India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பாலாபிஷேகம் செய்யும்போது அந்தப் பால் நீல நிறமாக மாறும் அதிசயம் நடைபெறுகிறது. ராகு பகவான் இன்று மாலை 4:20 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு திருமண தடை நீங்கி ராகு தோஷ நிவர்த்தி பெறுங்கள். Share It Now
இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சாமி கோயிலில் ராகு பகவான் தனி சன்னதி கொண்டு மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் இன்று மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
தஞ்சை அருகே கத்திரிநத்தத்தில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்காளஹஸ்தி எனப் போற்றப்படும் இக்கோயில் ஆந்திர, ஸ்ரீ காளஹஸ்திக்கு இணையான ராகு, கேது பரிகார ஸ்தலமாகும். வாக்கிய பஞ்சாங்கப்படி நாளை (ஏப்.26) மாலை 4.28க்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். இங்கு சென்று நாகலிங்கப்பூ, வில்வ இலை சாற்றி வழிபட்டால் தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம். பிறருக்கு ஷேர் செய்யவும்
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
தமிழ்நாட்டில் உள்ள 1,299 காலி எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுத படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3 க்குள் https://www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
கும்பகோணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழைகம் விரைவில் அமைக்கப்படும் என சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும், கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் கருணாநிதி எனவும் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 25ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி – கற்பகசுந்தரி தம்பதியினர். கணவருடனான தகராறின் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கற்பகசுந்தரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ராமமூர்த்தி தான் அடித்து கொன்றுள்ளார் என உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதி செய்த காவல்துறை தற்கொலைக்கு தூண்டியதாக ராமமூர்த்தியை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.