India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(33). இவர் 200 செம்மறி ஆடுகளை 18ம்படி கருப்பசாமி கோவில் பகுதியில் தனியார் விளைநிலத்தில் கிடை அமர்த்தியுள்ளார். 4 நாட்களுக்குமுன் அதிகாலை ஆடுகள் இங்கும் அங்கும் ஓடுவதைஜெயக்குமார் பார்த்தபோது ஆட்டுக்கிடைக்குள் இருந்து சிறுத்தை ஒன்று ஓடியது.உள்ளே சென்று பார்த்தபோது 5 ஆடுகள் இறந்து கிடந்தன.
இந்தியாவிலேயே சனிபகவானுக்கான தனிக்கோயில் குச்சனூரில் தான் உள்ளது . இங்குள்ள கருவறை மூர்த்தியே சனிபகவான்தான். இங்குள்ள சனிக் கடவுள் சுயம்புவாக எழுந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு முன்பாக, சுரபி நதி ஓடுகிறது. இங்கு வந்து வழிபட்டால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் , குடும்பத்தில் உள்ள சிக்கல் நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை . மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.
குரூப் தேர்வுக்கு தயராகி கொண்டிருக்கும் தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் IV தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் 15.03.2025, 22.03.2025 மற்றும் 29.03.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. தங்களின் பெயரை 6379268661, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் .
குரூப் தேர்வுக்கு தயராகி கொண்டிருக்கும் தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் IV தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் 15.03.2025, 22.03.2025 மற்றும் 29.03.2025 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. தங்களின் பெயரை 6379268661, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் .
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 13) நீர்மட்டம்: வைகை அணை: 59.68 (71) அடி, வரத்து: 314 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 114.05 (142) அடி, வரத்து: 257 க.அடி, திறப்பு: 367 க.அடி, மஞ்சளார் அணை: 32.05 (57) அடி, வரத்து: 45 க.அடி, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 70.71 (126.28) அடி, வரத்து: 06 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 31.30 (52.55) அடி, வரத்து: 13 க.அடி, திறப்பு: இல்லை.
போடியை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் தான் மற்றும் தனது உறவினர்கள் சிலரிடம் போடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அவரது மனைவி சுதா ஆகியோர் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி மொத்தம் ரூ.32.4 லட்சம் மோசடி செய்ததாக தேனி எஸ்.பி சிவ பிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின் பெயரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தம்பதியர் மீது நேற்று (மார்.12) வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அருகில் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் உள்ளது. இங்கு டூவீலர் பழுது நீக்குதல் பயிற்சி மார்ச் 24 முதல் துவங்குகிறது. 18 வயது நிரம்பிய வேலை இல்லா ஆண்கள்,பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மதிய உணவு இலவசம். விவரங்களுக்கு.95003-14193 என்ற எண்ணில் அழைக்கலாம். தெரிந்த நண்பர்களுக்கு SHARE செய்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உதவுங்க.
தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள். கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை (வியாழன்) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு கடன் உதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று கோவை, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது .தற்போதைய நிலவரப்படி தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள். கடன் வழங்கும் சிறப்பு முகாம் நாளை (வியாழன்) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு கடன் உதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தெரிவித்து உள்ளார்.
Sorry, no posts matched your criteria.