India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உள் இருப்பவர் சீர் மரபினர் நல வாரியத்தில் நல திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் எண்டபுளி புதுப்பட்டி சமுதாய கூடத்தில் நாளை 20.12.2024 நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். தேவையுள்ளவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களில் இணைப்பதிவாளர் ஆரோக்கியகுமார் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களின் டாம்கோ, டாப்செட்கோ,தாட்கோ மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த கடன்கள் வழங்க கூட்டுறவு நிறுவனங்களின் சிறப்பு முகாம் இன்று(டிச.19) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் என்றார்.
கூடலுார் புறவழிச்சாலை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று(டிச.18) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கம்பத்திலிருந்து குமுளி நோக்கிச் சென்ற காரை சோதனை செய்தபோது அதில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் சரவணகுமார், இலக்கியா, தினேஷ்குமார், ரவிக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்று(டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்கள் செல்வதற்கு கம்பம் மெட்டு வழியாகவும் கோயிலில் இருந்து திரும்பி வருவதற்கு குமுளி சாலையினை பயன்படுத்தி பாதுகாப்புடன் செல்ல வேண்டும் நோக்கில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என இன்று(டிச.18) மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
நெல் சாகுபடியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டிற்கான போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க ரூ.150 ஐ 2025 மார்ச்-31க்குள் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என வேளாண் துறையினர் தகவல்.
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் அல்லிநகரத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் டீ மாஸ்டராக வேலை செய்தார். அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் எற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் சிறுமி வீட்டை வீட்டு வெளிறேினார். பெற்றோர் கொடுத்த புகாரில் விசாரணையில் டீ மாஸ்டர் காதலிப்பதாக கூறி கூறி கோல்கட்டா அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்க்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியினரையும் போலீசார் கைது செய்தனர் .
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (டிச.17) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி-2025 தொடர்பான தேர்தல் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய முதன்மை செயல் அலுவலர்/வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரி தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தோட்டக்கலை கல்லூரியில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பகுதியில் உள்ள நிறைகுறைகளை மனுக்கள் மூலமாக கொடுத்து தீர்வு காண வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று (டிச.17) தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று (டிச.17) சந்தித்தார். அப்போது தேனி மாவட்ட மக்களின் நூற்றாண்டு கால கனவான திண்டுக்கல் – சபரிமலை இடையிலான நேரடி ரயில் பாதை அமைக்கவும், முதற்கட்டமாக கொடைரோடு – தேனி இடையே ரயில் பாதை அமைக்கவும் கோரிக்கை மனு அளித்தார்.
Sorry, no posts matched your criteria.