India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம் அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

தேனி மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் ஆட்டுக் கொல்லி நோய் சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் மண்டல இணை இயக்குநர் கோயில்ராஜா , உதவி இயக்குநர்கள் பாஸ்கரன், சுப்ரமணியன், சிவரத்னா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தேனி மாவட்டத்தில் 1.06 லட்சம் செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் இருப்பதாக
கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு கால்நடை நலம் மற்றம் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக 1.43 லட்சம் மருந்துகள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு 30 நாட்களுக்கு இப்பணிமேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி தேனி மாவட்ட நீதித்துறையில் 32 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க<

தேனியில் பதிவான வாக்குகள் கம்மவார் சங்கம் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சுற்றி 2 கி.மீ தொலைவிற்கு ட்ரோன்கள் பறக்க கலெக்டர் ஷஜீவனா தடை விதித்துள்ளார். மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்,தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகளை படைக்க பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் உள்ளது. இதில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான தேர்வு போட்டி நடைபெற உள்ளது. மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையம் 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கெங்குவார்பட்டி அருகே வத்தலகுண்டு மெயின் ரோட்டில் அழகரம்மாள் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று இவரது மூத்த மகன் விஜய் என்பவர் ஹோட்டலுக்கு வந்து சொத்தை பிரித்து தரக்கோரி தகராறு செய்து அங்கிருந்த அரிவாள் மனையை எடுத்து அழகரம்மாவின் கழுத்தில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவதானப்பட்டி போலீசார் விஜயை கைது செய்துள்ளனர்.

கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் காட்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு பால்பாண்டி என்பவரிடம் ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி அதில் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை ஒரு சில நாட்களில் கொடுப்பதாக தெரிவித்த நிலையில் பால்பாண்டி சிலருடன் வந்து பணத்தை உடனே தரும்படி கூறி மகேஸ்வரியின் தாக்கியுள்ளார்.

வீரபாண்டி மாரியம்மன் கோயில் திருவிழா மே 7 முதல் மே 14 வரை நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் கோயில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. திருவிழாவிற்காக பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடியில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் நிற்பதற்கான தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி இன்று துவங்கியது.

தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்களுக்கு வைகை ஆற்றில் உள்ள உறை கிணறுகள் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக ஆறுகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.