Theni

News October 22, 2025

தேனி: வேலை தேடுபவர்களுக்கு அக்.24ல் வேலை உறுதி.!

image

தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்து உள்ளார். இம்முகாம் 24.10.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் வேலை தேடுபவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News October 22, 2025

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து கனமழை பெய்து வருதாலும், ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிகளில் வேடிக்கை பார்க்க செல்வது, செல்பி எடுப்பது மற்றும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

தேனி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்., இத பன்னுங்க

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 % முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தேனி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 22, 2025

தேனி: வாகன விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

image

தேனி மாவட்டம் கன்னிசேர்வைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்நாத் (16). இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தாத்தாவின் டூவீலரை எடுத்துச் சென்றுள்ளார். சின்னமனுார் ஹைவேவிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த மீடியனில் பைக் மோதி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ராம்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு (அக்.21) பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 22, 2025

தேனியில் ஒரே நாளில் 19 டன் குப்பைகள் அகற்றம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் உள்ள அரண்மனை தெரு பாரஸ்ட் ரோடு கடைவீதி சுதந்திர வீதி புதிய பேருந்து நிலையம் அக்கிரகாரம் பெருமாள் கோவில் தெரு தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 20ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 19 டன் குப்பைகள் சேர்ந்துள்ளனர். அதை பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அகற்றி உள்ளனர். என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 22, 2025

தேனி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

image

தேனி மக்களே BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி படித்து 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விரும்புவோர் <>bankofbaroda.bank.in க்ளிக் <<>>செய்து அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.டிகரி படித்தவருக்கு SHARE பண்ணுங்க.

News October 22, 2025

தேனி: நண்பரை பார்க்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

image

திண்டுக்கல், நிலக்கோட்டை தாலுகா, எழுவனம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் 30. தேவதானப்பட்டியில் தனது நண்பரை பார்ப்பதற்கு டூவீலரில் சென்றார். அட்டணம்பட்டி பிரிவு பைபாஸ் ரோடு பால்பண்ணை அருகே திரும்பும் போது, டூவீலர் மீது கார் மோதியது.பலத்த காயமடைந்த அசோக் குமார் பெரிய குளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News October 22, 2025

தேனியில் பா.ஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்

image

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி 27. பா.ஜ., மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர். அதே பகுதியில் மினரல் வாட்டர் விற்பனை கடை, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்.இரவில் முனியாண்டி கடை முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து, கடை பூட்டை உடைக்க முயற்சித்துள்ளார். மேலும் அலைபேசியில் முனியாண்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

News October 21, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 21.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கலைக் கதிரவன் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News October 21, 2025

தேனி: உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் போது நேர்ந்த விபரீதம்

image

கண்டமனுார் அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுகுமார் (32). இவர் நேற்று (அக்.20) வடபுதுப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பைக்கில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். தேனி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ராம்குமார் என்பவர் ஒட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் விஷ்ணுகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

error: Content is protected !!