India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். நன்கு வளர்ந்து தற்போது அறுவடை தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அறுவடை இயந்திரத்தை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மக்காச்சோளம் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வுத் துறை சார்பில் நேற்று 15 பேருக்கு ரூ. 9.21 லட்சத்தில் செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மருத்துவக்கல்லூரி முதல்வா் பாலாஜிநாதன் செயற்கை கால், கைகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் இன்று காலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.மு.பாலகணேஷ் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.உத்கர்ஷ் குமார் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி (ம) பகிர்மான கழக தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, வருகிற 5ஆம் தேதி வல்லம் சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. வல்லம், செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை 2,924 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு மூன்று நாட்கள் பராமரிக்கப்பட்டு பின்பு விடப்பட்டுள்ளது. இதேபோல் கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் இதுவரை 50% நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழிகாட்டுதலின் பேரில் நாகூர் தர்காவில் 2/12/24 கொடியேற்றத்துடன் தொடங்கி 11/12/24 வரை நடைபெற இருக்கும் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்கு, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என நிர்வாக இயக்குனர் ரா. பொன்முடி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, கல்வி கடன், முதியோர் உதவி தொகை, பட்டா, தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 430 புகார் மனு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
மழை நீரால் பயிா்களுக்குப் பூச்சி தாக்குதல், நோய்த் தாக்குதல் ஏற்படும். இதைத் தடுக்க, பயிா் ஊட்டத்துக்கு 25 கிலோ யூரியா, 15 கிலோ பொட்டாஷை அரை லிட்டா் வேப்ப எண்ணெய், மணலுடன் கலந்து பயிா்களுக்கு தெளிக்க வேண்டும். பயிா்களைச் சூழ்ந்துள்ள தண்ணீா் வடியவில்லை என்றால், வட்டார வடகிழக்கு பருவமழை சேவை மையத்தினரை தொடா்பு கொண்டு பிரச்னைகளை தெரிவிக்கலாம் என வேளாண் இணை இயக்குநா் வித்யா தெரிவித்துள்ளார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில்முனைவோர் 30.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது பொதுமக்கள் நலன் கருதி 5.12.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் சி. தமிழ்நங்கை தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெளி மாநில தொழிலாளர்களை பணி அமர்த்துகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவர்களின் அடையாள அட்டை மற்றும் தொடர்பான ஆவணங்களை பெற்று பணி அமர்த்த வேண்டும். வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து விவரங்களை தொழிலாளர் துறையால் labour.tn.gov.in/ism என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என தொழிலாளர் நல உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.