India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண்மை அரசு துறை சார் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் எனவும் ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) டெக்னீசியன் பிரிவில் 17 காலியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 18-28 வயதுடைய பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் cbri.res.in என்ற இனையம் மூலம் 15.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், இதனை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..
தஞ்சாவூர் மாவட்டம், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 589 கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நடப்பாண்டு சொத்துவரி,குடிநீர் கட்டணம், தொழில்வரி,தொழில் உரிமம் கட்டணம் 31-க்குள் செலுத்திட வேண்டும்.நிலுவை மற்றும் நடப்பாண்டிற்கான வரியினங்களை ஊராட்சி அலுவலகத்தில், வரிவசூல் வீட்டுவரி https://vptax.tnrd.gov.in VP Tax Online Portal, பேட்டிஎம், ஜீபே, செலுத்தலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் வருகிற 29ஆம் தேதி பெரியார் மணியம்மை கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் 8ம் ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பீ.இ கல்வி தகுதிகளுக்குரியவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தலைவர் மேனாள் நீதிபதி, நீதியரசர் முனைவர்.ச.தமிழ்வாணன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் புதன்கிழமை (26.03.2025) காலை 11.00 மணியளவில் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கான நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் பட்டய சான்றிதழ் படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது. இந்த பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னர் ராஜராஜ சோழனுக்கு 100 அடி உயரம் சிலை அமைக்க வேண்டும் என ஒரத்தநாடு எம்.எல்.ஏ ஆர்.வைத்திலிங்கம் இன்று (மார்ச்.25) தமிழக சட்டமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு நிச்சயம் வாய்ப்பு இருந்தால் சிலை அமைப்பதற்கான நடவடிக்கையை, இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும் என்றார் அவர். ஷேர் !
TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் (JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க…
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் மார்ச்.22ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற இருந்தது. ஒரு சில நிர்வாக காரணங்களால் நடைபெறாமல் போனது. இந்நிலையில் வரும் மார்ச்.29ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். கிராம மக்களுக்கு SHARE பண்ணுங்க..
தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் விடுமுறையை வேலை நாளாக ஆட்சியர் அறிவித்ததாக வதந்தி பரவியது. அதாவது, மாசிமக விழாவுக்கு கடந்த 12ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 29ஆம் தேதி பணி நாளாக ஆட்சியர் அறிவித்தார். இந்நிலையில், மார்ச் 29ஆம் தேதி ரம்ஜான் கிடையாது 31ஆம் தேதி தான் ரம்ஜான் பண்டிகை என உண்மை சரிபார்பகம் உரிய விளக்கம் அளித்தது. இதை SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.