India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளைக்குள் SIR படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் டிச.11 வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இதனையடுத்து கடைசி நாள் வரை காத்திருக்காமல் படிவங்களை பூர்த்தி செய்து BLOகளிடம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தேவதானப்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று (டிச.2) அன்பழகனின் மகன் சத்தியநாதன் அன்பழகனின் பேரன் ஆகியோர் பாண்டியிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவதானப்பட்டி போலீசார் அன்பழகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த செல்வம், சாம் ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். சண்டையை முத்துச்சாமி விலக்கி விட்ட நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து அரிவாளால் முத்துசாமியை தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் தாக்கிய இருவர் மீதும் வழக்கு (டிச.2) பதிவு.

தேனி மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

தேனி, கோட்டைப்பட்டியை சேர்ந்த பானுமதி (30) அரசு ஐடிஐ.,யில் பிட்டர் படித்து அப்ரண்டிஸாக அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் 2019ல் பயிற்சி பெற்றார். இவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றும் பழனிவேல் என்பவர் ரூ.6.30 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். தேனி போலீசார் பழனிவேல் மீது நேற்று (டிச.2) வழக்கு பதிவு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 8 இன்று மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

தேனி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <

தேனி, சீலையம்பட்டியை சேர்ந்த சதீஷ்க்கும் (35). இவரது மனைவி முனீஸ்வரிக்கும் அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முனீஸ்வரி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சதீஸ், முனீஸ்வரி வீட்டிற்கு சென்று அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்தும், அவர் வர மறுத்தாதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சதீஸ் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் விசாரனை.

தேனியில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முழுவதும் ஊதா நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரும் நின்று ஆச்சரியபட்டு செல்வதை காண முடிகிறது.

தேனியில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முழுவதும் ஊதா நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரும் நின்று ஆச்சரியபட்டு செல்வதை காண முடிகிறது.
Sorry, no posts matched your criteria.