India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நவம்பர் 17ஆம் தேதி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது” என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரல் இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளதால் மாணவர்கள் பங்கேற்று பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.
தேக்கடியில் ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை வழிபாட்டுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் முன்னேற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (நவ.12) தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவினா, இடுக்கி மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி அருகே அழகாபுரியைச்சேர்ந்த கண்ணன் என்ற குப்புசாமி(47). கடந்த 2021ஆம் ஆண்டு செப்.6ஆம் தேதியன்று தேனி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் இறுதி முடிவில் இன்று(நவ.12) நீதிபதி கணேசன் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.45000 அபராதம் வழங்கி தீர்ப்பு அளித்தார்.
ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் சங்கராச்சாரியர் மகா சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் பொன் விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இதை முன்னிட்டு, சென்னை ஸ்ரீ வித்யாதீர்த்த அறக்கட்டளை சார்பில், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் மரபுரிமையை ஊக்குவிப்பதில் சிறந்த பங்களித்தமைக்காக முன்னாள் முதல்வர் O.பன்னீர் செல்வத்திற்கு வித்யா பாரதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
தேனி பங்களா மேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ், இன்பவள்ளி தம்பதியினரின் மகன் முத்து(35). இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் முடிந்து ரீனா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் கடந்த(நவ.10)ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் இருந்த போது முத்து வீர மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போடி அருகே முந்தல் சேர்ந்தவர் முத்து, இவருக்கும் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக போடி விரிவாக்க அலுவலர் பூபதி போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து காவல்துறை சிறுமியை திருமணம் செய்த முத்து, இவரது தாய் பொன்னாத்தா, உறவினர்கள் மாரியம்மாள், முத்தையா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு தொழில் துவங்க அரசு ரூ.1 லட்சத்தை ஊக்கத்தொகையாக வேளாண்துறை வழங்குகிறது. இந்தாண்டு போடி, பெரியகுளம், தேனி வேளாண் இயக்குனர் வட்டாரங்களுக்கு இத்திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற வேளாண், தோட்டக்கலை, பொறியியல் வேளாண் பட்டம் பெற்றவர்களுடன், கலை அறிவியல் பட்டம் பெற்றவர்களும் தற்போது விண்ணப்பித்து பயன்பெறலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பூர்வீக பாசன நிலங்களுக்காக நேற்று முன் தினம் வினாடிக்கு 3000 கனஅடி வீதம் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று(நவ.11) முதல் வினாடிக்கு 3082 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி – சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேற்றப்படுகிறது.
போடியில் போதைக்கு அடிமை ஆகி தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் 7 பேரை போலீசார் நேற்று(நவ.11) கைது செய்தனர். தேனி மாவட்டம் போடியில் கடந்த இரண்டு நாட்களாக இரண்டு மிதிவண்டிகள், இரும்பு கதவுகள், நடந்து சென்றவரிடம் ஐந்து கைபேசியை பறித்து சென்று தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சுதர்சன், சேக்பரீத், விக்னேஷ், சுந்தரேசன், சிவலிங்கம், பாலமுத்துமணி, விஷால் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்று (11.11.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.