India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களின் சிறார்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்யும் KSB Portal-ல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2025-26ஆம் கல்வியாண்டிற்கு MBBS / BDS மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Website – www.desw.gov.in மற்றும் DGR Website – www.dgrindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற புதிய திட்டத்தில் தனிநபர் திட்ட தொகை வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 04546-260995, 9445029480 என்ற தாட்கோ அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று (ஆக.4) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் உதவி தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 263 மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
➡️ தேனி மாவட்டத்தில் நாளை (ஜூலை.12) குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
தேனி மக்களே, தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு ஜூலை.10 முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை <
தேனி மாவட்டத்தில் ஜூலை.12 ஆண்டிபட்டி கோரையூத்து சமுதாயகூடம், பெரியகுளம் சருத்துப்பட்டி, தேனி காட்டுநாயக்கன்பட்டி, போடி பெருமாள் கவுண்டன்பட்டி, உத்தமபாளையம் டி.பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறும். இதில், ரேஷன் கார்டில் பெயர், முகவரி, போன் நம்பர், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். மிஸ் பண்ணிடாதீங்க SHARE பண்ணுங்க.
தேனி , அரண்மனைபுதூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரது மகள் முத்துமணி. இவர் திருமணம் முடிந்து கணவர் வீட்டார் வரதட்சனை கேட்டு தொல்லை செய்ததால், அவரது தந்தை வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் மன உளைச்சலில் இருந்த முத்துமணி அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்பு சம்மந்தமாக தந்தை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் தேனி கிளை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பதவிகளை சரண்டர் செய்யாதே, துணை சுகாதார நிலையம் பராமரிப்புக்கான நிதியை முறையாக வழங்கிடு, காலி பணியிடங்களை நிரப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முழங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட தலைவர் வசந்தா பொருளாளர் எலியட், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Manager – Loan Approval)க்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊதியமாக 15,000 வழங்கபடுகிறது. டிகிரி படித்திருந்தால் போதும் இதற்கு விண்ணபிக்கலாம். இந்த<
Sorry, no posts matched your criteria.