Theni

News March 31, 2025

தேனி :கிணற்றில் மிதந்த பெண் சடலம்

image

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் முனியாண்டி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே உள்ள கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவரின் உடல் மிதந்தது. அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 31, 2025

தேனி: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

தேனி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

News March 31, 2025

தேனியில் வைகை அணை அருகே புதிய அணை

image

தேனி எம்.பி தங்கதமிழ்ச் செல்வன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, வைகை அணையைத் தூர்வார ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி செலவாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செலவில் தூர் வாருவதற்குப் பதில் அருகில் புதிய அணை கட்டலாம் எனவும் கூறுகின்றனர். கூடுதல் நீர்தேக்கும் வகையில் நீர் தேக்கப்பகுதிக்கு அருகில் புதிய அணை கட்ட தயாராகி வருகிறது என்றார்.

News March 30, 2025

தேனியில்  பலத்த மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை, தென்காசி, தேனி உட்பட 5 மாவட்டங்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், ஏப்ரல் 3 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 30, 2025

தேனியில் இலவச கருத்தரித்தல் ஆலோசனை முகாம்

image

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி- பெரியகுளம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுதா கருத்தரித்தல் மையத்தில் 31.03.2025 அன்று இலவச குழந்தையின்மைக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்  7670076006 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

News March 30, 2025

மருத்துவ விழிப்புணர்வு முகாம்-கலெக்டர் தகவல்

image

தேனி மாவட்டத்தில் புற்றுநோய்,பக்கவாதநோய்,தொழுநோய்,காசநோய்,கண்பார்வை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு பெரியகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடுத்த மாதம் ஏப்.9 மற்றும் 16ந் தேதிகளில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சீத்சிங் தெரிவித்தார்.

News March 30, 2025

பெண் டாக்டர் வீட்டில் நகை திருட்டு

image

பெரியகுளம் தென்கரை தண்டுப்பாளையம் மெயின்ரோட்டைச் சேர்ந்த முகமது ஜாபர் சாதிக் மனைவி ஆசியா 65.
இவர் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் முன்னாள் நிலைய மருத்துவ அலுவலராக பணிபுரிந்தவர். இவர்களது மகளை கொடைக்கானலில் விட்டு வீடு திரும்பினர். வீட்டின் அலமாரி பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 10 கிராம் ஒரு ஜோடி தங்கத்தோடு, ரூ.2 ஆயிரம் திருடு போனது. போலீசார் விசாரணை செய்கின்றனர்.

News March 29, 2025

தேனி: நகை ஆபரணங்கள் நீங்களும் செய்யலாம் 

image

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை ஆபரணங்கள் தயாரித்தல் பயிற்சி ஏப்ரல்7 தொடங்கி 13 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் ஏப்ரல்7க்கு முன் நேரில் முன்பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடர் கொள்ளலாம் என பயிற்சி மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

தேனியில் குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற போலீசார் ஒருவரை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பொன்வண்ணன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 29, 2025

போடியில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்

image

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான போடி கைலாய கீழ சொக்கநாதர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மாதந்தோறும் வரும் அம்மாவாசை பௌர்ணமிகளில் இக்கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும் அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். இக்கோயில் 2000 ஆண்டுகள் தொன்மையானது. ஐந்து தலை நாகம் ஒன்று கோயிலை பாதுகாத்து வருவதாகவும் ஐதீகம்.

error: Content is protected !!