India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆகஸ்ட்.7ம் தேதி நாடு முழுவதும் தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கைத்தறித்துறையின் சார்பில், தேனி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிகிழமை சிறப்பு கைத்தறி கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைக்க உள்ளார்கள். இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது. இதில் கைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட ரகங்கள் அரசு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் தேனி உழவர் பயிற்சி மையத்தில் நாளை ஆகஸ்ட்.7(வியாழன்) கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தேனி மதுரை ரோட்டில் உள்ள வேளாண்பொறியியல் துறை அலுவலகத்திற்கு எதிரே உள்ள உழவர் பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு 98650 16174 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் கிரையத் தொகையினை IOB மூலம் குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்படவுள்ளது. தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் <
தேனி மாவட்டத்தில் 2025-2026ம் ஆண்டு குறுவை பருவ நெற் பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டிற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பருவ அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின், பட்டா/சிட்டா நகல் ஆகியவற்றை www.pmfby.gov.in என்ற இணையதள மூலமாகவும் விவசாயிகள் நேரடியாக காப்பீடு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கூட்டம், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஜெயசுதா தலைமையில், ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் நடைபெற்றது. அந்தந்த பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டத்தினை 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தி குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய என்று வேண்டும் முடிவெடுக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இன்று (5.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவை உள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது பெய்துவரும் கனமழையால், வைகை அணை நீர்மட்டம் 69 கனஅடியை எட்டியதால், வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் இயல்பை விட 78 மி.மீ அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
தேனி மக்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணிபுரிய பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 126 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப சம்பளம் – ரூ. 20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். ஆகஸ்ட் 17க்குள் இங்கே <
தேனி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Sorry, no posts matched your criteria.