India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடி கிராமத்தில் கால பைரவர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் விளக்கேற்றி, கால பைரவரை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் நீங்கி, வாழ்விலும், தொழிலிலும் வெற்றி கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது ஏமாறாமல் இந்த எண்ணுக்கு 9498452120 அழைத்து CHECK செய்த பிறகு வாங்குங்க. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இராஜாமடம் கிளைவாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஒரத்தநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எவ்வாறு இறந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய அதிகாரிகளாக பா. பிரியங்கா பங்கஜம் – மாவட்ட ஆட்சியர், ஜியாவுல் ஹக் – காவல்துறை துணைத்தலைவர், தஞ்சாவூர் சரகம் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர் உள்ளனர். மேலும் தெ. தியாகராஜன் – மாவட்ட வருவாய் அலுவலர், முனைவர் மு.பாலகணேஷ் – திட்ட இயக்குநர், இரா. இராஜாராம்-காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பணியில் உள்ளனர். தெரியாதவர்களுக்கு ஷேர் செய்து நம் மாவட்ட தகவலை தெரியப்படுத்துங்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.17) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வெளிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் காவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர எண் 100யை அழைக்கலாம்.
தஞ்சாவூரை வரலாற்றில் பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அதில் முக்கியமாக
முத்தரையர்கள் (பொ.ஊ. 600 முதல் பொ.ஊ. 849),
சோழர்கள் (9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு),
தஞ்சை நாயக்கர்கள் (16ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு).
மராத்தியர்கள் (17ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு).
ஆங்கிலேயர்கள் 18ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்துள்ளனர். iஇதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
தஞ்சை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் இங்கே <
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளை கேரள மாநிலத்துடன் நேரடியாக இணைக்கும் புதிய தினசரி ரயில் சேவை மயிலாடுதுறை – பாலக்காடு இடையே தொடங்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.