Thanjavur

News October 20, 2024

கும்பகோணத்தில் ரயில் மோதி ஒருவர் பலி

image

கும்பகோணம் மாத்தி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் விஜயக்குமார். இசைக்கலைஞரான இவர் கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் உட்கார்ந்து இருந்தார். அப்போது செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயகுமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

News October 20, 2024

காவலர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்

image

தஞ்சாவூா் – பட்டுக்கோட்டை சாலையில் கறம்பியம் அருகில் எதிரில் வந்த லாரி மோதிய விபத்தில் தஞ்சாவூர் சிறப்பு உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்தத் துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.

News October 20, 2024

சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு; 25 லட்சம் நிவாரணம்

image

தஞ்சாவூர், பாப்பா நாடு சாலை விபத்தில் இறந்த சிறப்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விபத்தில் இறந்த உதவி ஆய்வாளர் செந்தில்குமார் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என கூறினார்.

News October 19, 2024

ஒரத்தநாடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய வாலிபர் ஒருவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இவர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 9 வயதுடைய பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லைஅளித்ததாகசம்பந்தப்பட்ட மாணவியின் தாயார் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

News October 19, 2024

தஞ்சையில் 710 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

image

சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக கும்கோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்கு திரும்ப அக்.20, 21ஆகிய நாட்களில் சென்னை மற்றும் பிற தடங்களுக்கு செல்ல 710 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என  எனகும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் ரா.பொன்முடி தெரிவித்துள்ளார்.

News October 19, 2024

பாபநாசம் அருகே தம்பதியிடம் வழிப்பறி

image

பாபநாசம் அருகே கடந்த 17ஆம் தேதி நள்ளிரவு பைக்கில் சென்ற தம்பதியிடம் மூன்று முகமூடி அணிந்த நபர்கள் அரிவாளைக் காட்டி நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர். சரவணன், அவரது மனைவி உஷா, மகனுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது, பூண்டி மின்நிலையம் அருகே இவர்களிடம் 5 பவுன் தாலிச் செயின், 4 கிராம் தோடு ஒரு ஜோடி, ரூ. 20 ஆயிரம் ஆகியவை பறித்து சென்றதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். 

News October 18, 2024

பிராணிகள் வதை தடுப்பு சங்க மேலாண்மை கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்  தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் (SPCA) மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்க மேலாண்மை குழு கூட்டம் இன்று (18.10.2024) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்.

News October 18, 2024

தஞ்சையில் கைவினை பொருள் பயிற்சி வகுப்பு

image

தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அருங்காட்சியக வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் தஞ்சாவூர் கைவினை பொருட்கள் ஒன்றான நெட்டி வேலைப்பாடு கைவினை பொருட்கள் பயிற்சி வகுப்பு நாளை 19.10.2024 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. பயிற்சி கட்டணம் ரூபாய் 100. முன்பதிவிற்கு httpd/thanjavurtourism.org என்ற இணையத்தை பயன்படுத்தவும்.

News October 18, 2024

ரயில்வே தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

image

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்திலுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் சனிக்கிழமை (அக்.19) ரயில்வே தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் தொடங்கப்படவுள்ளது. என இந்த மையத்தின் மதியுரைஞா் வெ. சுகுமாரன் தெரிவித்துள்ளாா்.

News October 18, 2024

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

திருவையாறு, கரந்தை, மேலதிருப்பூந்துருத்தி, நாஞ்சிக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்.19) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், ஆவிக்கரை, கண்டியூர், செங்கமேடு, பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, செம்மங்குடி, கரந்தை, அரண்மனை, நாஞ்சிக்கோட்டை, காவேரி நகர், இபி காலனி உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

error: Content is protected !!