India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கூடலூரில் காவல் ஆய்வாளர் வனிதாமணி தலைமையில், தமிழக கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில் அவ்வழியே காரில் வந்த வாகனத்தை சோதனை செய்த போது, வட மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோனா ராம், பிஜலா ஆகிய இரு இளைஞர்கள் 340 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வர காவல் ஆய்வாளர் தலைமையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை <

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (65). இவருக்கு கடந்த பத்து வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த மூதாட்டி நேற்று (அக்.30) அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

தேனி மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகே 2 தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (அக்.30) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வி.ஏ.ஓ அளித்த புகாரின் படி ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் பூதிப்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் காலையில் நடைபயிற்சியில் இருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தேனி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <

பெரியகுளம் அருகே பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியை சிறுமியின் உறவினரான பரமேஸ்வரன் என்பவர் 2024.ல் பாலியல் வன்புணர்வுசெய்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் பரமேஸ்வரனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (அக்.30) பரமேஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

பெரியகுளம் தாலுகா டி.வாடிப்பட்டியை சேர்ந்த ஜெயச்சித்ரா என்பவர் தனது தோட்டத்து வீட்டில் உள்ள கோழிகள் கூண்டில் பாம்பு இருப்பதாக நேற்று (அக்.30) பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கோழி கூண்டில் இருந்த இரு தலை மணியன் பாம்பினை லாவகமாக பிடித்து அதனை தேவதானப்பட்டி வனச்சரகம் வனவரிடம் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.