Thanjavur

News October 25, 2024

மெய்சிலிர்க்க வைக்கும் தஞ்சாவூர் அரண்மனை

image

தஞ்சை அரண்மனை கி.பி 1650-ல் மராத்தியா் மற்றும் நாயக்கா்களால் கட்டப்பட்டது. இது பெரியக்கோட்டை மற்றும் சின்னக்கோட்டை என்று இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை 110 ஏக்கா் பரப்பளவில் தஞ்சை நாயக்கா்களின் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையில், ஒரு நூலகம், அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் ஆகியவையும் அமைந்துள்ளன. நீங்கள் தஞ்சை அரண்மனைக்கு சென்றது உண்டா? SHARE!

News October 25, 2024

புதுக்குடி அருகே விபத்தில் இருவர் பலி

image

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை புதுக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென்று ஆடு வந்துள்ளது. ஆட்டின் மீது கார் மோதாமல் இருக்க விக்னேஸ்வரன் காரை திருப்பியுள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். விக்னேஷ்வரன், மகள் யாழினி இருவரும் உயிரிழந்தனர். காயத்ரி என்பவர் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. 

News October 24, 2024

மாவட்ட அளவிலான தடுப்புப்படை உறுப்பினர்கள் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்  தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) குறித்த மாவட்ட அளவிலான தடுப்புப்படை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

News October 24, 2024

தஞ்சை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

தஞ்சாவூர் மேலஅலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் தர்ஷன் (32). இவரது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்ணப்பூசும் தொழிலாளி குணசேகரன் (42) தனது பைக்கை தொடர்ந்து நிறுத்தி வந்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு கடந்த 2022 மார்ச் மாதம் குணசேகரன் தர்ஷனை கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குணசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

News October 24, 2024

பட்டுக்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி

image

உலக போலியோ விழிப்புணர்வு தினமான இன்று(24.10.24) பட்டுக்கோட்டையில் மனோரா ரோட்டரி சங்கம் சார்பில்  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லாரல் மேல்நிலைப்பள்ளி , ஆலத்தூர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

News October 24, 2024

கும்பகோணத்தில் 2 இளைஞர்கள் கைது

image

கும்பகோணம் ரயில் நிலையத்தில் இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற 2 பேரை ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர். சிவராஜ் என்பவரை தாக்கி ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியைப் பறித்த 2 பேர், தாமஸ், பிரவீன், கைது செய்யப்பட்டு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News October 24, 2024

தஞ்சை பெரிய கோயிலில் ரூ. 48. 77 லட்சம் காணிக்கை

image

தஞ்சை பெரிய கோவில் உண்டியல்கள் மாதந்தோறும் , எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், 11 உண்டியல்கள் அறநிலையத் துறை அலுவலர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன. இப்பணியில் வங்கி ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதன் மூலம் பக்தர்கள் ரூ. 48 லட்சத்து 77 ஆயிரத்து 462 ரொக்கமும், 35 கிராம் தங்கமும், 302 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியது தெரியவந்துள்ளது

News October 23, 2024

மத்திய போக்குவரத்து துறை அமைச்சருடன் தஞ்சை எம்.பி சந்திப்பு

image

டெல்லியில் இன்று தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நித்தின் கட்கரியை நேரில் சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான பல்வேறு சாலை திட்டங்கள் மற்றும் திருவையாறு சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் புதிய உயர்மட்ட பாலம் அமைத்திடவும் கோரிக்கை மனுவை அளித்தார். 

News October 23, 2024

பூதலூர் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

image

பூதலூர் அருகே இந்தளூர் வெண்ணாற்றில் மணல் எடுப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் பூதலூர் சப் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொழுது அங்கு 5 மாட்டு வண்டிகளில் மணல் எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 23, 2024

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அக்டோபர்-23 (இன்று) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!