Theni

News March 12, 2025

ஆண்டிபட்டி அருகே சுவாமி சிலையை உடைத்தவர் கைது

image

ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில் மலை அடிவாரத்தில் ஒண்டிவீரன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவிலில் இருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து ஊர் பெரியவர்கள் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த மாயன் என்பவர் சிலையை தான் உடைத்ததாக கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரில் ஆண்டிபட்டி போலீசார் மாயனை (மார்ச்.11) நேற்று கைது செய்தனர்.

News March 12, 2025

தேனி மகளிர்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு

image

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற உள்ள மகளிர்களுக்கான இலவச தையல் பயிற்சியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முடிந்து 45 வயதிற்குள் உள்ள மகளிர்கள் சேர்ந்து  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தகவல் பெற இந்த 04546-251578, 9500314193 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.*ஷேர் செய்து பிறருக்கு உதவுங்கள்

News March 12, 2025

தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் விஷம் குடித்து தற்கொலை

image

தேனி நகர் பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன்(47) இவர் ஆட்டோ ஓட்டுநர். சமீபத்தில் இவரது தாய் முத்தம்மாள் இறந்தார். இதனால் தானும் சாகப்போகிறேன் எனக் கூறியபடி இருந்தவர் மார்ச்.6ம் தேதி மாலை தேனி பழைய பஸ்நிலையத்தில் விஷ மருந்து குடித்து மயக்க நிலையில் கிடந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தமிழரசன் உயிரிழந்தார்

News March 11, 2025

தேனியில் ஆங்கில தேர்வுக்கான பயிற்சி 

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச்  சார்ந்தவர்களுக்கு  தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்கள் அறிய மாவட்ட மேலாளர், தாட்கோ, அறை எண்.73, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் .

News March 11, 2025

ஆபாசப் பாடலுக்கு எதிராக தேனி மாவட்டத்தில் புகார்

image

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தற்போது ஆபாசங்கள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் “தூத்துக்குடி கொத்தனார்” என்ற முழு ஆபாசப்பாடல் இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதனால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சில பெண்கள் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றுவது தொடர்கிறது. இந்த பாடலை நீக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

News March 11, 2025

24.69 லட்சம் பண மோசடி பிகாா் இளைஞா் கைது

image

தேவாரத்தை சேர்ந்த சிவநேசன். தனது மனைவி வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளில் ரூ.24.69 லட்சம் எடுக்கப்பட்டு மர்ம நபர்கள் மோசடி செய்ததாக தேனி குற்றத் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகாா் அளித்தாா். விசாரணையில் சிவநேசன் மனைவி வங்கி கணக்கு செயலியை முறைகேடாகப் பயன்படுத்தி பீகாரை சேர்ந்த அா்ஜூன்குமாா் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நேற்று (மார்.10) தேனி அழைத்து வந்தனர்.

News March 11, 2025

உருவபொம்மை எரித்த போது வேட்டியில் பற்றியது தீ

image

லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தி.மு.க., – எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போடி, தேவர் சிலை அருகே மத்திய அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் , வார்டு தி.மு.க., செயலர் சந்திரசேகரின் வேட்டியில் தீப்பற்றியது. அவர் வேட்டியை அவிழ்த்து போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்.

News March 10, 2025

தேனியில் நடக்கும் மோசடி – போலீஸார் எச்சரிக்கை 

image

தேனி மாவட்டத்தில்  டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மோசடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே நவீன திருடர்களிடமிருந்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து புகார் இருந்தால் சைபர் கிரைம் போலீசுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உடனடியாக விபரங்களை தெரிவிக்கலாம் .

News March 10, 2025

தேனியில் இந்த உணவுதான் பேமஸ்

image

தேனி மாவட்டம் என்றாலே அழகும் இயற்கையும் நினைவுக்கு வரும் .தேனி பசுமைக்கும் அழகுக்கும் மட்டும் பேமஸ் இல்லை. சாப்பாட்டுக்கும் தான். சின்னமனூரில் கிடைக்கும் அயிரை மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டால், அதன் ருசி எப்போதும் மறவாது. தேனியில் எங்கு சென்றாலும் கிடைக்கும் தேனி ஸ்பெஷல் நாட்டு கோழி பெப்பர் கிரேவி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. இன்னுமும் இதனை சாப்பிடாத உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News March 10, 2025

12 காட்டுப்பன்றிகள் லாரி மோதி உயிரிழப்பு

image

பெரியகுளம், தேவதானப்பட்டி ரோடு பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியிலிருந்து இரை தேடி ரோட்டை கடக்க முயன்ற 10 குட்டிகள் உட்பட 12 காட்டுப்பன்றிகள் மீது அடையாளம் தெரியாத லாரி மோதியதில், 12 காட்டுப்பன்றிகளும் இறந்தன. அப்பகுதி இருட்டாக இருந்ததால், அடுத்தடுத்த வாகனங்கள் இறந்த பன்றிகள் மீது ஏறி சென்றன. டூ வீலரில் சென்றவர்கள் தகவலின்படி, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!