் (ம) பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் ரஞ்சீத் சிங் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கோயில்

image

தேனியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கண்ணகி கோயில் எங்கு உள்ளது தெரியுமா? தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் பளியன்குடி என்னுமிடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கோயில். இது கடல் மட்ட அளவிலிருந்து சுமார் 5000 கி.மீ உயரத்தில் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே இக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி. அன்று இங்கு கேரளா மற்றும் தமிழக மக்கள் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்வர்.

News April 3, 2025

தேனி : தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட சூப்பர்வைசர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு<<>> கிளிக் செய்து 16-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 3, 2025

தேனி மக்களுக்கு ஏப்ரல் 5 முக்கியமான நாள் 

image

தேனி, பெரியகுளம், சின்னமனுார் செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் ஏப்.5ல் காலை 11:00 முதல் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இதில் மின் கட்டண பிரச்னைகள், குறைந்த மின்னழுத்த புகார்கள் தீர்வு காணலாம். இதில் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது நடவடிக்கை – வனத்துறையினர்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் அப்போது காட்டு தீ ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 3, 2025

வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது நடவடிக்கை – வனத்துறையினர்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மலைப்பகுதிகளில் அப்போது காட்டு தீ ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி யாரும் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் செல்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!