India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை தரிசனத்திற்கு பக்தர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பங்குனி உத்திரத்தை ஒட்டி இன்று அதிகாலை வெள்ளியங்கிரி யாத்திரை சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (40) மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே மயிலாடும்பாறையில் நேற்று ஹிந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி வடக்கு மாவட்டம் கடமலை மயிலை ஒன்றிய பொறுப்பாளர்கள பங்கேற்ற இந்த கூட்டத்தில் இந்து முன்ணனி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயற்குழு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப் பள்ளியில் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி வாக்கு பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை இன்று 24.03.2024 தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 17-ம் தேதி பெரியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று (மார்.23) முதல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்ததன் காரணமாக மீண்டும் பெரியாறு மின் நிலையத்தில் 66 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி துவங்கியது.
தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில் இன்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேனி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1999 முதல் 2004 வரை தேனி மக்களவை உறுப்பினராகவும் 2004 முதல் 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவருக்கு வயது 60.
உத்தமபாளையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே இன்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிடிஓ நாகராஜ் மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை சோதனையிட்டதில் அதில் ரூ.70000 உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பணத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூல அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமமுக சார்பில் 2 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, தேனியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் வி.டி.நாராயணசாமியும், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, தேனியில் மருத்துவர் மதன் ஜெயபால் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம்
போடிநாயக்கனூரில்
யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் போடி தேனி மாவட்ட அமைச்சியூர் கபடி கழகம் இணைந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு ஆசிரியர் சங்கிலிக்காலை ஜே. ஜே.செல்வின், ரிச்சர்ட் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டியில் பல மாவட்டங்களிலிருந்து வருகை தந்து கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.