Theni

News April 17, 2025

போடி அருகே கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

image

போடி அருகே ராசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (42). இவர் நேற்று (ஏப்.16) அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக கார் ஒன்று இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News April 17, 2025

தேனி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்

image

திருவண்ணாமலையிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் காரும், சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிய தருமபுரியைச் சேர்ந்த காரும் குமுளி மலைப்பாதை வழிவிடும் முருகன் கோயில் அருகே நேருக்கு நேர் மோதியது. இதில் 2 காரில் வந்த 8 பேரும் காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த மலைப்பாதையில் போலீசார் நிறுத்தி ஆலோசனை வழங்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.

News April 16, 2025

வீரபாண்டி திருவிழா நடைபெறும் நாட்கள்

image

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 6ல் அம்மன் புறப்பாடு, மே 7ல் அம்மன் பவனி, மே 8 புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி, மே 9 அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், மே 10 தெற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 11 மேற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 12 திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சி, மே 13 ஊர் பொங்கல் நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்

News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

தேனி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News April 16, 2025

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

image

உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

News April 15, 2025

தேனி: வேலை இல்லாத நபர்களுக்கு உதவித்தொகை

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 31.03.2025 அன்றைய தேதிப்படி ஐந்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ,அரசால் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு. அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து  விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து,விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். உடனே ஷேர் செய்யவும்

News April 15, 2025

தேனி பெண்களுக்கு அரிய வாய்ப்பு

image

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மே7 முதல் மே 20 வரை பெண்களுக்கென இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-24 வயது உடையோர் கலந்து கொள்ளலாம் . இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள 04546- 251478, 9442758363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சுய தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 15, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 15) நீர்மட்டம்: வைகை அணை: 56.30 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 72  க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 94.95 (126.28) அடி, வரத்து: 5.08 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 38.50 (52.55) அடி, வரத்து: 8 க.அடி, திறப்பு: இல்லை.

News April 15, 2025

தேனியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <>கிளிக் <<>>செய்து மே மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News April 15, 2025

தேனி:டீ மாஸ்டருக்கு கத்திக்குத்து

image

உத்தமபாளையத்தில் உள்ள ஒர் டீ கடையில் இதே ஊரை சேர்ந்த ராஜா, சுப்ரமணியன் என இருவர் வேலை செய்கின்றனர். இதில் ராஜாவை, கடையின் உரிமையாளர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதற்கு சுப்ரமணியன் தான் காரணம் என நினைத்த ராஜா, நேற்று காலை சுப்ரமணியனை கத்தியால் முகம், கழுத்து, கை உள்ளிட்ட பல பகுதிகளில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். சுப்ரமணியனை தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!