Theni

News October 8, 2025

தேனி: போலீசாரிடமிருந்து தப்பிய கைதி

image

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்சங்கர் (25). இவர் அவரது தாயை தாக்கிய வழக்கில் அல்லிநகரம் போலீசாரால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது போலீசாரிடமிருந்து அவர் தப்பி சென்றார். இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் வேடசந்தூர் பகுதியில் பதுங்கி இருந்த சுபாஷ் சங்கரை தனிப்படை போலீசார் நேற்று (அக்.7) கைது செய்தனர்.

News October 8, 2025

தேனி: சிறுமி கா்ப்பம்; இளைஞா் மீது வழக்கு

image

போடி அருகேயுள்ள பொட்டல்களத்தில் வசிப்பவா் நந்தகுமாா் (21). இவர் கேரள மாநிலம், சூரியநெல்லியை சோ்ந்த 17 வயது சிறுமியிடம் சமூக வலைதளப்பக்கத்தில் பழகி சிறுமியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொண்டாா். இந்த நிலையில் சிறுமி கா்ப்பமடைந்தாா். இதுகுறித்து போடி மகளிா் போலீசார் நந்தகுமாா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 8, 2025

தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News October 8, 2025

தேனி நகராட்சி நடவடிக்கை எடுக்க முடிவு

image

தேனி – அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நகராட்சித் துறை அதிகாரிகள் விரைவில் துவங்க உள்ளதாக நகராட்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தெருக்களில் உள்ள சாக்கடைகளை ஆக்கிரமித்தும், ரோடுகளை ஆக்கிரமித்தும் ஆங்காங்கு இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் நடவடிக்கை எடுக்கபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 8, 2025

தேனி: வீட்டில் கரண்ட் அடிக்கடி போகுதா? இத பண்ணுங்க.!

image

தேனி மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.

News October 8, 2025

தேனி மாவட்ட வழங்கல் அலுவலர் மாற்றம்

image

தேனி மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலராக பணிபுரியும் மாரிச்செல்வி, பெரியகுளம் ஸ்ரீராஜஸ்ரீ சுகர், கெமிக்கல்ஸ் நிறுவன வடிப்பக அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா தேனி மாவட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2025

தேனியில் அண்ணாமலை மன்றம்

image

தேனி, ஆண்டிபட்டி ஒன்றியம், நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பா.ஜ.கவினர் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரில் தலைமை ரசிகர்கள் சமூக சேவை நற்பணி மன்றத்தை துவக்கி பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். மேலும் இம்மன்றத்தில் உறுப்பினராக சேர அழைப்பும் விடுத்துள்ளனர். அண்ணாமலை மீது உள்ள தனிப்பட்ட விருப்பத்தினால் இந்த மன்றம் துவக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News October 8, 2025

தேனி:ஆதார் புது RULES; குழந்தைகளுக்கு இலவசம்!

image

தேனி மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 முதல் வயதுள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இதை UPDATE செய்தால் தான் பள்ளிகளில் சேர்க்கை, ஸ்காலர்ஷிப், அரசு உதவிகள் பெற முடியும் என அறிவுறுத்தியுள்ளது. ஆதார் மையங்களில் இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 8, 2025

தேனி: மின் கம்பி உதவியாளர் வேலை ரெடி! நீங்க ரெடியா?

image

தேனியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின் உதவியாளருக்கான தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 21 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மேலும் விபரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள முதல்வரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ள்ளார். ஷேர்!

News October 8, 2025

தேனி: தலைவலியால் ஒருவர் உயிரிழப்பு

image

ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (41). இவர் நேற்று முன்தினம் தோட்ட வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். அன்று இரவு இவருக்கு திடீரென தீராத தலைவலி ஏற்பட்டுள்ளது. தலைவலி அதிகமான நிலையில் ஜெகன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுக்குறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!