India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் நேற்று (செப்.14) அவரது பைக்கில் வேலைக்கு சென்றுள்ளார். அவருக்குப் பின்னால் யோஸ்வா என்பவர் ஓட்டி வந்த கார் கோவிந்தராஜ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜ் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தேனி மக்களே தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <
தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி ராஜபிரியா தனியார் பள்ளி ஆசிரியை. கணவன் மனைவி இடையே நேற்று முன் தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜபிரியா கோவித்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (செப்.14) மீண்டும் வீடு திரும்பிய அவரை சதீஷின் தந்தை துரைசிங்கம் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் அவர் பழனிசெட்டிபட்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் விசாரணை.
தேனி வேலை வாய்ப்பு மையத்தில் செப்.20 அன்று TNPSC குரூப் 2, 2 ஏ தேர்விற்கான இலவச முழு மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு எழுத விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு விண்ணப்ப நகல், புகைப்படம் சமர்பித்து பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு வேலை வாய்ப்பு மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 63792-68661 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் SHARE செய்ங்க.
ஆண்டிபட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான பாண்டியன் (40) நேற்று முன்தினம் (செப் 12) சிலரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முத்தனம்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். முத்தனம்பட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இவ்விபத்தில் பாண்டியன் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். க.விலக்கு போலீசார் வழக்கு (செப்.13) பதிவு செய்துள்ளனர்.
போடி நகர் போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (செப்.13) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது போடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் கோட்டைச்சாமி என்பவரும், அப்பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
தேனி மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅வங்கி: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!
தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க.
தேனி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தேனி மாவட்ட மக்கள் 94431-11912 எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் காமராஜரின் 123.வது பிறந்தநாளை முன்னிட்டு 123 குழந்தையில்லா தம்பதியினருக்கு இலவச குழந்தையின்மை சிகிச்சை முகாம் இன்று நடைபெறுகிறது. முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. தம்பதிகள் நேரில் பங்கேற்று பயனடையலாம் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.
Sorry, no posts matched your criteria.