India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினர் மற்றும்உறுப்பினர் சார்ந்த நபர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியுடையவர்கள் ஆவணங்களுடன் தனி தாசில்தார் சமூக பாதுகாப்புத்திட்டம் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.
விளார் கலைஞர் நகரை சேர்ந்தவர் குளோரி. இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒரு மர்மநபர் குளாரி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இது குறித்த குளோரி தஞ்சை தமிழ்பல்கலைக்கழகம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்கின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று (அக்.27) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கலை பண்பாட்டுத்துறை அரசு கவின் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர்களின் கவின் கலைக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளா்களை அனைத்து பணிகளிலும்,14 முதல் 18 வயதுடைய வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் பணியமா்த்துவது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு தொழிலாளா்கள் பணியமா்த்துவோர் மீது குழந்தை தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . குழந்தை தொழிலாளர்கள் பற்றி புகார் அளிக்க 1098 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடந்த 10.12.20211 அன்று இம்மானுவேல் என்பவர் சிலரால் வெட்டிக் கொள்ளப்பட்டார். இந்த வழக்கில் தஞ்சாவூர், E.B காலனி, சேர்ந்த சுகுமார் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். கடந்த 12 வருடங்களாக மேற்படி நபர் காவல்துறையால் தேடப்பட்டு வந்துள்ளார். தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில் கடந்த 24.10.2024 அன்று தனிப்படையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
தஞ்சை கோட்ட முதல்நிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சையில் தபால் குறைதீர் கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. தஞ்சை தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், தபால்துறை சார்ந்த குறைகள் இருப்பின் பொதுமக்கள் நேரடியாக குறைதீர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து அக்.28 முதல்225 கூடுதல் பேருந்துகளும், 29ஆம் தேதி 730 கூடுதல் பேருந்துகளும், 30ஆம் தேதி 680 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். இதேபோல் திருச்சியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 570 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் தீ காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு வார்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 20 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பெரிய கோயில் வாசலில், ரூ.5 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் உதவி மையம் மற்றும் சுற்றுலாத் தகவல் மையத்தை, மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் நேற்று திறந்துவைத்தார். இந்த மையத்தில், மாவட்டத்திற்குட்பட்ட புவிசார் குறியீடு பொருட்கள், வழித்தடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களின் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.