Theni

News December 20, 2024

சபரிமலை செல்ல ஒரு வழிப்பாதை அமல்

image

சபரிமலைக்கு பக்தர்கள் தேனி, கம்பம், குமுளி வழியாக செல்வது வழக்கம். குமுளி மலைப்பாதையில் நெரிசல் ஏற்படுவதால் பல ஆண்டுக்கு முன் ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டது. கோயில் செல்லும் வாகனங்கள் கம்பமெட்டு, சேத்து குழி, ஆமையாறு, புளியன் மலை, கட்டப்பனை, ஏலப்பாறை, வழியாக கோயிலிற்கு செல்வர். ஆனால் கம்பமெட்டை கடந்த பின் பல பாதைகள் இருப்பதால் எதில் செல்வது என தெரியாமல் பக்தர்கள் குழம்புகின்றனர்.

News December 20, 2024

தேனியில் இன்று எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(டிச.20) மாலை 4 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமையில் சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் அலுவலா்கள், முகவா்கள் பங்கேற்கின்றனா். இதில் பொதுமக்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 20, 2024

இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

image

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் அரசு சார்பிலும், மற்ற இடங்களில் தனியார் சார்பிலும் இ-சேவை மையங்கள் இயங்குகின்றன. இதில் சில இ-சேவை மையங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளன. அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் 1800-425-6000, 1800-425-2911 எண்களில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 20, 2024

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 5 ஆண்டு சிறை

image

பெரியகுளம் ஒன்றிய பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை 2023ம் ஆண்டு முத்துப்பாண்டி என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று(டிச.19) முத்துப்பாண்டிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News December 20, 2024

தேனியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – ஆட்சியர்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (டிச.20)  எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் தங்களது புகார்கள் குறித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என்பதால் அனைத்து நுகர்வோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் குழுக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நேற்று (டிச.19) மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 19, 2024

24 பதக்கங்களை வென்றவர்களுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

image

மலேசியாவில் நடைபெற்ற பத்தாவது ஆசிய-பசிபிக் காது கேளாதோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு வீரர், வீராங்கனைகள் வெவ்வேறு விளையாட்டுகளில் 6 தங்கம், 13 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என போடி எம்எல்ஏ ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

மாடுகளுக்கு தடுப்பூசி போட குழு அமைப்பு – கலெக்டர்

image

தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் 4 மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகள், நிறைமாத சினை இல்லாத 1,01,328 பசு இனங்களுக்கும் 722 எருமை இனங்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் மேற்கொள்ள 53 கால்நடை மருந்தகங்கள், 3 கால்நடை மருத்துவமனைகளில் உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தகவல்.

News December 19, 2024

தேனியில் தீவிர சிகிச்சை பிரிவு

image

தேனி அரசு க. விலக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.20கோடி மதிப்பில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் 50 படுக்கைகள் கொண்டவையாக இருக்கும். வருகிற 2026ல் மார்ச் மாதம் இக்கட்டடம் நிறைவு பெறும் என்று தெரிவித்தனர். இப்பணியினை E.E. பிரகாஷ்,S.D.0. காமராஜ்,A. E. விக்னேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

News December 19, 2024

சிறந்த சேவை புரிந்த பெண்கள் விருது – ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு அரசின் சமூகநலம், மகளிர் உரிமைத்துறை மூலம் மார்ச்.8ம் தேதி உலக மகளிர் தினத்தை அன்று பெண்களுக்கு முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண் ஒருவருக்கு ஒளவையார் விருதினை  முதலமைச்சர் அவருக்கு வழங்கப்படவுள்ளார்; விருதுவுடன் ரூ.1.5 லட்சம் காசோலையும் பொன்னாடை & சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதனால் தகுதி உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தகவல்.

error: Content is protected !!