India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருஷநாடு கள்ளர் பள்ளியில் தற்காலிக பணியாற்றி வரும் ஆசிரியை மகாலட்சுமி மற்றும் பாலமுருகன், நாகேந்திரக்குமார் ஆகியோர் தேனி மாவட்டத்தை சேர்ந்த 24 பேரிடம் ரூ.1.37 கோடி பெற்று கொண்டு அரசு வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்தனர். இந்த வழக்கில் பாலமுருகன், நாகேந்திரக்குமார் ஆகியோர் ஏற்கனவே குற்ற பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் மகாலட்சுமியை நேற்று (நவ.29) கைது செய்தனர்.
கம்பம் பகுதியைச்சேர்ந்த சையது அபுதாஹிர் இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல்துறையிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கின் அறிக்கையை தேனி மாவட்ட போஸ்கோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இன்று(நவ.29) இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றவாளி சையது அபுதாஹிர் 5.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு
தேனி மாவட்டம் கம்பம் முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான சுப்புராயர் மாரடைப்பால் காலமாகியுள்ளார். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சுப்புராயர், 1984 ஆம் ஆண்டும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர ஆனார்.
தேனி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் பவர் டில்லர், களையெடுக்க பயன்படும் பவர் வீடர் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதில் பவர் டில்லர் வாங்க அதிகபட்சம் ரூ.1.20 லட்சம், பவர் வீடர் வாங்க அதிகபட்சம் ரூ.63,000 வரை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்த்தை சேர்ந்தவர் ஜெயசக்கரவர்த்தி. இவர் மகன் விஷ்வா 14. கடந்த 24ம் தேதி டியூஷன் சென்று வரும்போது டூவீலரில் சென்ற இருவர், ‘உனது அம்மா, அப்பா’அழைத்து வர சொன்னார்கள் எனக்கூறி டூவீலரில் வருமாறு கடத்த முயன்றனர். சுதாரித்த விஷ்வா கையில் இருந்த கூர்மையான ஆணியால் குத்தி தப்பினார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கடந்த சில நாட்களில் இது 2வது முறை என்பது குறிப்பிடதக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று(நவ.28) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில், முதியோர் உதவித்தொகை பெற உத்தரவு வழங்கியும், பணம் கிடைக்காமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியல் போல் காத்திருக்கிறார்கள். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1200ம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தேனி பகுதியைச்சேர்ந்தவர் அஜித். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரைத்தொடர்ந்து அஜித்தை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று(நவ.28) விசாரணை முடிவடைந்து, மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி கணேஷ் குற்றவாளி அஜித்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. விருது பெறுவோருக்கு விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகின்றன. தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க 20.12.2024 கடைசி தேதி ஆகும்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வருவாய்த்துறையினர் தங்கள் கோரிக்கைகளான 3 ஆண்டுகளாக அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பவில்லை உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதனால் பொதுமக்கள் சான்றிதழ்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.