Theni

News November 26, 2024

வீரபாண்டி அருகே பெண் மர்ம சாவு

image

தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்தவர் சுருளி (60). இவரது மனைவி வனஜா (55).‌ நேற்று (நவ.25) வனஜா அவரது வீட்டில் உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்ததை பார்த்து அருகில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் வனஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2024

புதிய வகை வைரஸ் காய்ச்சல்-சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல்

image

தேனி மாவட்டத்தில் தற்போது H3N2 என்ற புதிய வைரஸ் குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைவரையும் பாதிப்படைய செய்கின்றது. இவ் வகை காய்ச்சலால் பயப்பட தேவையில்லை. இருந்த போதிலும் தொண்டை, உடல் வலி, தொடர் இருமல், குமட்டல், வாந்தி, அதீத சோர்வு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளுடன் காய்ச்சல் தொடர்ந்தால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

News November 26, 2024

மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களது செல்ஃபோன் வாட்ஸ்ஆப்பில் வரும் லிங்கை அழுத்தி வரும் செயலியை பதிவிறக்கம் செய்தால் பணம் பெறலாம் என வரும் செய்திகளை நம்பி யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற புகார்களை இந்த 19230 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 26, 2024

ஊராட்சிமன்றத்தில் கட்டட அனுமதியினை விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் சுய சான்று மூலம் கட்டட அனுமதி பெற கிராம ஊராட்சிமன்ற அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்து உள்ளார்.2500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில் 3500 சதுர அடி வரையிலான கட்டிட பரப்பில், தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டிட வரைபட அனுமதி வழங்கப்பட உள்ளது என ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

குறைதீர் முகாமில் பெறப்பட்ட 290 மனுக்கள்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் இன்று(நவ.25) மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக 290 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினர் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்

News November 25, 2024

நவ.27 அன்று குழந்தைகளுக்கு இலவச தங்கமோதிரம்

image

தேனி: நவ.27ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என இன்று(நவ.25) தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 25, 2024

சீனா பழம் தேனியில் விற்பனை

image

போடியில் மருத்துவ குணம் நிறைந்த அரிய வகையான பெர்சிமன் பழங்கள் சீசன் துவங்கி உள்ள நிலையில் கிலோ ரூ.300க்கு விற்பனையாகிறது. இதன் காய் பச்சையாகவும், பழமாக மாறியவுடன் ஆரஞ்சு நிறத்தில் மாறிவிடும். புளிப்பு, இனிப்பு சதை பிடிப்புடன் இருக்கும். வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து விற்பனை செய்கின்றனர்.

News November 25, 2024

தேனி விபத்தில் மளமளவென பற்றி எரிந்த லாரி ஒருவர் பலி

image

தேனி கோட்டூரைச் சேர்ந்தவர் பிரவீன். இவரை காண தம்பி மதன்குமார் ராணுவ வீரர் சென்றார். வேலை முடிந்து இருவரும் தனிதனி டூவீலர்களில் பெரியகுளத்திலிருந்து கோட்டூர் நோக்கி சென்றனர். அப்போது திண்டுக்கல்-குமுளி ரோட்டில் அடுத்தடுத்து டூவீலர்கள் மோதியதில் நின்ற மினி லாரி மீது மோதியது. இதில் பிரவீன் சம்பவ இடத்திலே பலியானர். மதன்குமார் படுகாயமடைந்தார். டூ வீலர் மினிலாரியில் சிக்கியதால் தீப்பிடித்து எரிந்தது.

News November 24, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் 

image

தேனி மாவட்டத்தில் இன்று (24.11.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 24, 2024

தேனியில் தம்பதி மீது கொடூர தாக்குதல்

image

தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்தவர் மணிக்குமார்.இவரிடம் இதே பகுதியை சேர்ந்த நாட்ராயன் பணம் கடன் வாங்கியிருந்தார்.இந்த கடனைத் திருப்பி கேட்டத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த நாட்ராயன் இவரது மகன் லோகேஷ், நாகராஜ் மகன் லோகேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து மணிக்குமார், மனைவி சந்திரகலா ஆகியோரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!