India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் இளநீரை விரும்பி பருகி வருகின்றனர். நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக மரங்களின் இளநீர் தேனியில் 60 முதல் 70 வரை விற்பனையாகிறது. இந்நிலையில், ஒரு இளநீர் விலை 100 ரூபாயை தாண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதார் பாலாஜி என்பவர் முதல்வர் தனிப்பிரிவுக்கு பள்ளிகளில் மாணாக்கர்களை சேர்ப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாணாக்கர்களை பள்ளிகளில் சேர்க்கவும், பொது தேர்வு எழுதவும் ஆதார் கட்டாயம் இல்லை என்ற தகவலை புகார்தாரருக்கு தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஏற்படும் வியாதிகளில் பெருமளவில் ஆடுகளை தாக்கும் நோய் ஆட்டுக்கொல்லி நோய் என்று குறிப்பிடப்படுகிறது இதனால் தேனி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார் இதனால் அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் தகவல்
தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆணையாளர்களின் தொடர்பு எண்கள்
▶️தேனி நகராட்சி ஆணையாளா் – 04546252470
▶️பொியகுளம் நகராட்சி ஆணையாளா் -04546231210
▶️போடிநாயக்கனூா் நகராட்சி ஆணையாளா் – 04546280228
▶️சின்னமனூா் நகராட்சி ஆணையாளா் – 04554247383
▶️கம்பம் நகராட்சி ஆணையாளா் – 04554271283
▶️கூடலூா் நகராட்சி ஆணையாளா் – 04554231236
இது போன்ற முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை ஷேர் செய்யவும்
குழந்தை திருமணங்கள் நடைபெறுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர்கள் மீதும் குழந்தை திருமண தடை சட்டத்தின்படி 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை, அல்லது ரூ.1 லட்சம், அல்லது தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.
வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை 44.90 மெ.டன், சிறுதானியங்கள் 5.90 மெ.டன்னும் (கம்பு கோ 10, குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் (தட்டை பயிறு, பாசிபயிறு மற்றும் உளுந்து) 18.15 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் (நிலக்கடைலை) 1.10 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
2026 தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும், திமுக அமைச்சர்களின் நாக்கில் சனி இருப்பதால் பலர் ஜெயிலுக்குப் போவார்கள். 2027க்கு பின் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் காலம் வரும் என்று தேனி மகாசக்தி பீடம் மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறியுள்ளார். கடந்த காலங்களில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவார், 3ஆவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் இவர் ஆருடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்படும் நபர்களை மீட்டு உரிய நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து, உயிர் காக்க உதவி பணிபுரியும் நபர்களுக்கு, தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் மத்திய அரசிடம் இருந்து 5000 ரூபாய் மற்றும் மாநில அரசிடம் 5000 என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவான 829.80 மி.மீ.க்கு ஏப்ரல் மாதம் வரை 179.24 மி.மீ பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழையளவை காட்டிலும் 32.86 மி.மீ குறைவாகும். ஏப்ரல் மாத இயல்பு மழையளவான 99 மி.மீ-க்கு தற்போது வரை 108.8 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 9.8 மி.மீ அதிகமாகும் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.