India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று (டிச.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்றைய (டிச.29) நிலவரப்படி முல்லை பெரியாறு அணை:128.0 அடியாகவும், வைகை அணை:64.86 அடியாகவும், சோத்துப்பாறை அணை:124.96 அடியாகவும், மஞ்சளார் அணை: 53.70 அடியாகவும், சண்முகநதி அணை:49.60 அடியாகவும் உள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து தகுந்தாற்போல் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. டூவீலரில் செல்வோர் பஸ்களை முந்த முயலும் போது சில நேரங்களில் தவறி பஸ் டயர்களில் விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக அரசின் உத்தரவின் பெயரில் தேனி மாவட்டத்தில் உள்ள 140 அரசு பேருந்துகளில் சேஃப் கார்டுகள் எனக்கூடிய தடிமனான ரப்பராலான பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று (டிச.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்றைய (டிச.28) நிலவரப்படி முல்லை பெரியாறு அணை:128.30 அடியாகவும், வைகை அணை:64.70 அடியாகவும், சோத்துப்பாறை அணை:125.29 அடியாகவும், மஞ்சளார் அணை: 53.90 அடியாகவும், சண்முகநதி அணை:49.90 அடியாகவும் உள்ளது. மேலும் அணைக்கு நீர்வரத்து தகுந்தாற்போல் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் இருந்து வத்தலகுண்டு பகுதிக்கு 10 கிலோமீட்டர் தூரத்தை குறைத்து பயணம் செய்யும் விதமாக நடுகோட்டை – ஏ.வாடிப்பட்டி இடையே உள்ள வைகை ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி திட்டத்தில் ரூ.8.50 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானப் பணிகள் முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தேனி மாவட்டத்திற்க்கு இன்று வளர்ச்சி பனிகள் மற்றும் ஆய்வுக்காக வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வேளாண் தோட்டக்கலைத் துறையினர் எட்டு வட்டாரங்களிலும் அமைச்சர் பார்வையிட பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஒரு வாரமாக இரு துறை அதிகாரிகள் இதே வேலையாக டென்ஷனில் இருந்தனர். இந்நிலையில் நேற்று அசை்சர் வருகை திடீரென ரத்தானது.இதனால் அதிகாரிகள் ரிலாக்ஸ் அடைந்துள்ளனர்
தேனி மாவட்டத்தின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மேகமலை உள்ளது. மகாராஜா மெட்டு பகுதியில் தற்போது கிருஸ்துமஸ், அரையாண்டு தேர்வு உள்ளிட்ட தொடர் விடுமுறையால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்கு காணப்படும் பசுமையான வயல் வெளிகளையும், தேயிலை தோட்டங்களையும் கண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இந்நிலையில் உலகின் மிகச்சிறந்த பொருளாதார மேதை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தேனி அருகே அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஈஸ்வரன் (72) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (டிச.25) குற்றவாளி ஈஸ்வரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
Sorry, no posts matched your criteria.