India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்த்தி மாதாந்திர உதவித்தொகை வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றார்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு 5 நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். பெரிய பாதை வழியாக நடைபயணமாக 28 ஆயிரத்து 300 பேர் சபரிமலையில் தரிசனம் செய்து உள்ளனர். புல்மேடு வழியாக 106 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.
தேனியில் தொடர் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூர்த்தி, அம்சராஜை காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருடியதை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 88 பவுன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பல பகுதிகளில் வீடுகளில் கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பங்களா, ஒரு நூற்பாலையை விலைக்கு வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது; கோவை சிறையில் இருவருரையும் அடைத்தனர்
பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.20) காலை 9 மணி முதல் நாளை (நவ.21) காலை 9 மணி வரை உங்களுடன் உங்கள் ஊரில் முகாம் நடைபெறவுள்ளது. இதில் மருத்துவமனைகள், அலுவலகங்களில் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இன்று மாலை 4:30 மணி முதல் 6 வரை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் சாலையில் சபரிமலை சென்று திரும்பிய நேற்று(நவ.19) வடமாநில ஐயப்ப பக்தர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் பிரசன்னா, ராஜா, குமார், உள்பட ஐந்து பேரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், வறுமை கோட்டிற்குள்ள பெண்கள் ஆகியோருக்கு நல வாரியத்தின் மூலம் பயனாளி ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இவர்கள் நடமாடும் உணவகங்கள், சிற்றுண்டிகடைகள், சலவைக்கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு பெற இயலும். விண்ணப்பிக்க டிச.7ஆம் தேதி என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த 9 நாட்களாக வைகை பூர்வீக பாசனப் பகுதிகளான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. இன்று (நவ.20) பூர்வீக பாசன பகுதி – 2 மதுரை மாவட்டத்திற்கு தண்ணீர் காலை 11 மணி முதல் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இணையதள முகப்பில் இந்தி மொழி உள்ளதால் அதனை உடனடியாக ஆங்கில மொழிக்கு மாற்றவும், தமிழ் இணையதளத்தை உருவாக்கவும் மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான O.பன்னீர் செல்வம் இன்று (நவ.19) கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் நவ.23 (சனி), நவ.24 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்திலுள்ள 563 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெற உள்ள இரண்டாவது சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்று படிவங்களை பூர்த்தி செய்து, மைய அலுவலர் (DLO) / வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.
Sorry, no posts matched your criteria.