India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஒரு பாதுகாப்பு அலுவலர் மற்றும் 2 சமூக பணியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த பல்துறை வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என்றார்
தேனி மாவட்டத்தில் இன்று 19.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனியிலிருந்து சென்னை செல்ல அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் மூலம் இன்று (ஜன.19) கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணிக்க இருக்கை வசதி, சாயும் இருக்கை வசதி, படுக்கை வசதி, ஏ.சி., வசதி கொண்ட அரசு பஸ்களில் பயணிக்க www.tnstc.in என்ற இணைய முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பஸ் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.442 முதல் அதிகபட்சம் ரூ.750 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று 18.01.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
முதல்வரின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தில் (CM ARISE) மொத்த மதிப்புத் தொகையில் 35 சதவீதம், அல்லது ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்., விவரங்களுக்கு 04546 – 260995 அழைக்கலாம்.
ஆண்டிபட்டியை சேர்ந்த சுந்தா் என்பவரிடம் ரேவதி, இவரது மகள் பூமிகா, வீரன், வெற்றிவேல் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய 5 பேர் சேர்ந்து 125 பவுன் தங்க நகைகள் செய்து தருவதாகக் கூறி ரூ.74.75 லட்சம் பெற்றுக்கொண்டு நகைகள் செய்து தராமல் மோசடி செய்தனர். இதுகுறித்து 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று (ஜன.17) ரேவதி, வீரன் ஆகிய இருவரையும் கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை 3வது மாநில மாநாடு (ஜன.18) நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்காக தேனி மாவட்ட சட்டத்துறை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செல்லும் பேருந்தினை இன்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, தேனி வடக்கு திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போடியில் அமமுகவின் போடி நகர் செயலாளர் SVS ஞானவேல் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புதிதாக தங்களை அமமுக கட்சியில் இணைத்துக் கொண்டனர். உடன் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், போடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பேச்சாளர் Aபோத்திராஜ் மற்றும் நகர நிர்வாகிகள், சார்பணி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேனி அன்னஞ்சியை சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர் நேற்று (ஜன.16) ரஞ்சித்குமார் என்பவரை அழைத்துக் கொண்டு தேனி பெரியகுளம் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது எதிர் திசையில் வந்த எல்.எஸ் மில் பஸ் பைக் மீது மோதியது. இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். ரஞ்சித்குமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி போலீசார் பஸ் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.
போடி நகராட்சி பகுதிகளில் பட்டாசு வெடிக்க நகராட்சி முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். நிபந்தனைகள் மீறும் நபர்களுக்கு ரூ.5000 நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். நிகழ்ச்சிகள் நடைபெறுவது மண்டபமாக இருந்தால் மண்டப உரிமையாளரிடமும் வீட்டில் நடைபெறுவதாக இருந்தால் விசேஷம் நடத்துபவரிடம் சேவை கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.