Theni

News October 12, 2025

தேனி: வாகன அபராதத்தை ரத்து செய்யலாம்!

image

தேனியில் உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு இங்கே <>க்ளிக்<<>> செய்து உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 12, 2025

தேனி: கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராமம்

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே நரியூத்து ஊராட்சியில் சாலைப் பணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்ததை கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனா். பிறகு மாவட்ட ஊரக வளா்ச்சி முகாமை இயக்குா் அபிதா ஹனீப் நரியூத்து கிராமத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால், நரியூத்து ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை.

News October 11, 2025

தேனி: கிராம ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்கள்

image

தேனி மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,450 காலியிடங்கள் உள்ளது. <>மாவட்ட வாரியா<<>>க பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10th கல்வித்தகுதி உடைய 18 வயது நிரம்பியவர்கள் www.tnrd.tn.gov.in-ல் நவ. 9க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை. சொந்த ஊரில் அரசு வேலை. உடனே SHARE பண்ணுங்க.

News October 11, 2025

தேனி: டீக்கடையில் மது விற்பனை

image

க.விலக்கு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.10) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ம.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் அப்பகுதியில் உள்ள அவரது டீக்கடையில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. டீக்கடையில் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ஜெகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News October 11, 2025

ஆண்டிபட்டி: நாயினை அடித்து கொன்றவர் கைது

image

ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கோபால். நேற்று முன் தினம் கோபால், சாந்தி வீட்டு வழியாக நடந்து சென்ற பொழுது அவரது வீட்டில் இருந்த நாய் கோபாலை பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கோபால் நாயை கொடூரமாக அடித்து கொலை செய்ததுடன் சாந்தியையும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மயிலாடும்பாறை போலீசார் கோபாலை கைது (அக்.10) செய்தனர்.

News October 11, 2025

தேனி வைகை அணையின் இன்றைய நிலவரம்

image

தேனிமாவட்டம் வைகை அணையின் இன்றைய (அக்டோபர்.11)நிலவரம். அணையின் மொத்த உயரம் 71 அடி, தற்போதைய நீர்மட்டம் 62.73 அடி, அணையின் மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன அடி, அணையின் தற்போதைய கொள்ளளவு 4146 மில்லியன் கன அடி, அணைக்கு நீர்வரத்து 869 கன அடி, அணையில் நீர் 1499 கன அடி நீரானது வெளியேற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 11, 2025

தேனி கிராம ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்கள்

image

தேனி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய 20 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இணையதள முகவரியில் இன்று முதல் (அக்.10) விண்ணப்பிக்கலாம். (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.11.2025) *ஷேர் பண்ணுங்க

News October 11, 2025

தேனி விவசாயிகளுக்கு ரூ.6000 – எப்படி பெறுவது?

image

பி.எம்.கிஷான் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் இதுவரை 28,000 பயனாளிகள் பயன் பெற்ற நிலையில் 6000 பேர் நில உடைமை விபரங்களை பதிவு செய்யாமல் உள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் அக்.31க்குள் பதிவு செய்து 20வது தவணைத் தொகையை பெற்று கொள்ளுமாறு வேளாண் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.*ஷேர்

News October 11, 2025

தேனி: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வி.ஏ.ஓ பலி

image

போடி அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(42). இவர் உசிலம்பட்டி அருகே பேரையூர் அபிபட்டியில் வருவாய்த்துறை ஆர்.ஐ., ஆக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இவரது நண்பர்களுடன் ஊத்தாம்பாறை கருப்பசுவாமி கோயில் அருகே உள்ள அருவியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். தீயணைப்பு வீரர்கள் நேற்று அவரை சடலமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு.

News October 11, 2025

தேனியில் கல்வித்துறை தவிக்கும் நிலை

image

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்தவர் இந்திராணி கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். இதனால் திண்டுக்கல் சி.இ.ஓ.வாக உஷா என்பவரை கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது 100 நாள் கடந்தும் நிரந்தர சி.இ.ஓ. நியமனம் செய்யவில்லை இதனால் கல்வி பணிகள் பாதிக்கப்படுகிறது. கையெழுத்து வாங்கவேண்டும் என்றால் 160 கி.மீ.தூரம் செல்ல வேண்டிய நிலை என கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

error: Content is protected !!