Thanjavur

News October 31, 2024

தஞ்சை மக்களே பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுங்கள்

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாப்படும் நிலையில், பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தஞ்சை மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். SHARE IT.

News October 30, 2024

கடந்த 24 மணி நேரத்தில் 4,059 பேருந்துகள் இயக்கம்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளும், சிறப்பு பேருந்துகள் 1,967 என மொத்தம் 4,059 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 2,31,363 பயணிகள் பயணித்துள்ளனர்.

News October 30, 2024

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விபரங்களுக்கு 94433 31190 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

News October 29, 2024

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 29, 2024

தஞ்சை மாவட்ட காவல்துறை அறிவுரை

image

பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது கவனத்துடன் செல்லவும், தீபாவளி தள்ளுபடி என்ற பெயரில் கைப்பேசி சமூக ஊடகங்களில் வரும் பொய்யான குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்கும் போது கவனமாக அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், ஒலி எழுப்ப தடை செய்யப்பட்ட இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும் என பல்வேறு தஞ்சை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News October 29, 2024

தஞ்சை மாவட்ட மக்களின் கவனத்திற்கு

image

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் எண் 06191 தாம்பரம் -திருச்சி சிறப்பு ரயில் (செங்கல்பட்டு,விழுப்புரம் சிதம்பரம்,சீ ர்காழி,கும்பகோணம், மயிலாடுதுறை,தஞ்சை) முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட ரயிலை இப்பகுதி மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும். இன்று முதல் நவ.2 வரை இயக்கப்படுகிறது. மாலை 3.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு திருச்சி சென்றடையும். 

News October 29, 2024

தஞ்சையில் கந்தசஷ்டி விழா 

image

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 1ம் தேதி துவங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. முருகக் கடவுள் குடிகொண்டுள்ள அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் கந்த சஷ்டி விழா வருகின்ற நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, அணுக்ஞை வாஸ்து சாந்தியுடன் துவங்கி 12 -11- 2024 யதாஸ்தானம் சேரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது

News October 28, 2024

கும்பகோணம் அருகே 5 பேருக்கு அரிவாள் வெட்டு

image

கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (42). இவர், நேற்று புறவழிச்சாலையில் உள்ள மதுபானக்கடையில் மதுபாட்டில் வாங்க சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் ராஜேஷை கிண்டல் செய்தனர். இந்நிலையில், தன்னை கிண்டல் செய்தவர்களை தட்டி கேட்க தனது தம்பியை அழைத்துள்ளார். அப்போது எதிர்தரப்பினர் 15 பேர் ஒன்று கூடி ராஜேஷ், அவரது சகோதரர் சிவசங்கரன் உட்பட 5 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

News October 28, 2024

தஞ்சையில் நிரம்பி வழியும் பொதுமக்கள்

image

தஞ்சாவூர் மற்றும் தஞ்சாவூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் அனைவரும் தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட நகை மற்றும் ஜவுளி மற்றும் வெடிகளை வாங்க கடைத்தெருவுக்கு வருகின்ற. இதனால் தஞ்சாவூரில் உள்ள கடைத்தெருவுக்கு அனைத்தும் பொது மக்களால் நிரம்பி வழிகிறது .

News October 28, 2024

ஒரத்தநாட்டில் 1 டன் குட்கா பறிமுதல் 

image

தஞ்சையில் போதைப்பொருட்களுக்கு எதிராக தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் சுதா தலைமையில் உதவி ஆய்வாளர் விஷ்ணுபிரியா மற்றும் காவலர்கள் அடங்கிய குழு அதிரடி சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 1070 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு ரஹமத்துல்லா, சுரேஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!