Theni

News April 23, 2025

தேனியில் இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பதவியில் காண 1299 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்நிலையில் தேனி மாவட்டம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நிலை வழிகாட்டு மையம் வளாகத்தில் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி காலை 10 மணி அளவில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தகவல்

News April 23, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; மாமனுக்கு 20 ஆண்டுகள் சிறை 

image

2023ம் ஆண்டு கம்பம் அருகே 45 வயது பெண் தனது 15 வயது மகளுடன் வசித்தார். சிறுமிக்கு தாய்மாமன் உறவுமுறை கொண்ட ராஜகோபால்(37), சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு 2வது திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தாயார் புகாரில் மகளிர் போலீசார் ராஜகோபாலை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.15000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது

News April 22, 2025

தேனி : தாய்க்கு மகன் கட்டிய கோவில்

image

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகந்த் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஜெயமீனா கடந்த 10 வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தனது தாயின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக சுருளி அருவியில் 85 அடி உயரத்தில் ஜெயமீனா என்ற பெயரில் கோவிலை கட்டி உள்ளார் .தாய்க்காக மகன் கட்டிய கோவிலை காண பலரும் சென்று வருகின்றனர்.

News April 22, 2025

தேனி : தென்னையில் அதிக மகசூல் பெற அரிய வாய்ப்பு

image

தமிழக அரசின் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக தேனி மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம் நடக்க உள்ளது. இதில் தென்னை சாகுபடிபற்றியும், சாகுபடி முறை, மகசூல் வழிமுறை பற்றி விளக்கம் அளிக்கப்படும். தேனியில் உள்ள மாடர்ன் மஹால் காலை 10 மணி முதல் மாலை வரை 22.04.2025 , 23.04.2025 ஆகிய 2 தினங்கள் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தை சேர்ந்த பிற விவசாயிகளுக்கும், நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News April 22, 2025

தேனியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்.25 நடைபெற உள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் PG படித்தவர்கள் வரை பங்கேற்கலாம். இந்த <>லிங்கில் <<>>தங்களது விவரங்களை பதிய வேணடும். விரும்புவோர் ஏப்.25ம் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அனுகலாம்.விவரங்களுக்கு76959 73923.தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 22, 2025

சிறுமி கர்ப்பம்: நால்வர் மீது போக்சோ வழக்கு

image

வருஷநாடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் 2023ல் திருமணம் முடிந்தது.தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விசாரணை நடத்தினார். அவர் அளித்த புகாரில் சிறுமியின கணவர், அவரது தந்தை, தாய், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வருஷநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 21, 2025

தேனி : இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 21.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

News April 21, 2025

தேனியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று‌ காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க –

News April 21, 2025

தேனி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

image

▶️போடிநாயக்கனூர் வட்டாட்சியர் 04546280124

▶️உத்தமபாளையம் வட்டாட்சியர் 04554265226

▶️ஆண்டிபட்டி வட்டாட்சியர் 04546-242234

▶️தேனி வட்டாட்சியர் 4546-255133

▶️ பொியகுளம் வட்டாட்சியர் 0454623215

உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 21, 2025

தனியார் பஸ்-வேன் மோதல்; வேன் டிரைவர் பலி

image

மதுரையில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் சென்றது. நேற்று மதியம் ஆண்டிப்பட்டி அருகே SSபுரம் சென்றபோது சிமென்ட் மூடைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் மீது பஸ் மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கி பஸ்சின் அடிப் பகுதியில் சிக்கியது.இடிபாடுகளுக்குள் சிக்கிய வேன் டிரைவர் ஆண்டிபட்டி சீனிவாசா நகரை சேர்ந்த முத்துலிங்கம் 45, சம்பவ இடத்திலேயே பலியானார்.10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!