India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04546262112 அணுகலாம். SHARE பண்ணுங்க

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நகர்புற வாழ்வாதார இய்க்கம் ஆகியவை சார்பில் வருகிற நவம்பர் 8 ந் தேதி கொடுவிலார் பட்டியில் உள்ள கம்மவார் சங்க மெரிக் கலை அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்து உள்ளார். வேலைநாடும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவலை ஷேர் செய்யுங்க.

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ராமசாமி (45). மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் முருகன், ராமசாமியின் கழுத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் முருகன் மீது வழக்கு (நவ.3) பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தாண்டு நடைபெற உள்ள தேசிய இந்திய பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் தமிழக விளையாட்டு விடுதி கபடி அணி பங்கேற்க உள்ளது. இப்போட்டிக்கான வீரர்கள் தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.3) துவங்கியது. போட்டிகள் 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடக்கிறது. தேனி, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்ட விளையாட்டு விடுதிகளில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். இன்று போட்டிகள் முடிவடைகிறது.

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் நவ.20 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

வாக்காளர் திருத்த பட்டியல் சிறப்பு தீவிர முகாம் இன்று(நவ.4) முதல் 04.12.2025 வரை வீடுவீடாக சென்று கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ரஞ்ஜீத் சிங்தெரிவித்துள்ளார். மேலும் உதவிக்கு 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் அழைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கம்பம் பகுதியை சேர்ந்த மாரிசாமி (42) நேற்று முன்தினம் (நவ.2) கம்பம் பைபாஸ் சாலையில் இரட்டை மாட்டுவண்டியில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜன் என்பவர் ஓட்டி வந்த கார், இவரது மாட்டு வண்டி மீது மோதியது. இந்த விபத்தில் மாரிச்சாமி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மாடுகளும் காயமடைந்த நிலையில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தேனி, காமாட்சிபுரம்,மார்க்கையன்கோட்டை , வீரபாண்டி, தேவாரம், கடமலைக்குண்டு ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(நவ.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர் திருத்த பட்டியல் சிறப்பு தீவிர முகாம் நாளை 4.11.2025 முதல் 04.12.2025 வரை வீடுவீடாக சென்று கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது என, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ரஞ்ஜீத் சிங் இன்று தெரிவித்துள்ளார். மேலும் உதவிக்கு 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் அழைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (03.11.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 228 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் பொதுமக்களிடமிருந்து அளிக்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.