Thanjavur

News April 17, 2025

தஞ்சை: நிலுவை மனுக்கள் குறித்து ஆலோசனை கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம்  தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று (17.04.2024) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் தஞ்சாவூர் வருகையின் போது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள், மக்களுடன் முதல்வர் முகாம்களில் பெறப்பட்ட நிலுவை மனுக்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

News April 17, 2025

தஞ்சை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கொள்முதல்

image

தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக நடப்பு 2025-26-ம் ஆண்டில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நன்கு சுத்தம் செய்து எடுத்துவர வேண்டும். ஈரப்பதம் 12% க்குள் இருக்குமாறு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 17, 2025

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள STATE BANK OF INIDA வங்கியில் 30 General Housekeeper காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12th படித்த 25 வயது முதல் 30 வயது வரை உள்ள இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 31க்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட மூவர் பணியிட மாற்றம்

image

திருவையாறு, நடுக்காவேரியில் விஷம் குடித்து இறந்த சகோதரிகள் வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஷர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்த நிலையில், நேற்று ஏப்ரல் 16 புதன்கிழமை நடுக்காவேரி காவல் நிலையத்தில் தலைமை காவலர் மணிமேகலை, உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள் மற்றும் காவலர் சசிகுமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

தஞ்சை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஏப்.16) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

News April 16, 2025

தஞ்சையில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>tnrd.tn.gov.in <<>>வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்…

News April 16, 2025

தஞ்சை: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள ( Training Centre Manager) 90 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News April 16, 2025

தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடை காலம் தொடக்கம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில், 150 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிப்பது வழக்கம். ஆனால் தற்போது மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவித்துள்ளனர்.

News April 16, 2025

தஞ்சை: கோழிப்பண்னையில் தீ விபத்து

image

தஞ்சை, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (48) என்பவர் பர்மா காலனி என்ற இடத்தில் கொட்டகை அமைந்து 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!