Theni

News November 24, 2024

ஐயப்ப பக்தர்களுக்கு தேனி ஆட்சியர் வேண்டுகோள்

image

தேனி மாவட்டம், குமுளி மலைப்பாதை வழியாக பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வப்போது மலை சாலையில் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லக்கூடிய பக்தர்கள் குமுளி மலைப்பாதையில் இரவு பயணத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News November 24, 2024

சபரிமலை வழித்தடத்தில் மூடுபனி வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

image

சபரிமலைக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலை வழியாக ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பக்தர்கள் சென்று வருகின்றனர். தற்போது ஏற்பட்டு வரும் மூடுபனி மலைப்பகுதியில் வாகனங்களை இயக்குவதில் அனுபவம் இல்லாதவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. ஆகவே அனுபவம் உள்ள வாகன ஓட்டுநர்கள் மூலம் தங்களின் சபரிமலை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது

News November 24, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று(நவ.23) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 23, 2024

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட தேனி எம்.பி

image

கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார்.  சாக்கடை பணியை விரைந்து முடிக்கவும் ஊராட்சி நலன் சார்ந்த கட்டுமான பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தபால் அலுவலகம் ஒதுக்க இடம் தரப்படும் என உறுதியளித்தார்.

News November 23, 2024

தேனியில் இன்னும் சற்று நேரத்தில்

image

தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

News November 23, 2024

தேனி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பு மற்றும் விற்பனை அங்காடி மையம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். பொதுப்பிரிவினருக்கு 40% மானியமும், ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு 60% மானியமும் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளோர் வைகை அணை மீன்வளம் துறை அலுவலகத்தை நாடலாம் என தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

தேனி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று (22.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 22, 2024

ஆட்சியரை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாணவர்கள்

image

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற 65 ஆவது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு  தேனி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில், வெற்றிப்பெற்ற அனைவரும் இன்று (22.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா-வை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்

News November 22, 2024

வாழ்த்துக்கள் தெரிவித்த தேனி முன்னாள் எம்.பி

image

மாலத்தீவில் நடைபெற்ற உலகம் முழுவதும் மிகவும் பரவலாக அறியப்பட்ட 15-வது உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மணி பெற்றுள்ளார். இதையத்துது, அவருக்கு தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தேனி முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

தேனி மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

image

வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு அமைத்து நேரடி ஆய்வுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மணிபாரதி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட், “மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள், தமிழக பொதும்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை , தேனி , திண்டுக்கல், விருதுநகர் , ராமநாதபுரம் ஆட்சியர்கள் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!