India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இம்மானியத்தினை பெற தகுதியான பெண்கள் https://theni.nic.in என்ற இணையதளம் மூலம் டிச.7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 41 விற்பனையாளர் மற்றும் 08 கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற தகுதியானவர்கள் https://drbtheni.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546-291 929 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்துள்ளார். *பகிரவும்*
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு, பெரியகுளம், தேனி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் ராபி சிறப்பு பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய நவ.15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைசி தேதி நவ.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் சுதந்திர வீதி தெருவை சேர்ந்த நாகேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று(நவ.18) இரவு பிரிட்ஜ் திடீரென வெடித்தது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் தீயில் கருகி நாசமாயின. இத்தகவல் அறிந்த பெரியகுளம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
கடமலைக்குண்டு ஒன்றியத்தில் அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என கலெக்டர் சஜீவனா தெரிவித்துள்ளார்.மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தலைமை வகித்தார். யானைகள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.அப்போது அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.
பெரியகுளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் ஊர் நல அலுவலரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 18 வயது பூர்த்தியடையாத நிலையில் தனக்கு 2022-ல் தனக்கு திருமணம் செய்து வைத்து தற்பொழுது 8 மாத குழந்தை உள்ளதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சிறுமியை திருமணம் செய்த கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று(நவ.17) போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை
தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் செந்தில் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(33). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆன்லைன் விளையாட்டுக்கு வெளி நபர்களிடம் அதிகமாக கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்த பிரபாகரன் நேற்று(நவ.17) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தி விட்டு கேரள அரசு பஸ்களில் சென்று தரிசனம் முடித்து நிலக்கல்லுக்கு தாங்கள் நிறுத்தப்பட்ட வாகனத்தை தேடி வருவார்கள். இதனால் கூடுதல் கட்டணத்தில் வாகனங்களை பிடித்து செல்வது வழக்கம். இந்நிலையில், அப்படி செல்லும் பக்தர்களுக்கு ரூ.10 கட்டணத்தில் மினி பஸ் இயக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று (17.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.