Theni

News December 24, 2024

தேனி எஸ்.பி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

image

தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று (டிச.23) பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தீக்குளிக்க முயன்ற பெண் ஜெயமங்கலத்தை சேர்ந்த சரவணன் மனைவி மகாலட்சுமி எனவும், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதகாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

News December 24, 2024

தேனியில் இரிடியம் விற்பனை என ரூ. 9.5 லட்சம் மோசடி

image

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார். இவரை தேனியை சேர்ந்த குமார் என்பவர் அணுகி இரிடியம் வாங்கி விற்றால் நல்ல லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.9.5 லட்சம் ஏமாற்றி உள்ளார். இதற்கு உடந்தையாக தேனியை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் இருந்துள்ளார். இது குறித்து ஜஸ்டின் ஜெயக்குமார் அளித்த புகாரின் படி குமார், ராஜேஷ் ஆகியோர் மீது நேற்று (டிச.23) போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News December 23, 2024

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் 

image

தேனி மாவட்டத்தில் இன்று (டிச.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 23, 2024

மருத்துவ கழிவுகள் கொட்டினால்.. தேனி ஆட்சியர் எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் அண்டை மாநிலங்களிலிருந்து சட்ட விரோதமாக கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் அபாயகரமான கழிவுகளை திறந்தவெளியில் கொட்ட கூடாது. மேற்படி கொட்டினால் அவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று (டிச.23) தெரிவித்துள்ளார்.

News December 23, 2024

தேனி மாவட்டத்தில் இளநீர் கூடுகளை கொட்டும் கேரளா

image

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதியிலிருந்து இளநீர் கூடு கழிவுகளை லாரியில் கொண்டு வந்து தேனி மாவட்டம் குமுளி அருகே கொட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நேற்று நெல்லை பகுதியில் இருந்து டன் கணக்கில் மருத்துவ கழிவுகளை அள்ளி சென்று கேரளா அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

News December 23, 2024

பித்தளை சொம்பை இரிடியம் என கூறி விற்ற இருவருக்கு வலை வீச்சு

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சதுரங்க வேட்டை பட பாணியில் ரூபாய் ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு இரிடியம் எனக் கூறி பித்தளை சொம்பை வண்ணம் பூசி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது பாதிக்கப்பட்ட நபர்கள் கானா விளக்கு காவல் நிலையத்தில் இன்று (டிச.23) புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் 2 பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

News December 22, 2024

 இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

தேனி மாவட்டத்தில் இன்று 22.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இரவில் காவலர்கள் உதவி தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News December 22, 2024

 பரிந்துரையின்றி கருத்தடை மருந்து விற்றால் நடவடிக்கை

image

இந்தியாவில் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளும் 10 பெண்கள் தினமும் இறக்கின்றனர். எனவே தேனி மாவட்டத்தில் கருத்தடை மருந்துகளை, கருத்தடை செய்வதற்கான தகுதி பெற்ற டாக்டர்களின் உரிய பரிந்துரை சீட்டு இல்லாமல் கருத்தடை மருந்துகளை விற்பனை செய்ய கூடாது. மீறி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

News December 22, 2024

போடி மேட்டு சாலையில் செல்ல கட்டுப்பாடு

image

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து 20 கி.மீ தூரம் செல்லும் போடி மெட்டு மலைச்சாலையில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இச்சாலையில் மழை காலங்கள் இல்லாத போதும் அடிக்கடி மண் மற்றும் பாறைகள் சரிவுகள் ஏற்படுகின்றன. இதனால் அபாயகரமான பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் நடைபயிற்சி, இருசக்கர வாகனத்தில் பயணிப்பதும் உட்பட பல கட்டுப்பாடுகள் வனத்துறை விதித்துள்ளது.

News December 22, 2024

தகராறில் முதியவரை வெட்டியவர் கைது

image

வீரபாண்டியை சோ்ந்தவா் சுப்புராஜ் (60). இவரது மகன் பூவேந்திரராஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. இதன் காரணமாக பூவேந்திரராஜாவின் தந்தை சுப்புராஜுடன் கணேசன், வாக்குவாதம் செய்து அவரை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீரபாண்டி போலீசார் கணேசனை நேற்று (டிச.21) கைது செய்தனர்.

error: Content is protected !!