India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கண்டமனுார் அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார் (32). இவர் நேற்று (அக்.20) வடபுதுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். தேனி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ராம்குமார் என்பவர் ஒட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் விஷ்ணுகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

தேனி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

கேரளாவை சேர்ந்தவர் கிஷோர் குமார் (43). இவர் கூடலூர் பகுதியில் தனியாக தங்கி டிரைவர் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு கடன் தொல்லை அதிகரித்ததன் காரணமாக சில தினங்களாக மனவேதனையில் இருந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று (அக்.20) அவர் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (50). குடும்பத்தை பிரிந்து விடுதியில் தங்கி இருந்த இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மேலும் இவர் குடிக்கு அடிமையாகி உள்ளார். நேற்று முன் தினம் இரவு விடுதியில் சாப்பிட்டு விட்டு தூங்கிய அவர் நேற்று (அக்.20) காலை மயங்கிய நிலையில் இருந்துள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை.

மதுரை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று, பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், தேனி மாவட்ட மக்கள், 04546-255477 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

தேனி கோடாங்கிபட்டியை சேர்ந்த அழகுராஜா. இவரது மனைவி செல்வலட்சுமி ஆகியோர் 2013.ல் ஏற்பட்ட விபத்தில் பலியாகினர். இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சதீஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் சதீஷ் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நீதிமன்ற உத்தரவில் தேனி போலீசார் சதீஷை நேற்று (அக்.20) கைது செய்தனர்.

கம்பம் அருகே சிறு புனல் நீர்மின் நிலையம் என அழைக்கப்படும் மைக்ரோ பவர் ஹவுஸ்ற்குள் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட மழை வெள்ள நீர் புகுந்தது. மழை நீர் உள்ளே புகுந்ததால் ஒட்டுமொத்த மின் நிலையத்தின் இயந்திரங்கள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு ஊழியர்கள் தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். சேதமதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் பன்றி பண்ணை வைத்து நடத்தி வரக்கூடிய நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பண்ணையில் இருந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான ஏழு பன்றிகளை சிலர் திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் நேற்று (அக்.19) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47). இவர் நகை பட்டறை வைத்து தொழில் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் நஷ்டம் காரணமாக மன வருத்தத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நிலையில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு (அக்.19) பதிவு.

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம் எண்கள்: போடி:04546-280299, கம்பம்:04554-271292, கடமலைகுண்டு:04554-227226, மயிலாடும்பாறை:04554-227258, பெரியகுளம்: 04546-231299, தேனி:04546-252699,ஆண்டிப்பட்டி:04546-242222, உத்தமபாளையம்: 04554-252699 மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.