Theni

News March 1, 2025

திருமணத்தடையை நீக்கும் வழி விடும் முருகன் கோவில்

image

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தென்பழனி பகுதியில் வழி விடும் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேகமலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகனுக்கு அபிஷேகம் செய்து , சிறப்பு பரிகாரங்கள் செய்வதன் மூலம் திருமணத்தடை உள்ளவர்களுக்கு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

News March 1, 2025

நில அளவைக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தை சேர்ந்த நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவை செய்ய சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்காமல், இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பிறகு நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு கைப்பேசியில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

News March 1, 2025

அனுமந்தன்பட்டி கோவிலுக்கு இவ்வளவு சக்தியா?

image

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் அனுமந்தராய பெருமாள் கோயில்அமைந்துள்ளது. சுயம்பாக தோன்றியுள்ள அனுமந்தராயருக்கு ஒவ்வொரு சனிக்கிழமை
அன்றும் ,சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இந்த பூஜைகளில் கலந்து கொண்டால், காரியத்தடை நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

News March 1, 2025

கொலை முயற்சி குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

image

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமாா். இவரை முன்விரோதம் காரணமாக 2024-ம் ஆண்டு தீபக் என்பவர் கத்தியால் குத்தி உள்ளார். அவரை போலீசார் கைது செய்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (பிப்.28) தீபக்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீா்ப்பளித்தார்.

News February 28, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (பிப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 28, 2025

தேனி :கொடுத்த கடனை பெற முடியவில்லையா? இந்த கோவிலுக்கு போங்க..

image

தேனி நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தத் கோயிலில் தனி சன்னதியில் வாராஹி அம்மன் உள்ளார்.பிறருக்கு கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹி அம்மனும் பைரவர் மூர்த்தியும் உள்ள இந்த கோவிலில் வழிபட்டால் குடுத்த பணம் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம் .

News February 28, 2025

சிறுமியிடம் அத்துமீறியவருக்கு 25 ஆண்டுகள் சிறை

image

உத்தமபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சுருளிவேல் (44). இவரது வீட்டிற்கு விளையாட சென்ற 6 வயது சிறுமியிடம் சுருளிவேல் அத்துமீறினார். இது குறித்த புகாரில் போலீசார் அவரை கைது செய்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக சுருளிவேலுக்கு 25 ஆண்டுகள் சிறை, ரூ.40,000 அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

News February 28, 2025

ஆதரவற்ற விதவைகளுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு 

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வி.ஏ.ஓ. உள்ளிட்ட பணிகளுக்கு குரூப்-4 எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. ஆதரவற்ற விதவை பதிவுதாரர்கள் பங்கேற்கும் போட்டி தேர்வு வருகிற 4-ம் தேதி காலை 10 மணியில் மாலை 5 மணி வரை விழிப்புணர்வு முகாம் நடக்கிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.

News February 28, 2025

மின்னணு முறையில் 3 குவாரிகள் 13.99 கோடிக்கு ஏலம்

image

தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு, தனியார் நிலங்களில் பல்வேறு குவாரிகள் செயல்படுகின்றன. குவாரிகள் இதுவரை நேரடி ஏலம் மூலம் விடப்பட்டு வந்தது. இந்நிலையில் முதன் முறையாக மின்னணு முறையில் ஆண்டிபட்டி தாலுகா சண்முகசுந்தரபுரத்தில் 2, போடி தாலுகா கோடாங்கிபட்டியில் 1 என மொத்தம் 3 குவாரிகள் ஏலம் விடப்பட்டன. இந்த மூன்று குவாரிகள் ரூ.13.99 கோடிக்கு ஏலம் போனதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 27, 2025

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

image

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நாளை 28.02.2025 இலவச மிஷன் எம்ப்ராய்டரி பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலுக்கு 9500314193, 9043651202, 04546251578 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

error: Content is protected !!