India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தோட்டக்கலைப் பயிர்கள், மலைப் பயிர்கள் மேலாண்மை முறைகள் பற்றிய சிறப்பு ஒரு நாள் இலவச பயிற்சி (பிப்.28) அன்று காலை 09.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. வல்லுனர்கள் பங்குபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் ,தொழில்முனைவோர் 9444781202 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
தேனி மாவட்டத்தில் இன்று 22.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் இருந்து 15கி.மீ தொலைவில், மேகமலை பகுதியில் இருந்து உருவாகும் சின்ன சுருளி உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாமல் இயற்கை அழகை ரசித்தவாறே இந்த அருவியில் குளித்து மகிழலாம் .
பொம்மையக்கவுண்டன்பட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு கன்னிமார்கோயில் பெரிய வாய்க்கால் பாதையில் உள்ளது. நேற்று காலை தோப்பில் முருகேசன் தோட்ட வேலைக்காாக சென்றார். நிலத்தில் சிறுத்தையின் கால்தடங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உயிர்தேசம் நடக்கும் முன் வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று 21.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
போடிநாயக்கனூர் பகுதியில்
அமைந்துள்ளது. கைலாய கீழச்சொக்கநாதர் ஆலயம்.
காலகஸ்தி போன்று அருகில் நீர்நிலை உடன் வாஸ்து முறைப்படி
வாயு மூலையில் உள்ள இந்த கோவிலை
5 தலை நாகம் ஒன்று பாதுகாத்து வருவதாக
ஊர் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அக்காலம் தொட்டு இக்காலம் வரை 5 தலை நாகம்
ஒன்று இந்த ஆலயத்தை காவல் காத்து வந்ததுள்ளதாகவும்,
அந்த நாகம் தற்போதும் உள்ளதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.
தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வருகின்ற 28.02.2025 தேதி இலவச மிஷன் எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலுக்கு 9500314193, 9043651202, 04546_251578 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேனியை சேர்ந்தவர் அழகம்மாள். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாண்டியம்மாளிடம் அவரது கணவர் ராஜலிங்கம் நேற்று முன்தினம் (பிப்.19) தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனை அழகம்மாள் விலக்கி விட சென்ற நிலையில் அதனால் ஆத்திரமடைந்த ராஜலிங்கம் தான் வைத்திருந்த கத்தியால் அழகம்மாளை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் ராஜலிங்கத்தை நேற்று (பிப்.20) கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.25 இன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் புதிதாக சிற்றுந்துகள் இயக்க 34 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்குவதற்கான உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 14-ம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.