Theni

News May 7, 2025

தேனியில் இளைஞர் மர்ம மரணம்

image

கம்பம் பாரதியார் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் கெளதம் . இவரது வீட்டில் பேச்சு மூச்சு இன்றி மயங்கிய நிலையில் இருந்து உள்ளார். இவரை மீட்ட உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் கெளதம் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்வு அறைக்கு அனுப்பி வைத்து, கம்பம் தெற்கு போலீஸார் கெளதம் இறப்பு சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர்.

News May 7, 2025

தேனி : செல்வம் செழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சயதிருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News May 7, 2025

தேனியில் 3 இடங்களில் தபால்துறை பேக்கேஜிங் மையம்

image

தேனி மாவட்டத்தில் தேனி, சின்னமணூர், கம்பம் உள்ளிட்ட மூன்று தபால் நிலையங்களில் தற்போது பார்சல் பேக்கேஜிங் மையம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வெவ்வேறு அளவுகளில் வணிகர்களின் தேவைக்கு ஏற்ப பார்சல் பெட்டிகள் கிடைக்கும் எனவும். இங்கு பொது மக்கள், வணிகர்கள் பார்சல் செய்வதற்கான பெட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி பார்சல் செய்து அனுப்பி பயன் பெறலாம் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

தேனி மாவட்ட கல்வி அலுவலர்கள் எண்கள்

image

முதன்மை கல்வி அலுவலர், தேனி -4546290244
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் -தேனி 4546290244
மாவட்ட கல்வி அலுவலர்:
(தொடக்க கல்வி) -தேனி -4546266073
(தனியார் பள்ளி), தேனி -4546260130
(மேல்நிலை கல்வி) தேனி -4546232832
மாவட்ட கல்வி அலுவலர், தேனி – 4546260130
மாவட்ட கல்வி அலுவலா், உத்தமபாளையம் -4546266073
மாவட்ட கல்வி அலுவலா், பொியகுளம் -4546232832 *ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

image

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Helper(பெண்), Night Watchman(ஆண்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 2 காலிபணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நாள் 30-04-2025 முதல் 07-05-2025 வரை. தகுதியான நபர்களுக்கு Rs.4,500 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு விண்ணபிக்க 8ம் வகுப்பு தேர்ச்சியும் 42வயது மிகாமல் இருத்தல் அவசியம். <>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

பெங்களூரு வியாபாரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

பெங்களூரைச் சோ்ந்த கண்ணாடி, அலங்காரப் பொருள்கள் வியாபாரியான திலீப் என்பவரை காரில் கடத்தி அடித்து கொலை செய்து உடலை புதைத்த வழக்கில் தேனி காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் திலீப்பை காரில் கடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன்(30) என்பவரை போலீசார் நேற்று(ஏப்.29) கைது செய்தனர்.

News April 29, 2025

தேனி : முதிர்வு தொகை பெற அரிய வாய்ப்பு

image

தேனி மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகை பெறுவதற்கு தகுதியான கண்டறிய இயலாத 589 பயனாளிகளின் பெயர்ப்பட்டியல் https://theni.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களது உரிய ஆவணங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்து பயன் பெறலாம்.

News April 29, 2025

தேனி பெண்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

தேனி மாவட்ட பெண்களே பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதன்படி
▶️ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04546-244431.
▶️தேனி – 0456-254090.
▶️ உத்தமபாளையம் -0456-268230.
▶️ போடி – 0456 – 285700.
இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் SHARE செய்து சேவ் பண்ண சொல்லுங்க.

News April 29, 2025

தேனி: மே.1 டாஸ்மாக் கடைகள் மூடல் – கலெக்டர் உத்தரவு

image

மே தினத்தன்று (மே.01) தேதி தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் எப்.எல்.1 மற்றும் பார்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.4ஏ உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியன கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்து உள்ளார்.

News April 29, 2025

தேனியில் இளைஞர் அடித்துக் கொலை

image

பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி நகைகளை விற்பனை செய்து மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர் என தவறாக நினைத்து தேனியை சேர்ந்த முகேஷ்பாண்டி, ஆகாஷ், முத்துப்பாண்டி, இளையராஜா, முருகன், சதீஷ்குமார், செளமியன் ஆகியோர் தாக்கி உள்ளனர். இதில் திலீப் உயிரிழந்த நிலையில் இது குறித்த புகாரில் தேனி காவல் துறையினர் 7 பேரையும் நேற்று (ஏப்.28) கைது செய்தனர்.

error: Content is protected !!