Theni

News December 22, 2024

நகை செய்து தருவதாக ரூ.74.75 லட்சம் மோசடி

image

ஆண்டிபட்டி, ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் சுந்தர். இவரிடம் அறிமுகமான வீரன் என்பவர் தனக்கு தெரிந்தவரிடம் தங்க பிஸ்கட் இருப்பதாகவும் அதனை வாங்கி புதிய மாடலில் நகை செய்து தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய சுந்தர் ரூ.74.75 லட்சத்தை பல தவணைகளில் 5 பேரிடம் வழங்கிய நிலையில் அவர்கள் ஏமாற்றினர். இதுகுறித்த புகாரில் குற்றப்பிரிவு போலீசார் ரேவதி, பூமிகா, வீரன் உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று (டிச.21) வழக்கு பதிவு

News December 21, 2024

தேனி: மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று 21.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 21, 2024

சட்ட ஒழுங்கை நிலை நாட்ட முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

image

சென்னை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கை சீரழித்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசுக்கு கடும் கண்டனம் என போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (டிச.21) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கையை முதலமைச்சர் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

News December 21, 2024

2ஆம் திருமணம் செய்த மனைவிக்கு அரிவாள் வெட்டு

image

ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் கவுரி. இவருக்கும் வருசநாட்டைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். பின்னர் கவுரி 2ஆம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று மாலை தேனி க.விலக்கு மருத்துவமனைக்கு கவுரி வந்துள்ளார். அதனை பார்த்த ஈஸ்வரன் கவுரியை அரிவாளால் தாக்க முயன்றார். அதில் கவுரி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

News December 21, 2024

ரூ.72.25 லட்சம் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

கம்பம் பகுதியை சேர்ந்த பிரபு உள்ளிட்ட 5 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சந்திரசேகர், குமார், அவரது மனைவி பூமகள், உஷாராணி, கவுரிசங்கர் ஆகிய 5 பேர் ரூ.72.25 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தராமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்த புகாரில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் பூமகளை டிச.12.ல் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி போலீசார் குமார் என்பவரை நேற்று கைது செய்தனர்.

News December 21, 2024

அரசு பள்ளியில் பூ, வளையல் அணிய கட்டுப்பாடு

image

ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை ஜெயோசிலின். சில நாட்களாக மாணவிகள் வளையல், பொட்டு, பூவுடன் பள்ளிக்கு வருவதற்கு தலைமை ஆசிரியை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.இதுகுறித்து மாணவிகள் சிலர் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் சிலர் நேற்று மதியம் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது.

News December 20, 2024

தேனி: மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம் 

image

தேனி மாவட்டத்தில் இன்று (டிச.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 20, 2024

மக்காச்சோள பயிருக்கு காப்பீடு – கலெக்டர் தகவல்

image

தேனி மாவட்டத்தில் மக்காச்சோள பயிருக்கு தெரிவு செய்யப்பட்ட குறு வட்டங்களில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.29,000 ஆகும். இத்திட்டத்தில் ஒரு ஏக்கருக்கான பிரீமியத் தொகை ரூ.435 எதிர் வரும் 30ம் தேதிக்குள் விவசாயிகள் செலுத்தி பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா இன்று (டிச.20) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தார்.

News December 20, 2024

ஜமீன்கள் காலத்து சப்த கன்னிகள் புடைப்புச் சிற்பங்கள் ஆய்வு

image

தேனி மாவட்டம் கண்டமனூர் ஜமீனுக்கு உட்பட்ட கணேசபுரம் வனப்பகுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சப்த கன்னிகள் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மலைவாழ் மக்கள் வழிபடும் தெய்வமாகவும், கணேசபுரம் சுற்றுவட்டார கிராம மக்களின் குலதெய்வமாகவும் விளங்குகின்ற சப்த கன்னிகள் புடைப்பு சிற்பங்களை தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பாக பி.எஸ்.எம். முருகன் மற்றும் குழுவினர் இன்று (டிச.20) ஆய்வு செய்தனர்.

News December 20, 2024

சபரிமலை செல்ல ஒரு வழிப்பாதை அமல்

image

சபரிமலைக்கு பக்தர்கள் தேனி, கம்பம், குமுளி வழியாக செல்வது வழக்கம். குமுளி மலைப்பாதையில் நெரிசல் ஏற்படுவதால் பல ஆண்டுக்கு முன் ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டது. கோயில் செல்லும் வாகனங்கள் கம்பமெட்டு, சேத்து குழி, ஆமையாறு, புளியன் மலை, கட்டப்பனை, ஏலப்பாறை, வழியாக கோயிலிற்கு செல்வர். ஆனால் கம்பமெட்டை கடந்த பின் பல பாதைகள் இருப்பதால் எதில் செல்வது என தெரியாமல் பக்தர்கள் குழம்புகின்றனர்.

error: Content is protected !!