Thanjavur

News October 23, 2024

முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை

image

தஞ்சை, ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன் குடிகாடு பகுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பேய்கரும்பன் கோட்டையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மைத்துனர் பன்னீர்செல்வம் என்பவரது வீட்டில் ஆட்கள் இல்லாத காரணத்தினால் உறவினர்களை வைத்து கடப்பாரையால் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

News October 23, 2024

ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

image

ஒரத்தநாடு அடுத்த உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் இல்லத்தில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னையில்அவர் குடியிருக்கும் எல்எல்ஏ விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 2011-16 காலத்தில் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரையடுத்து தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

News October 23, 2024

தஞ்சை அருகே பட்டு வேட்டி – சேலைகள் திருட்டு

image

திருவோணத்தை அடுத்த நெய்வேலி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிக்கண்ணு(82) – லட்சுமி(73) தம்பதி. சம்பவத்தன்று இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். பின்னர் மறுநாள் வீடு திரும்பிய போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த ரூ.9 ஆயிரம், 35 பட்டுசேலைகள், 25 பட்டு வேட்டிகள் உள்ளிட்ட சில பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 22, 2024

தஞ்சையில் இன்று மின்தடை

image

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மருத்துவக்கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், மாதாகோட்டை, வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ரெட்டிப்பாளையம் ரோடு, ஜெபமாலைபுரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 21, 2024

தஞ்சை மாவட்டத்தை பற்றிய முக்கிய தகவல்கள்

image

தஞ்சாவூர் எழில் கொஞ்சும் இயற்கையில் மட்டுமில்லாமல், பண்பாடு ரீதியிலும் மிகவும் செழிப்பான மாவட்டமாகும். தமிழகத்தின் மிக பழமையான மாவட்டங்களில் ஒன்றாக விளங்கும் தஞ்சையில் 2 மாநகராட்சிகள், 9 தாலூகாக்கள் மற்றும் 906 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. சுமார் 26 லட்சம் மக்கள் தொகை கொண்ட தஞ்சை மாவட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தஞ்சை என்றால் உங்கள் ஞாபகத்திற்கு வருவது என்ன? SHARE !

News October 21, 2024

மக்கள் குறைதீர் முகாமில் 381 புகார் மனுக்கள் 

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்க் கூட்டத்தில் பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 381 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.  மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

News October 21, 2024

தஞ்சை மாவட்டத்திற்கு ‘ஆரஞ்சு அலர்ட்’

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் லேசாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சற்றுமுன் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தஞ்சை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது, தஞ்சாவூர், ராமாபுரம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பேராவூரணி, திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 21, 2024

தஞ்சையில் 17 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தஞ்சாவூர் கோடியம்மன் கோவிலில் இன்று 17 ஜோடிகளுக்கு இலவச திருமண நடைபெற்றது. தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில், மத்திய மாவட்ட செயலாளரும் – திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News October 20, 2024

தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 திருநங்கைகள் கைது

image

சென்னை சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமார் (46). இவர் தொழில் சம்பந்தமாக தஞ்சாவூர் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு காரில் சென்றுள்ளார். அப்போது வளம்பக்குடி அருகே இயற்கை உபாதைக்காக காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் 50,000 ரொக்கம், தங்க செயின் வழிப்பறி செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரபியா, மயூரி, தேவயாணி, காமரசவள்ளி ஆகிய நான்கு திருநங்கைகளை கைது செய்தனர்.

News October 20, 2024

தஞ்சை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-23 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT

error: Content is protected !!