India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் தங்கியிருந்தபோது 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 4 பேர் மீது வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகததால் மதுரை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் அடிப்பைடையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு நிதி திட்டத்தில் பெறப்பட்ட ரூ.15.75 லட்சத்தை பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு வழங்கி உதவி செய்திட கலெக்டர் ஷஜீவனா அறிவுறுத்தினார். அதன்படி மாவட்டத்தில் தாய், தந்தை இதில் யாராவது ஒருவரை இழந்த குழந்தைக்கு ரூ.5,000 என 195 பேருக்கும், இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.10,000 வீதம் 60 பேருக்கும் என 255 குழந்தைகளுக்கு ரூ.15.75 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
தேனி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.18) நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிப்பட்டி, முத்துத்தேவன்பட்டி, பூதிப்புரம், அரண்மனைபுதூர் பெரியகுளம், ஆண்டிபட்டி, பொம்மிநாயக்கன்பட்டி,சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இன்று 16.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட அளவிலான அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டிகள் வருகின்ற 21ஆம் தேதி தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் டிச.18ஆம் தேதி மாலை வரை முதன்மை கல்வி அலுவலக ceothn@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று (டிச.16) தெரிவித்துள்ளார்.
சைபர் கிரைம் குற்றவாளிகளால் தற்போது வாட்ஸ்ஆப் செயலியில் KYC Update செய்ய இது போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என வரும் செய்திகளை நம்ப வேண்டாம். பதிவிறக்கம் செய்தால் உடனே உங்கள் செல்போன் ஹேக் செய்யப்படும். ‘Don’t Install This APP. இதனை தவிர்க்க சைபர் குற்ற உதவி எண் 1930 அழைக்கலாம் என தேனி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று(டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களது செல்போன்களில் ஷேர் மார்கெட்டில் பணம் போட்டால் இரண்டு மடங்கு லாபம் என்று செயலிகளில் வரும் போலி லிங்குகள் மற்றும் போலி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம். மேலும் நம்பிக்கையாக பேசி பணம் பறிக்கும் முயற்சியில் ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று(டிச.15) தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட முன்னாள் படைவீரர்கள், தற்போது பணிபுரிவோர், அவர்கள் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை (டிச.16) தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் அடையாள அட்டை நகலுடன் குறைகள் குறித்த மனுவினை இரண்டு நகல்களாக நேரில் வழங்கி தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரிசாமி இன்று காலை 10 மணி அளவில் வைகை அணை நீர்வரத்து குறித்து ஆய்வு செய்து தொடர்ந்தார் காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.கண்காணிப்பு அலுவலர்,கலெக்டர், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.