India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாக்காளர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு உதவி மைய முகாம்களானது தேனி மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள 1226 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர்கள் தங்களது பகுதிகளிலே ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்யும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் புகார் அழைப்புகளை உடனடியாக அணுகி தீர்வு காணவும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள், மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு உடனடியாக விரைந்து சென்று தீர்வு காணும் வண்ணம் 8 கூடுதல் நான்கு சக்கர ”Quick Reaction Team” வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹ ப்ரியா துவக்கி வைத்தார்.

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <

தேனி மக்களே முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 18,000 வழங்கப்படுகிறது. இங்கு <
1.ஆதார் அட்டை
2.வீட்டு பில், வாக்காளர் அட்டை
3.மருத்துவசான்றிதழ்
4.பாஸ்போர்ட் புகைப்படம்
5.பிறப்பு சான்றிதழ் (தாய்)
இந்த ஆவணங்களை சமர்பித்து ரூ. 18,000/- சுலபமாக பெறலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

கம்பம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (65). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் மது அருந்தக்கூடாது என டாக்டர் அறிவுறுத்திய நிலையிலும் அசோகன் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி அதிகரித்துள்ளது. வலி பொறுக்காமல் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் போலீசார் வழக்கு (நவ.12) பதிவு.

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<

தேனியை சேர்ந்தவர் சிவா (25). இவர் அவரது பைக்கில் அவரது நண்பரான அருண் (32) என்பவரை அழைத்து வைத்துக் கொண்டு நேற்று (நவ.12) திண்டுக்கல் குமுளி பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். கோட்டூர் அருகே பைக் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் டிராக்டர் இவர்களது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு.

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்த பிளஸ்.2 பள்ளி மாணவி மகேஸ்வரி (17). இவர் நேற்று முன்தினம் பள்ளியில் வகுப்பு முடித்து தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள தனது அறைக்கு சென்ற மாணவி யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <

கம்பம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த 16 பெண் தொழிலாளர்கள் நேற்று (நவ.12) குமுளி அருகே 8.ம் மைலில் உள்ள ஏலத்தோட்டத்திற்கு ஜீப்பில் சென்றனர். 8.ம் மைல் அருகே சென்ற போது ஜீப் மீது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் மலர்கொடி, ராதா, சிட்டம்மாள், பிரியா, ரெஜினாதேவி, சவுந்தர்யா, ரோகினி, பாலம்மாள், மலர்கொடி, சுவேதா, வளர்மதி, அமுதா உட்பட 14 பெண் தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.