India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிட்டம்மாள் (75). இவர் அப்பகுதி பைபாஸ் சாலையில் சிறிய அளவிலான பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று (அக்.16) கடைக்கு பைக்கில் வந்த இரண்டு நபர்கள் மூதாட்டி இடம் சிகரெட் வாங்குவது போல் நடித்து அவரிடம் இருந்த இரண்டு கிராம் தங்க மூக்குத்தி மற்றும் 300 ரூபாயை பறித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

கம்பம் வடக்கு போலீசார் நேற்று (அக்.16) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கே.கே.பட்டி சாலையில் உள்ள குளத்துக்கரை அருகே சந்தேகத்திற்கு இடமாக சாக்கு பையுடன் நின்று இருந்த பொன்னாசியன், செல்வராஜ் ஆகியோரை சோதனை செய்த பொழுது அவர்கள் 22.070 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

போடி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்தி (24). இவா் துரைராஜபுரத்தை சோ்ந்த ரமேஷ்ராஜா (33) என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் ரமேஷ்ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் நிஷாந்தியிடம் 10 பவுன் நகைகள் வாங்கி வரச் சொல்லி அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போடி மகளிர் போலீசார் ரமேஷ்ராஜா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு (அக்.16) பதிவு.

தேனி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று (அக்.16) சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட மூவர் குழுவை கலைக்க கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி அருகே உள்ள குச்சனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற அக்.18ம் தேதி முகாம் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். அதனால் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் தவறாமல் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தேனியில் அக். 19, 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

தேனி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (62). ஆட்டோ ஓட்டுனர் ஆன இவர் நேற்று (அக்.15) ஜம்புலிபுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி ஆட்களை ஏற்றி உள்ளார். அப்பொழுது சாலமன் பாபு ராஜா என்பவர் ஓட்டி வந்த கார் இவரது ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் அழகர்சாமி மற்றும் ஆட்டோவில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த ஆண்டிப்பட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை.

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (55). வெல்டிங் ஒர்க் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் கம்பம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மாடியில் கிரில் பொருத்தும் வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கிரில் மின்சார வயர் மீது பட்டு கருப்பையா மீது மின்சாரம் தாக்கியது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார். கம்பம் போலீசார் வழக்கு (அக்.15) பதிவு.
Sorry, no posts matched your criteria.