India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் இன்று 17.09.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தேனி மக்களே; 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) SHARE IT.
தேனி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:04546-254368. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.
கடந்த லோக்சபா தேர்தலின் போது 4 சட்டசபை தொகுதிகளில் 563 அமைவிடங்களில், 1226 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போதைய கணக்கெடுப்பு, மறுவரையறுதல் பணிக்குப்பின் 591 அமைவிடங்களில் 1394 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 28 அமைவிடங்கள் 168 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்துள்ளன. அதிகபட்சமாக பெரியகுளம் (தனி) தொகுதியில் 14 அமைவிடங்கள் 62 ஓட்டு சாவடிகள் அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் செப்.19 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் கலந்து கொள்ளவும். மேலும் தகவலுக்கு இந்த <
மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் இன்று தேனி கம்மவார் சங்க தொழில்நுட்பகல்லுாரி வளாகத்தில் நடைபெறுகிறது. பொறியியல், மருத்துவம், வேளாண், தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், கலை, அறிவியல், சட்டம், தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். கடன் பெற விரும்பும் மாணவர்கள் முகாமிற்கு வந்து பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தகவல். SHARE IT.
தேனி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செப். 17ம் தேதி நடைபெறும் விவரங்கள். இதில், தேனி அல்லிநகரம் நகராட்சி 17, 18 வார்டுகளுக்கு மல்லிகை மஹாலில் முகாம், போடி நகராட்சி 11, 13 வார்டுக்கு சேது மறவர் திருமண மண்டபத்தில் முகாம், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் வீரு நாகம்மாள் மண்டபத்தில் முகாம், பெரியகுளம் அருகே சருத்துபட்டியில் ஜெயமருதை மஹாலில் முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கபட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும், பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு மாவட்ட அதிகாரியை 04546-262112 அணுகலாம். SHARE பண்ணுங்க!
தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. SAVE பண்ணுங்க தேனி மக்களே!
⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676
⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100
⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946
⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517
SHARE பண்ணுங்க!
தேர்தல் ஆணைய உத்தரவின் படி தேனி மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு உள்ள ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட 28 அமைவிடங்கள், 168 ஓட்டுசாவடிகள் அதிகரித்துள்ளன.மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கும் பணி முடிந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.