India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராயப்பன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் தேனி மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் நாளை(நவ.29) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் ஆன்லைன் பொருட்கள், உணவு டெலிவரி செய்யும் கிக் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புத்திட்ட உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தேனி வேளாண் பொறியியல் துறையில் 10லி கொள்ளளவு கொண்ட ட்ரோனை மருந்து தெளிக்க விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு டேங் மருந்தினை 0.75 ஏக்கர் பரப்பிற்கு 10 நிமிடத்திற்குள் தெளிக்க முடியும். அதாவது ஒரு மணி நேரத்தில் 8 ஏக்கருக்கு மருந்து தெளிக்க முடியும். மேலும் விபரங்களுக்கு 94431-02313 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழையின்றி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய(நவ.27) நிலவரப்படி தேக்கடியில் 8.4 மி.மீ., பெரியாறில் 10 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 190 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 608 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு 822 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (நவ.27) நடைபெற்ற துறை சார்ந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஆர்.வீ.ஷஜீவனா தலைமை வகித்தார். இதில், பேசிய அவர் மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல், உடல்வலி, சோர்வு ஏற்பட்டால் ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து தேவையான மருத்துவ உதவிகள் செய்து தர வேண்டும் என அறிவுறுத்தினார்.
வணிகப் பயன்பாட்டில் உள்ள கட்டடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ள ஜி.எஸ்.டி.கவுன்சிலின் நடவடிக்கையால் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வரி விதிப்பை ரத்து செய்ய மத்திய, மாநில அரசை வலியுறுத்தி, தேனி மாவட்டத்தில் நாளை(நவ.29) ஒருநாள் மட்டும் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இன்று(நவ.27) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் முழுவதும் 1226வாக்குச் சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, முகவரி மாற்றம், நீக்கல் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்களாக இதுவரை பதிவு செய்யாதவர்கள் நாளை (நவ.28) க்குள் புதிய வாக்காளர்களாக தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வீ.ஷஜீவனா அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் 2024 ஆண்டுக்கான தமிழக அரசு சார்பாக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெரும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள 1226 வாக்குச்சாவடிகளிலும் முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 26738 படிவங்கள் பெறப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலானது ஜன.6 அன்று வெளியிடப்படும். மேலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் 28.11.2024 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேரடியாகவும், நேரில் வர இயலாதவர்கள் voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்றார்.
தேனி மாவட்டம் 2024 ஆண்டுக்கான தமிழக அரசு சார்பாக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெரும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.