Theni

News December 12, 2024

மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று 11.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 11, 2024

கைலாசநாதர் கோவில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பு ஏற்பாடு

image

தேனி, பெரியகுளம் அருகே மலைமேல் கைலாசநாதர் உடனுறை பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் நாளை மறுநாள் 24ஆம் ஆண்டு மகா கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக முழுநேர அன்னதானம், ஆண்,பெண் தனி கழிப்பிட வசதி, சிறப்பு பேருந்துகள் வசதிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

News December 11, 2024

தவெக அலுவலகத்தை திறப்பதை நிறுத்திய காவல்துறை

image

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர கழக சார்பில் தமிழக வெற்றிக்காக கட்சி அலுவலகம் இன்று மாவட்ட தலைவர் லெப்ட் பாண்டி, தலைமையின் திறக்க இருந்த நிலையில் இன்று சின்னமனூர் காவல்துறையினர் கட்சி அலுவலகத்தைதிறக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். காவல் துறையினர் தங்களிடம் அனுமதி வழங்கவில்லை என்று காவல் துறையினர் கூறினர் இதனால் அப்பகுதியில் பரபரபு எற்பட்டது.

News December 11, 2024

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

image

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சந்தானலட்சுமிக்கும் சுரேஷ் என்பவருக்கும் தகாத உறவு இருந்த நிலையில் அதைராமன் கண்டித்துள்ளார். இதன் காரணமாக சுரேஷ், சந்தானலட்சுமி, செல்லத்துரை, பாண்டி ஆகியோர் சேர்ந்து ராமனை கொலை செய்தனர். இந்த வழக்கு பெரியகுளம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பாக நேற்று (டிச.10) 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News December 11, 2024

பாலியல் வழக்கு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை 

image

தேனி அருகே  குன்னூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளைத்துறை என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றம் சாட்டப்பட்டுள்ள வெள்ளைத் துறைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News December 10, 2024

கொலை செய்ய முயன்ற குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

image

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சின்னன் என்பவரை அறிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் போலீசாரால் முத்தையா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவ் வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பாக குற்றவாளி முத்தையாவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்துள்ளார்.

News December 10, 2024

கஞ்சா வழக்கில் பெண்கள் இருவருக்கு 10 ஆண்டு சிறை

image

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி போலீசார் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் 25.390 கிலோ கஞ்சாவுடன் மஞ்சுளா, விமலா ஆகிய இரு பெண்களை கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை மதுரை மாவட்ட EC மற்றும் NDPS சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக இன்று குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,00,000 அபராதம் விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார்.

News December 10, 2024

ரயில் வழித்தட பொதுமக்களுக்கு எச்சரிக்கை

image

மதுரை – போடி ரயில் வழித்தடத்தில் நாளை (டிச.11) வழக்கமான தண்டவாள உறுதி தன்மை ஆய்வு ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. எனவே மதுரை – போடி ரயில் வழித்தடத்தில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மாலை 5 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு போடி வரும் ரயில் மீண்டும் 06:30-க்கு புறப்பட்டு 08:15 க்கு மதுரை செல்லும் என ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2024

இரு மாநில எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

image

தேனி மாவட்டம், குமுளி வழியாக கேரளா மாநிலத்திற்கு சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் அதன் வாகனங்கள் இந்த பாதை வழியாக சென்று வருகின்றன. வாகனங்களை சாலை ஓரம் நிறுத்திவிட்டு ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் குமுளி எல்லைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதனை சீர்செய்ய கூடுதல் போலீசார் அமர்த்த கோரிக்கை

News December 10, 2024

தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொதுத்தேர்வு

image

தேனி மாவட்டத்தில் தேசிய தொழிற் சான்றிதழ்(NTC)/தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ்(NAC) பெற்ற பயிற்சியாளர்கள் பத்தாம் வகுப்பு/மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 17.12.2024 அன்று வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்க சேவை மையங்களில் பதியலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!