Thanjavur

News August 19, 2025

தஞ்சை: டிகிரி போதும்.. ரூ.64,000 சம்பளத்தில் வேலை

image

ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர்கள் சேவை அதிகாரி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் டிகிரி முடித்த தமிழ் நன்கு தெரிந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து 08.09.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

தஞ்சை ஆட்சியர் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தேர்வு

image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான பல்வேறு உதவிகளைப் பெற்றுத் தந்ததற்காகவும், அவர்களுடைய நலனுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காகவும் 2025- ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News August 19, 2025

தஞ்சை: சான்றிதழ் தொலைந்து விட்டதா? Don’t Worry!

image

தஞ்சை மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. (<<17451790>>பாகம் 2<<>>)

News August 19, 2025

என்ன சான்றுகளைப் பெறலாம்? (2/2)

image

வருமான சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் மற்றும் வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

தஞ்சாவூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை (1/2)

image

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ.5000, இன்டெர்ன்ஷிப்பில் மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு நாளைக்குள் (ஆக.20) <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். <<17450328>>பாகம்-2<<>>

News August 19, 2025

தஞ்சாவூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

image

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள். 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர நல்ல வாய்ப்பு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 19, 2025

தஞ்சாவூர்: இறப்பிலும் இணைபிரியா தம்பதியர்!

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா (60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனை அறிந்த மனைவி கவிதா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News August 19, 2025

கணவன் உயிரிழந்ததால் மனைவி தற்கொலை

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா(60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனையறிந்த மனைவி கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்தது துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News August 18, 2025

கணவன் உயிரிழந்ததால் மனைவி தற்கொலை

image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா(60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனையறிந்த மனைவி கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்தது துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News August 18, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில், வீடுகள் – மனைகள் – குடியிருப்புகளின் அலகுகளில் 31.03.2025 முன்பு தவனை காலம் முடிவுற்ற திட்டங்களுக்கு, வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை அபராத வட்டி இன்றி தவனை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!