Theni

News December 4, 2024

சின்னமனூர் பகுதியில் வரத்து குறைவால் தேங்காய் விலை உயர்வு

image

தேனி மாவட்டத்தில் நெல், வாழைக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயம் அதிகளவில் செய்யப்படுகிறது. மேலும் தேங்காய் சென்னை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 4 வருடங்களாக தேங்காய் விலை குறைந்தபட்சம் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.45 முதல் ரூ.55 வரை விலை உயர்ந்துள்ளது. 

News December 4, 2024

விவசாய நிலங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்

image

வீரபாண்டியில் இருந்து தப்புக்குண்டு செல்லக்கூடிய சாலையில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள விவசாய நிலங்கள் அருகே மர்ம நபர்கள் சிலர் மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். இதனால், அப்பகுதி விவசாய நிலங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. மருத்துவக் கழிவுகளை கொட்டும் மர்ம நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News December 4, 2024

கொலை வழக்கில் நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை

image

உத்தமபாளையம் அருகே உ. அம்பாசமுத்தரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரை கடந்த 2019ம் ஆண்டு தனது தங்கையை அவதூறாக பேசியதாக கூறி பொம்மையசாமி அவரது நண்பர் செல்வக்குமார் ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(டிச.03) வழக்கின் தீர்ப்பாக 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.

News December 3, 2024

மின் கட்டணம் செலுத்த தவறியவர்கள் மின் துண்டிப்பு

image

தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், ஆண்டிபட்டி, வைகை அணை, மயிலாடும்பாறை உட்பட 15 மின் வாரிய பிரிவுகளில் கடைகள், வீடுகளுக்கு மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளனர். அவர்களின் மின் இணைப்புகள் வருகின்ற (டிச.06) வெள்ளிக்கிழமை அன்று மின் துண்டிப்பு (MASS DISCONNECTION) செய்ய போவதாக இன்று (டிச.03) பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

News December 3, 2024

ஆண்டிபட்டியில் சூதாடிய 10 பேர் கைது

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜதானி போலீசார் அம்மாபட்டி மணல் ரோடு மற்றும் தெப்பம்பட்டி ஒட்டபெருமாள் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சீட்டு கட்டை வைத்து சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த அம்மாபட்டியில் சம்ராஜ், ஒச்சாத்தேவர், முருகன், மகாராஜன், முருகன் மற்றும் தெப்பம்பட்டியில் ராஜேந்திரன், அழகுமலை, பாலமுருகன், சக்திவேல், பரமராஜ் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

News December 3, 2024

தேனியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் செல்லும் வழியில் மாரியம்மன் கோவில்பட்டி அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் விபத்தில் இறந்து கிடப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 3, 2024

தேனி நகரில் போக்குவரத்து மாற்றம்

image

தேனி நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக பள்ளி, கல்லுாரி நேரங்களில் டிப்பர் லாரி, கனரக வாகனங்கள் தேனி நகர் பகுதிக்குள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3 வரை உள்ளூரில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. விதி மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News December 2, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று(டிச.02) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 2, 2024

தேனி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நிறைவு

image

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 313 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News December 2, 2024

தேனியில் அரசு பணிக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் முதன்மை எழுத்துத் தேர்வு பிப்ரவரி 2025-ல் நடைபெற உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.10.2024 முதல் நடைபெற்று வருகிறது. எனவே, படித்த இளைஞர்கள் பயன்பெறலாம் என்று தேனி கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!