Theni

News April 10, 2025

இன்றைய தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 10.04.2025 வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News April 10, 2025

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 10, 2025

தேனியில் நாளை கொட்டப் போகும் மழை 

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (ஏப்.11) கீழ்க்கண்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

தேனியில் பார்க்க வேண்டிய 7 கோயில்கள்

image

1.மங்களாதேவி கண்ணகி கோயில்
2.குச்சனூர் சனீஸ்வரன் கோயில்
3.பூலாநந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோயில்
4.உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில்
5.அனுமந்தன்பட்டி அனுமன் கோயில்
6.வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில்
7.கைலாசநாதர் கோயில்

ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் நிச்சயமாக தேனி மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களை தரிசித்து மகிழ்ந்து உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்..

News April 10, 2025

தேனி : விற்பனைக்கு தயார் நிலையில் விதை நெல்

image

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் விரைவில் முதல் போக நெல் சாகுபடி துவங்க உள்ளன. கம்பம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆர்.என்.ஆர் மற்றும் கோ 55 என 2 ரகங்கள் தயார் நிலையில் உள்ளது. ஆர்.என்.ஆர் ரகம் ஏக்கருக்கு 20 கிலோவும், கோ 55 ரகம் எக்டேருக்கு 50 கிலோ வழங்கப்படும். ஆர். என். ஆர். ரகத்திற்கு கிலோவிற்கு மானியம் ரூ.17.50, கோ 55 ரகம் கிலோவிற்கு ரூ.20.50 மானியமாக வழங்கப்படும் என வேளாண் துறையினர் தகவல்

News April 10, 2025

தேனி : அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

தேனி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னிவீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே(ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. உடனே APPLY செய்து உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News April 10, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 10) நீர்மட்டம்: வைகை அணை: 56.96 (71) அடி, வரத்து: 111 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.20 (57) அடி, வரத்து: 25 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 92.00 (126.28) அடி, வரத்து: 7.28 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 36.70 (52.55) அடி, வரத்து: 10 க.அடி, திறப்பு: இல்லை.

News April 10, 2025

தேனி உழவர் சந்தையில் காய்கறி விலை விபரம்

image

தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 10) கத்தரி ரூ.24/20, தக்காளி ரூ.14-12, வெண்டை ரூ.40/35, கொத்தவரை ரூ.20, சுரை ரூ.10-08, புடலை ரூ.28/25, பாகல் ரூ.35/30, பீர்க்கை ரூ.35, பூசணி ரூ.14-08, மிளகாய் ரூ.38/36, அவரை ரூ.60/45, உருளை ரூ.28, கருணை ரூ.78, சேனை ரூ.55, உள்ளி ரூ.40-35, பல்லாரி ரூ.28, பீட்ரூட் ரூ.20, நூல்கோல் ரூ.22/20, பீன்ஸ் ரூ.60, கோஸ் ரூ.15, கேரட் ரூ.34-20, சவ்சவ் ரூ.24 க்கு விற்கப்படுகிறது.

News April 10, 2025

தேனி: மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

image

பூதிப்புரம் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் ராமராஜ் (37), இவரது மனைவி நிவேதா(27), இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கணவர் ராமராஜ் மனைவியை வேறு ஒரு நபர் மூலம் தவறாக பேசக் கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து கணவரிடம் கேட்ட நிவேதாவை ராமராஜ், மாமியார் நாகரத்தினம், நாத்தனார் அமுதா அவரின் கணவர் கர்ணன் ஆகிய நால்வர் நிவேதாவை தாக்கியுள்ளனர். இது குறித்து நிவேதா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

News April 10, 2025

இலவம் பஞ்சு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு

image

கடமலை – மயிலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இலவம் பஞ்சு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு தற்போது அறுவடை காலமாக உள்ளதால், இலவம் பஞ்சு விளைவிக்கும் விவசாயிகள், தங்களது விளைபொருளை அறுவடை செய்து விற்பனை செய்யும் சமயங்களில் உரிய விலை கிடைக்காத பட்சத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையைச் சார்ந்த உள்ளிட்ட அலுவலகங்களில் இருப்பு வைக்கலாம் என்றார்.

error: Content is protected !!