India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி அரசு ஐ.டி.ஐ.யில் ஏப்ரல்15 அன்று அப்ரண்டிஸ் பயிற்சிக்கு சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. இதில் அரசு, தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இம்முகாமில் 8,10ம் வகுப்பு, +2 கல்வித்தகுதி, ஐ.டி.ஐ.களில் படித்து தேர்ச்சி பெற்ற, தேர்ச்சியடையாதவர்கள், அதற்கு மேல் படித்தவர்கள் பங்கேற்கலாம். 6 மாதம் அடிப்படை பயிற்சி, ஓராண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று சான்றிதழ் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தில் அபிஷேகத்திற்கு வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. அந்த தேங்காயை போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் என்பவர் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தில் அபிஷேகத்திற்கு வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. அந்த தேங்காயை போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் என்பவர் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 11) நீர்மட்டம்: வைகை அணை: 56.96 (71) அடி, வரத்து: 111 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.40 (57) அடி, வரத்து: 25 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 91.51 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 37.10 (52.55) அடி, வரத்து: 10 க.அடி, திறப்பு: இல்லை.
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு பஸ் ஏறுவதற்காகப் பயணிகள் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த பாஸ்கரன் உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்தனர். காரை ஒட்டி வந்த கம்பத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் கிஷோர்குமார் 32 , கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டத்தில் இன்று 10.04.2025 வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (ஏப்.11) கீழ்க்கண்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1.மங்களாதேவி கண்ணகி கோயில்
2.குச்சனூர் சனீஸ்வரன் கோயில்
3.பூலாநந்தீஸ்வரர் சிவகாமி அம்மன் கோயில்
4.உத்தமபாளையம் ஞானாம்பிகை கோயில்
5.அனுமந்தன்பட்டி அனுமன் கோயில்
6.வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில்
7.கைலாசநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் நிச்சயமாக தேனி மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களை தரிசித்து மகிழ்ந்து உங்கள் நண்பர்களுக்கு Share செய்யுங்கள்..
Sorry, no posts matched your criteria.