India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது பள்ளிக்கல்வித்துறை சார்பாக உயர் கல்வி சேர்வதற்காக மாணவர்களுக்கு 62,000 காசோலையை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மாணவர்களுக்கு வழங்கினார். இதில், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் Assistant பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு ரூ.22405 – ரூ.62265 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணபிக்க கடைசி தேதி – 17.08.2025. மேலும் விவரங்களுக்கு <
போடியை சேர்ந்தவர் சீனியம்மாள் (60). இவர் மகளிர் குழு தலைவியாக இருந்து வரும் நிலையில் இவரது குழுவில் 60 பெண்களுக்கு லோன் வாங்கி கொடுத்துள்ளார். அவற்றில் சிலர் லோன் கட்டாததால் இவர் கடன் வாங்கி அதனை செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடன் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த சீனியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.
தேனியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை 04546-254368 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.
தேனிவாசிகளே! ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை சென்று தரிசித்தால் மனதில் அமைதி பெருகி இன்பம் வழிபிறக்கும். இதற்காகும் பண செலவை நினைத்தாலே நம் தலையே சுத்தும். இதற்காகவே இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணம் அழைத்து செல்ல உள்ளது. ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் இந்த <
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் யார் யார்ன்னு தெரிஞ்சுக்கோங்க!
மாவட்ட ஆட்சியர் – ரஞ்ஜீத் சிங்
காவல்துறை கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா
மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலட்சுமி
மாவட்ட வன அலுவலர் – சமர்தா
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் – முத்துமாதவன்
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்க!
சின்னமனூர், வீரபாண்டி பேரூராட்சி, பெரியகுளம் வட்டாரம் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நாளை (08.08.2025) வெள்ளிக்கிழமை நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் (இருப்பு தப்புக்குண்டு சாலை, உப்பார்பட்டி) ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சீத் சிங் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
தேனி: முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்களின் சிறார்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் KSB Portal பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிக்க விண்ணப்பிக்க விரும்புவோர் www.desw.gov.in மற்றும் www.dgrindia.gov.in என்ற இணையதளத்தில் ஆக.15 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546 252185 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.