India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி எம்பி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வேண்டும் என தானும், தனது மகன்களும் கேட்டுக்கொண்டதாக இன்று தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்கள் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார். இதன்மூலம் தேனியில் பலத்த போட்டிக்கு வாய்ப்புள்ளது. காரணம் திமுக சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வன் களத்தில் உள்ளார். இதுபோக அதிமுகவின் இரட்டை இலையும் களமாடுகிறது.
அணைப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமணி. எலக்ட்ரீசியனான இவர் தனது டூவீலரில் கம்பம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ரோட்டை கடக்க முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் பலத்த காயங்களுடன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (19). இவர் நேற்று தனது நண்பர் தினேஷ் (19) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வைகை அணையை சுற்றி பார்க்க வந்தனர். இருவரும் டூவீலரில் வீடு திரும்பும் போது ஜம்புலிபுத்தூர் பெரிய பாலத்தில் எதிரில் வந்த லோடுவேன் மோதியதில் இருவரும் பலத்த காயங்களுடன் தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்தல், உறுதிமொழி எடுத்தல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற பணிகளில் மகளிர் திட்ட அலுவலர் தலைமையில் க.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பொது மக்களுக்கு துண்டு பிரதிகள் வினியோகம் செய்யப்பட்டது. மக்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய உறுதிமொழி ஏற்றனர்.
ஆண்டிப்பட்டி வ.அண்ணாநகர் அருகே இன்று (மார்.22) மாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியே வந்த கார் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.82,480 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளதாக தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருநங்கைகள் தபால் அட்டை மூலம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.
2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடந்த 2 நாட்களாக வேட்பு மனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட கடந்த இரண்டு நாட்களாக எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் 3-வது நாளான இன்றும் (மார்.21) ஒருவரும் வேட்பு மனு தாக்கல் மேற்கொள்ளவில்லை என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் வள்ளி நகர் பகுதியில் இன்று 22.03.2024 வெள்ளிக்கிழமை வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல் குறித்தும் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் திருநங்கைகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை அடுத்து அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அல்லிநகரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியம்மாள் சக போலீசாருடன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஜெயம் நகர் பின்புறம் கருப்பசாமி கோயில் அருகே கூட்டமாக சிலர் அமர்ந்திருந்தனர். போலீசார் அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.அவர்களை சுற்றி வளைத்த போலீசார் சின்னசாமி, ராஜா, ராஜேஷ், கணேசன், அறிவழகன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
ஆண்டிபட்டி வேளாங்கன்னி மாதா பள்ளி, போடி ஜ.கா.நி.மெட்ரிக் பள்ளி, தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி ஆகிய இடங்களில் வருகின்ற 24 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் சம்மந்தப்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்குச் சாவடி அலுவலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.