India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தேனி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04546-250387 – 261403 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் காந்தி (60). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அப்பகுதியில் நடந்து சென்றபோது இவரை வழிமறித்த போதை ஆசாமிகள் சிலர் காந்தியை மிரட்டி அவரிடமிருந்த ரூ.2,200 மற்றும் அலைபேசியை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட ஜோதீஸ்வரன் (24), பஷீர் அஹமது (25), முகமது பைசல் (26) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

தேனியில் 8 துணை தாசில்தார்களை மாற்றி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார். புதிய விவரம்: சதிஷ்- பறக்கும் படை தேனி. பரமசிவம் – கண்காணிப்பாளர் மாவட்ட வழங்கல் அலுவலகம். பாண்டி- போடி மண்டல துணை தாசில்தார். ராமராஜ்-வட்ட வழங்கல் அலுவலர், பெரியகுளம். வளர்மதி- துணைதாசில்தார் உத்தமபாளையம். மாங்கனி -தலைமை உதவியாளர்(இபிரிவு). கணேஷ்குமார்-மண்டல துணை தாசில்தார் சின்னமனுார். குமரன்-கம்பம் வேலி ஒயினரி பி.லிட்

போடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு இன்று பயிற்சி வழங்கப்பட்டது. இதில் அந்தந்த தொகுதிகளில் அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கூடலூர் நகரம் என்.எஸ்.கே., பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளியில் நவ.01 இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. நடைபெற்ற முதல்வர் மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். வருவாய் அலுவலர் ராஜகுமார், உத்தமபாளையம் கோட்டாட்சியர் மு.செய்யது முகமது உடனிருந்தனர்.

தேனி மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <

தேனி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேற்று முன்தினம் அவரது நண்பர் முருகன் என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த டிராக்டர் இவர்களது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு (அக்.31) பதிவு

குள்ளபுரம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேந்தன். இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் அப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியில் விபத்து ஏற்படுத்தும் விதமாக அஜாக்கிரதையாக நிறுத்தப்பட்டு இருந்த பால் வண்டி மீது வெற்றிவேந்தன் சென்ற பைக் மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு (அக்.31) பதிவு.

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் www.rrbapply.gov.in இந்த தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். ரயில்வேயில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.