India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் மக்கள் உரிமை கழகத்தினர் போடி அரசு பொறியியல் கல்லூரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பட்டியல் சமூக மாணவன் விக்னேஷின் மரணத்திற்கு நீதி கேட்டு தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவனுக்கு நீதி வேண்டும், மாணவனின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்று வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பெரியகுளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் கோடை காலத்தில் சாகுபடி செய்யும் வகையில் தக்காளி, கத்தரி நாற்றுகள் தலா 40 பைசாவிற்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த சேவையை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் , நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் பெரியகுளத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையை தொடர்பு கொள்ளலாம். அல்லது 63824 10915 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். SHARE IT
போடி குப்பிநாயக்கன்பட்டி மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மோகன்காந்தி (40). இவா் தேனியில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த சில நாள்களாக இவா் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து மது அருந்தினாராம். இதை இவரது மனைவி சரண்யா கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த இவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.போடி நகா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனா்.
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணைணை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் துரைப் பாண்டி 60, செம் மறி ஆடுகள் 200 மேய்த்து வருகிறார். கடந்தாண்டு மே மாதம் முதல் காமக்காபட்டி ரோடு பகுதியில் தென்னந்தோப்பில் கிடை போட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு கிடைக்குள் புகுந்த சிறுத்தை 6 ஆடுகளை கடித்து கொன்றது.சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் போலியான லோன் ஆப்ஸ்களை நம்பி உங்களது பணங்களை இழக்க வேண்டாம் “Don not trust fake loan App” என மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று 06.03.2025 வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் க்ரைம் குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் 141 பள்ளிகளில் பிளஸ்1 படிக்கும் 6,283 மாணவர்கள், 6,851 மாணவிகள் என மொத்தம் 13,134 பேரும் , தனித்தேர்வர்கள் 130, கடந்தாண்டு தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாத பிளஸ் 2 மாணவர்கள் 198 பேர் என மொத்தம் 13,462 பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் நேற்று (மார்.5) 54 மையங்களில் நடைபெற்ற பிளஸ்1 தேர்வில் 13,176 பேர் தேர்வு எழுதினர். 286 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மாவூத்து வேலப்பர் கோவில். இந்த கோவிலில் முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். வள்ளிக்கிழங்கினை எடுக்க தோண்டிய போது வேலப்பர் சிலை கிடைத்ததால் கண்டமனூர் ஜமீன் கோவில் கட்டியுள்ளார். இங்கு வழிபாடு நடத்தினால் தொழில் முன்னேற்றம் மற்றும் பணி உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச். 6) நீர்மட்டம்: வைகை அணை: 60.53 (71) அடி, வரத்து: 165 க.அடி, திறப்பு: 272 க.அடி, பெரியாறு அணை: 115.10 (142) அடி, வரத்து: 304 க.அடி, திறப்பு: 400 க.அடி, மஞ்சளார் அணை: 34.15 (57) அடி, வரத்து: 2 க.அடி, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 72.32 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 28.80 (52.55) அடி, வரத்து: 08 க.அடி, திறப்பு: இல்லை.
தேனி மாவட்டத்தில் 141 பள்ளிகளில் பிளஸ்1 படிக்கும் 6,283 மாணவர்கள், 6,851 மாணவிகள் என மொத்தம் 13,134 பேரும் , தனித்தேர்வர்கள் 130, கடந்தாண்டு தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறாத பிளஸ் 2 மாணவர்கள் 198 பேர் என மொத்தம் 13,462 பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் நேற்று (மார்.5) 54 மையங்களில் நடைபெற்ற பிளஸ்1 தேர்வில் 13,176 பேர் தேர்வு எழுதினர். 286 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேனி சிவலிங்கநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்வலிங்கம் (32). இவா், திண்டுக்கல் வேளாண்மைப் பொறியியல் துறையில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் திண்டுக்கல்லிலிருந்து சிவலிங்கநாயக்கன்பட்டி நோக்கி டூ வீலரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த வேன், இவரது டூ வீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தேவதானப்பட்டி போலீஸாா் விசாரனை.
Sorry, no posts matched your criteria.