Theni

News December 4, 2025

தேனி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

தேனி மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 4, 2025

தேனி: குறைந்த விலையில் சொந்த வீடு வேண்டுமா?

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தேனியில் 1000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் .SHARE பண்ணுங்க.

News December 4, 2025

தேனி: பாத்ரூமில் வழுக்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (75). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாத்ரூம் சென்ற போது அங்கு தவறி வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.3) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News December 4, 2025

தேனி: ரூ.85,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

image

தேனி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.85,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்யவும்.

News December 4, 2025

தேனி: டூ வீலர் வைத்திருப்போர் கவனத்திற்கு…மக்களே உஷார்

image

தேனியில் சமீப காலங்களாக குடியிருப்பு பகுதி, பேருந்து நிறுத்தம், சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். இதேபோல் போடி, பழனிசெட்டிபட்டி, அல்லிநகரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் திருட்டு நடக்கிறது. ஆகையால் நள்ளிரவில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி CCTV காட்சிகளை சேகரித்து திருடர்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை.

News December 4, 2025

புத்தகத் திருவிழா லோகோ வடிவமைத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

image

தேனி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா விரைவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து புத்தக திருவிழாவிற்கான இலட்சினையை (LOGO) கருத்துகளுடன் சிறந்த முறையில் வடிவமைத்து அனுப்பும் நபருக்கு ரூ.10,000‌ பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தயார் செய்த இலச்சினையை thenipro@gmail.com என்ற இணைய தள முகவரிக்கு நாளைக்குள் (05.12.2025) அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

News December 4, 2025

தேனி: வாக்காளர் பட்டியலில் 1.30 லட்சம் பேர் நீக்கமா?

image

தேனி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் 11.30 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். நேற்று வரை இவர்களில் 11.27 லட்சம் பேருக்கு சிறப்பு திருத்த படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 9.67 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்து பி.எல்.ஓ.,க்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1.30 லட்சம் பேர் முகவரியில் வசிக்காதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.

News December 4, 2025

தேனி: 10th தகுதி., மத்திய அரசில் 25487 காலியிடங்கள்!

image

தேனி மக்களே, மத்திய அரசின் 25487 Constable (GD) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். மத்திய அரசின் அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 4, 2025

தேனியில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை வியாழக்கிழமை (04.12.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர் புரம், சூலபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள செய்தியை ஷேர் செய்யுங்க.

News December 4, 2025

கூடலூர்: தாயை தாக்கிய மகன் கைது

image

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மூக்கம்மாள் (75). இவரது மகனான இளங்கோவனுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் இளங்கோவன் கொடுத்த பணத்தினை தனது பேத்தியின் பெயரில் தபால் நிலையத்தில் உள்ள கணக்கில் போட்டுள்ளார். மீண்டும் அந்த பணத்தைக் கேட்டு இளங்கோவன் தனது தாயை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் இளங்கோவனை போலீசார் கைது (டிச.2) செய்தனர்.

error: Content is protected !!