India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்டிபட்டி அருகே உள்ள எஸ்எஸ் புரம் பகுதியில் கேரளாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணித்த தம்பதி மற்றும் குழந்தை படுகாயமின்றி உயிர் பிழைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
கம்பம் பகுதியில் 700 மது பாட்டில்களை பதுக்கிய வழக்கில் கம்பம் தெற்கு போலீஸார் கண்ணன் என்பவரை கைது விசாரணை நடத்தினர். அதில் கம்பம் 17 ஆவது வார்டு திமுக செயலாளரான மணிகண்டன் என்பவர் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டன் என்பவர் மீது நேற்று (ஏப்.9) போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழா வருகின்ற 19 ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த மாதம் 23 ஆம் தேதி பிரசித்தி பெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரையில் மொத்தமாக 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
போடிநாயக்கனூர் பகுதிக்கு வருகை தந்த திமுக பேச்சாளர் திருச்சி சிவா திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வருகின்ற 19ஆம் தேதி ஏழைகளுக்கும், பணக்காரருக்கும் நடைபெறும் தேர்தல் இது; இந்திய நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய உங்கள் வாக்கை திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த மார் 17 ஆம் தேதி முதல் நேற்று (ஏப்.8) வரை ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.22,03,370, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் ரூ.15,76,900, போடி சட்டமன்ற தொகுதியில் ரூ.33,20,610, கம்பம் சட்டமன்ற தொகுதியில் ரூ.17,09,940 என மாவட்ட அளவில் மொத்தம் ரூ.88,10,820 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோதண்ட ராமனுக்கு நேற்று கிடைத்த ரகசிய தகவல் படி அவர் போலீசாருடன் TKS நகர் பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு கார் பார்க்கிங்கில் சோதனை செய்தபோது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த 700 மது பாட்டில்களை கண்டுபிடித்தனர். பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் அங்கிருந்த கண்ணன் என்பவரை கைது செய்தனர்.
ஆலந்தளிரை சேர்ந்தவர் சுருளி. இவர் அழகுமலை என்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். குத்தகை காலம் முடிவடைந்ததால் 6 ஆம் தேதி குத்தகை பணத்தை அவர் திருப்பிக் கேட்கும் போது பிரச்சனை ஏற்பட்டது. அழகுமலையும் அவரது குடும்பத்தினர் 5 பேரும் சேர்ந்து சுருளியை கம்பி,அரிவாளால் தலையில் அடித்து, மகள் பேரன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து கடமலைகுண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், தேனி, ஆண்டிபட்டி, போடி ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் ஏப்.10ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தினை திமுக நிர்வாகி அன்பகம் பார்வையிட்டார். பின்பு பொறுப்பாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியராக அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.