Theni

News November 1, 2025

கூடலூரில் 340 கிலோ புகையிலை பறிமுதல்

image

கூடலூரில் காவல் ஆய்வாளர் வனிதாமணி தலைமையில், தமிழக கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில் அவ்வழியே காரில் வந்த வாகனத்தை சோதனை செய்த போது, வட மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோனா ராம், பிஜலா ஆகிய இரு இளைஞர்கள் 340 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வர காவல் ஆய்வாளர் தலைமையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News October 31, 2025

தேனி: CHENNAI மெட்ரோவில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை

image

தேனி மக்களே, சென்னை மெட்ரோவில் Supervisor மற்றும் Technician பணியிடங்களுக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. ITI மற்றும் DIPLOMA முடித்தவர்கள் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி, மதுரையில் நவ.13 & 14 ல் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வேலை பெறலாம். இதற்கு சம்பளமாக ரூ.30,000 வரை வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News October 31, 2025

தேனி CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News October 31, 2025

தேனி: 65 வயது மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (65). இவருக்கு கடந்த பத்து வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த மூதாட்டி நேற்று (அக்.30) அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

News October 31, 2025

தேனி: GAS சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வீட்டிற்கு வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்களில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News October 31, 2025

ஆண்டிபட்டி அருகே அடையாளம் தெரியாதவர் உயிரிழப்பு

image

ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகே 2 தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (அக்.30) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வி.ஏ.ஓ அளித்த புகாரின் படி ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 31, 2025

தேனி: வாக்கிங் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

image

தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் பூதிப்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் காலையில் நடைபயிற்சியில் இருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

News October 31, 2025

தேனி கிராமப்புற வங்கியில் வேலை வேண்டுமா… APPLY

image

தேனி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 31, 2025

தேனி:10 வயது சிறுமிக்கு உறவினரால் நேர்ந்த கொடுமை

image

பெரியகுளம் அருகே பெற்றோரை இழந்த 10 வயது சிறுமியை சிறுமியின் உறவினரான பரமேஸ்வரன் என்பவர் 2024.ல் பாலியல் வன்புணர்வுசெய்தார். இதுகுறித்த புகாரில் போலீசார் பரமேஸ்வரனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (அக்.30) பரமேஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

News October 31, 2025

தேனி: கோழி கூண்டில் சிக்கிய வினோத பாம்பு

image

பெரியகுளம் தாலுகா டி.வாடிப்பட்டியை சேர்ந்த ஜெயச்சித்ரா என்பவர் தனது தோட்டத்து வீட்டில் உள்ள கோழிகள் கூண்டில் பாம்பு இருப்பதாக நேற்று (அக்.30) பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கோழி கூண்டில் இருந்த இரு தலை மணியன் பாம்பினை லாவகமாக பிடித்து அதனை தேவதானப்பட்டி வனச்சரகம் வனவரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!