Theni

News April 26, 2025

விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதை

image

வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் நெல் விதை தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிலோவிற்கு ரூ.20 மானியத்தில் ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேர் வரை வழங்கப்பட உள்ளது. அதேபோல் விதை கிராமத் திட்டத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.20 வீதம் ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News April 26, 2025

56 அடியாக குறைந்தது வைகை அணை நீர்மட்டம்

image

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று (26-04-2025) காலை அணையில் நீர்மட்டம் 56 அடியாக குறைந்துள்ளது. மேலும் தற்போது உள்ள தண்ணீரை குடிநீருக்காக சேர்த்து வைக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

News April 26, 2025

தேனி மாவட்டத்தில் உரம் இருப்பு நிலவரம்

image

தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,310 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 590 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 1,049 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 3,928 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

News April 26, 2025

இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

image

தேனியில் உள்ள திருக்காளாத்தீஸ்வரர் கோவில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE செய்யவும்.

News April 26, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்

News April 26, 2025

தேனி: வாலிபர் சடலம் மீட்பு

image

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் ஜெயராமன் 64. முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் பாபு 40. இவர் ஆக்டிங் டிரைவர் வேலை செய்தார். இவருக்கு மது பழக்கம் அதிக அளவில் இருந்துள்ளது.7 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று மேலச்சொக்கநாதபுரம் கழிவுநீர் ஓடையில் குடி போதையில் பாபு இறந்து கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News April 25, 2025

தேனி : அரசு அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

தேனி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்
▶️தேனி உதவி இயக்குநா் 04546262729
▶️தேனி வட்டாட்சியர் 4546-255133
▶️போடிநாயக்கனூர் வட்டாட்சியர் 04546280124
▶️உத்தமபாளையம் வட்டாட்சியர் 04554265226
▶️ஆண்டிபட்டி வட்டாட்சியர் 04546-242234
▶️ பொியகுளம் வட்டாட்சியர் 0454623215
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 25, 2025

தேனி : பாவமன்னிப்பு தரும் கண்ணகி கோவில்

image

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி அடிவாரத்தில் அமைந்துள்ளது மங்கலநாயகி கண்ணகி தேவி கோயில். இந்த கோயிலில் கண்ணகி, சிவன், சாய்பாபா, சங்கிலி கருப்பன், நவகிரகங்கள் உள்ளிட்ட 63க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. கடந்த காலங்களில் முன்னோர்களுக்கு தீங்கு விளைவித்து கர்ம வினைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள், பாவமன்னிப்பு கேட்டு வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 25, 2025

தேனி மாவட்டத்தில் பதிவான மழை அளவு

image

தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று (ஏப்ரல் 25) காலை வரை மிதமான மழை பெய்துள்ளது. ஆண்டிப்பட்டி 0 மி.மீ, அரண்மனைப்புதூர் 0 மி.மீ, வீரபாண்டி 0.6 மி.மீ, பெரியகுளம் 0 மி.மீ, மஞ்சளாறு 0 மி.மீ, சோத்துப்பாறை 0.5 மி.மீ, வைகை அணை 0 மி.மீ, போடிநாயக்கனூர் 0 மி.மீ, உத்தமபாளையம் 15.8 மி.மீ, கூடலூர் 18.6 மி.மீ, பெரியாறு அணை 0.6 மி.மீ, தேக்கடி 16.8 மி.மீ, சண்முகா நதி 0 மி.மீ. சராசரி மழை அளவு =4.03 மி.மீ

News April 25, 2025

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

image

தேனி அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (70). இவா், கண்டமனூா்-கோவிந்தநகரம் சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அம்பாசமுத்திரம் விலக்கு அருகே அரசுப் பேருந்து கோவிந்தசாமி மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமைடந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரான மயிலாடும்பாறை சோ்ந்த அஜீத்குமாா் (28) போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

error: Content is protected !!