India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமைந்துள்ளது மாணிக்கவாசகர் கோவில். பொதுவாக அமர்ந்த நிலையில் இருக்கும் மாணிக்கவாசகர் இந்த கோவிலில் சிவலிங்கத்தை வணங்கியபடி நிற்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கவும் , பேச்சில் குறைபாடு உள்ளவர்களும் இந்த கோவிலுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச்.03) நீர்மட்டம்: வைகை அணை: 61.12 (71) அடி, வரத்து: 234 க.அடி, திறப்பு: 722 க.அடி, பெரியாறு அணை: 115.20 (142) அடி, வரத்து: 97 க.அடி, திறப்பு: 400 க.அடி, மஞ்சளார் அணை: 35.20 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 73.14 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 27.50 (52.55) அடி, வரத்து: 10 க.அடி, திறப்பு: இல்லை.
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. தேனி மாவட்டத்திற்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். இந்த லிங்கை <
தேனி மாவட்டத்தில் இன்று (02.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை அடுத்து மீண்டும் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கிறார். இன்று நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசப் போகிறார் என்பது ஆர்வமாக உள்ளது
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் ஓட்டும் பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. 22 நாள் நடைபெறும் இப்பயிற்சியில் 25 பேர் கலந்து கொள்ளலாம். இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 45 வயதிற்குள் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94436 77046, 99443 44066 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேனி மாவட்டதில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மார்ச். 02) ஆண்டிப்பட்டி 5.2 மி.மீ, அரண்மனைப்புதூர் 1.6 மி.மீ, வீரபாண்டி 2.8 மி.மீ, பெரியகுளம் 0 மி.மீ, சோத்துப்பாறை 1.0 மி.மீ, வைகை அணை 3.4 மி.மீ, போடிநாயக்கனூர் 1.2 மி.மீ, உத்தமபாளையம் 5.8 மி.மீ, கூடலூர் 3.8 மி.மீ, பெரியாறு அணை 0.6 மி.மீ, தேக்கடி 0.4 மி.மீ, சண்முகா நதி 14.6 மி.மீ. சராசரி மழை அளவு 3.10 மி.மீ. அளவு பெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் 13,365 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 141 பள்ளிகளைச் சேர்ந்த 6271 மாணவர்கள், 6791 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் 303 பேரும் தேர்வு எழுது கின்றனர். தேர்வு நேரங்களில் திடீர் சோதனை மேற்கொள்ள 7 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 140 ஆசிரியர்கள் சோதனை பணியில் ஈடுபட உள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பழைமையான திருக்காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (மார்.1) கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க சிவாசாரியர்கள் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். கோவில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 11-ம் தேதியும் , தேரோட்டம் 12-ம் தேதியும் நடைபெறவுள்ளது.
தேனி மாவட்டத்தில் இன்று 01.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.