India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்கு உடல் தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடம் புகுத்துவதற்கும் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் தேனி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி ஜனவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இழஞ்செழியன் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா பெருமையைச் சேர்க்கும் விதமாக தர்பூசணியில் திருவள்ளுவரின் திருவுருவைச் செதுக்கி அதில் வள்ளுவம் போற்றுவோம் என வாசகத்தினை எழுதியுள்ளார். இந்த காய்கனி சிற்பம் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (டிச.31) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பெரியகுளத்தை சேர்ந்த சேக்முகமது என்பவர் தான் மற்றும் தனது உறவினர்களிடம் பங்கு வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி தனது அண்ணன் ஹக்கீம், அவருடைய மகன் அகமதுசபீர், மருமகள் சபியாபேகம் ஆகியோர் ரூ.2.52 கோடி மோசடி செய்ததாக தேனி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று (டிச.30) அகமதுசபீரை கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இன்று (30.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மொத்தமாக 10,382 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர். தற்போது புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தின்கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி பயிலும் 2371 மாணவியர்கள் பயன் பெற்றுள்ளதாக இன்று (டிச.30) ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தகவல் தெரிவித்தார்.
தேனியில் சிறுபாலம் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தேனியிலிருந்து கம்பம், போடிநாயக்கனூர் செல்லும் வாகனங்கள் ஒருவழிப் பாதையாக பழைய பேருந்து நிறுத்தம் வழியாக உள்ளே சென்று வெளி செல்ல வேண்டும். கம்பம் மற்றும் போடிநாயக்கனூரிலிருந்து தேனி நகருக்கு வரும் வாகனங்கள் தற்போது உள்ள வழித்தடத்திலேயே (வி.வி.ஸ்டோர் வழியாக பழைய பேருந்து நிறுத்தம் உள்ளே செல்லாமல்) நேரு சிலை வழியாக செல்ல வேண்டும்.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக ஷஜீவனா பதவி வகித்து வருகிறார். இவர் ஆட்சிப் பணியில் 13 ஆண்டுகள் பணி முடித்தததினால் அவருக்கு கூடுதல் செயலாளர் நிலையிலான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.இவர் தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பு ஏற்றதில் இருந்து பொது மக்களின் நன்மதிப்பை பெற்றவர் ஆவார்.
பசுமை குடில் அமைத்து அதில் வெள்ளரி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பசுமை குடில் அமைக்க ரூ.16 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. வெள்ளரி 90 நாள் பயிராகும்.45வது நாளில் இருந்து பறிக்கலாம். கிலோ ரூ.15 இருந்து ரூ.45 வரை கிடைக்கிறது என்று கம்பம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வருஷநாடு பகுதியை சேர்ந்த +2 படிக்கும் 17 வயது பள்ளி மாணவி தங்கள் தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது டூவீலரில் சென்ற இருவர் சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் பாண்டிசெல்வம், தெய்வேந்திரன், உள்ளிட்ட இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிந்த போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.