India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வீரபாண்டி பகுதியை சோ்ந்தவா் விக்னேஷ் (25). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று (நவ.8) தனது வீட்டில் அதே பகுதியை சோ்ந்த நண்பா்களான யுவராஜா, அபிஷேக் ஆகியோருடன் சோ்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் யுவராஜா, விக்னேஷை கத்தியால் குத்தியுள்ளார். இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் வீரபாண்டி போலீசார் யுவராஜா, அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர்.

நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருது மற்றும் பரிசுத்தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் தேனி மாவட்ட விவசாயிகள் போட்டி கட்டணமாக ரூ.150 செலுத்தி மார்ச்.31.க்குள் பதிவு செய்ய வேண்டும். இது குறித்த மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். SHARE IT

சின்னமனூர் அருகே எல்லப்பட்டி பகுதியில் செல்லக்கூடிய முல்லைப் பெரியாற்றங்கரையில் நேற்று (நவ.7) முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் கம்பம் பகுதியை சேர்ந்த மாயாண்டி (75) என்பதும், இவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (34). இதனால் குடிப்பழக்கத்திற்கு சசிகுமார் அடிமையாகி உள்ளார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன் மனைவி கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றார். இந்நிலையில் மனவருத்தத்தில் இருந்து வந்த சசிகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.7) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் இங்கு <

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் பொது இடத்தில் தகராறு செய்துள்ளார். இதனை அறிந்த அவரது மகன் முத்துப்பாண்டி, பழனிச்சாமியை கண்டித்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் வேதனை அடைந்த பழனிச்சாமி வீட்டில் யாரும் இல்லாத பொழுது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு (நவ.7) செய்து விசாரணை.

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

தேனி மாவட்டத்தில் 78 காலி பணியிடங்கள் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. https://theni.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், க.விலக்கு, தேனி- 625512 என்ற முகவரிக்கு 24.11.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றார்.

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி (49). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று (நவ.7) மாலை அவர் அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பாக கோலம் போட்டுள்ளார். அப்பொழுது திடீரென மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.