India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி உட்பட 8 மாவட்டங்களில் இன்று(ஜூன் 26) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கவும் வாய்ப்பு என தகவல்.
சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களில் தகுதியான நபர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தங்க தமிழ்ச்செல்வன், தேனி மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
தேனி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைப்பதற்கு 50% மானியம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா அறிவித்துள்ளார். மேலும் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூன்.24) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் மனுக்கள் இதுவரை 3 இடங்களில் மட்டும் பதிவு செய்து வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று புதிதாக 7 கணினிகள் அமைக்கப்பட்டு மனுக்கள் பதிவு செய்து வழங்கும் நடைமுறை பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் அதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடியால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தது பதிவு செய்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக 130 ஊராட்சி கிராமங்களில் நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நேற்று நடைபெற்றது. மக்களுடன் முதல்வர் முகாம் தேனி மாவட்டத்தில் ஜுலை மாதம் இரண்டாம் வாரத்தில் 5 ஊராட்சிகளுக்கு ஒரு முகாம் வீதம் 30 நாட்களில் 30 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை சார்பில் 172 பயனாளிகளுக்கு ரூ.7.59 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பயனாளிகளுக்கு வழங்கினார். இதில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் கூட்டம் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் மனு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.