Theni

News July 7, 2025

தேனி:சொந்த ஊரில் அரசு வேலை (1/2)

image

தேனி மாவட்டத்தில் 25 கிராம உதவியாளர் பணிக்கு காலிபணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️விண்ணப்த்தாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு தேனி கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அனுகலாம்.

News July 7, 2025

நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

image

தேனி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மூலம் நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 10 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஒரு பயனாளிக்கு 4 வார வயதுள்ள 250 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படும். மொத்த தொகை ரூ.2,18,000. அதில் 50% மானியமாக அரசு ரூ. 1,09,000 வழங்கும். மீதி தொகையை பயனாளி செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தை அணுகலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணவும்.

News July 7, 2025

பெரியகுளம்: வழக்கறிஞரை தாக்கிய தம்பதி மீது வழக்கு

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பாலு. இவரது தம்பிகளான அழகுராஜா, சங்கருக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை ஏற்பட்டது. இதனை பாலு சமாதானம் செய்துள்ளார். இந்நிலையில் சங்கர் அவரது மனைவி சிந்தனைச்செல்வி சேர்ந்து வீட்டிலிருந்த பாலுவை அவதூறாக பேசி, கல்லால் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தென்கரை போலீசார் சங்கர், சிந்தனைச் செல்வி மீது நேற்று (ஜூலை.6) வழக்கு பதிவு

News July 7, 2025

போடியில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

image

போடியில் 5வது வார்டு திமுக சார்பில் 10வது மற்றும் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் விழா திமுக போடி நகர் செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட திமுக நகரச் செயலாளர் முதல் பரிசு 3000, 2ஆம் பரிசு 2000, 3ஆம் பரிசு 1000 வழங்கினார். மேலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள், பேனாக்கள், பென்சில் வழங்கப்பட்டது.

News July 6, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 06.07.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News July 6, 2025

தேனியில் இலவச Tally பயிற்சிக்கு வரவேற்பு

image

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் ஜூலை 18 முதல் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் (டேலி) பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் கருவேல்நாயக்கன்பட்டி தொழிலாளர் நல அலுவலகம் அருகே உள்ள கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம் என மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

தேனி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <>இந்த லிங்க் மூலம் <<>>ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க.

News July 6, 2025

தேனியில் கிணற்றில் பிணமாக கிடந்த கூலித்தொழிலாளி

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(60). தேவதாஸ் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடலை க.விலக்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 5, 2025

மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

image

தேனி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News July 5, 2025

வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தேனி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தேனி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!