India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மே7 முதல் மே 20 வரை பெண்களுக்கென இலவச சணல் பை தயாரித்தல் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-24 வயது உடையோர் கலந்து கொள்ளலாம் . இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள 04546- 251478, 9442758363 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சுய தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 15) நீர்மட்டம்: வைகை அணை: 56.30 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 94.95 (126.28) அடி, வரத்து: 5.08 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 38.50 (52.55) அடி, வரத்து: 8 க.அடி, திறப்பு: இல்லை.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனையாளர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
உத்தமபாளையத்தில் உள்ள ஒர் டீ கடையில் இதே ஊரை சேர்ந்த ராஜா, சுப்ரமணியன் என இருவர் வேலை செய்கின்றனர். இதில் ராஜாவை, கடையின் உரிமையாளர் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதற்கு சுப்ரமணியன் தான் காரணம் என நினைத்த ராஜா, நேற்று காலை சுப்ரமணியனை கத்தியால் முகம், கழுத்து, கை உள்ளிட்ட பல பகுதிகளில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். சுப்ரமணியனை தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று(ஏப்ரல்.14) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
பாவபுண்ணிய கணக்குகளை எழுதும் சித்திரபுத்திரன் நாயனாருக்கு காஞ்சிபுரத்தையடுத்து தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் மட்டுமே தனிக்கோவில் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரபுத்திர நாயனார் சித்ரா பௌர்ணமி அன்று பிறந்ததினால் அன்றைய தினத்தில் இங்கு வந்து வழிபட்டால் பாவங்கள் குறையும் என்பது ஐதீகம். இந்த கோவில் பற்றி தெரியாத நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 14) நீர்மட்டம்: வைகை அணை: 56.36 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 94.79 (126.28) அடி, வரத்து: 11.56 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 38.30 (52.55) அடி, வரத்து: 10 க.அடி, திறப்பு: இல்லை.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்ட இயந்திர ஆபரேட்டர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
பெங்களூரூவை சேர்ந்த கிஷோர்குமார் (44) அவரது மனைவி நித்யா (35) மகன்கள் ஜோஸ்வா (13), ஜோயல் (11) ஆகிய நால்வரும் நேற்று (ஏப்.13) போடிமெட்டு வழியாக காரில் கேரளா சென்று கொண்டிருந்தனர். பூப்பாறை செல்லும் ரோட்டில் அதிவேகமாக சென்ற கார் வளைவில் திரும்பிய போது, நிலை தடுமாறி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் கார் தீப்பற்றி முழுதும் எரிந்தது. நால்வரும் க.விலக்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE!
Sorry, no posts matched your criteria.