Thanjavur

News February 14, 2025

தஞ்சை: அஞ்சல் துறையில் வேலை.. ரூ.30,000 வரை சம்பளம்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 76 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

தஞ்சை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

தஞ்சையில் பல்வேறு மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (15-ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பட்டுக்கோட்டை, திருமலைசமுத்திரம், கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, சேதுபாவாசத்திரம், துவரங்குறிச்சி,பள்ளிக்கொண்டான், அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி, சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, நதியம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது

News February 13, 2025

அமைச்சர் தலைமையில் நாளை பட்ஜெட் கூட்டம்: ஆட்சியர்

image

கும்பகோணம் மாநகராட்சி மூர்த்தி கலையரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மண்டல வாரியான 2025-26 வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில், உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் முன்னிலையில் வெள்ளிக் கிழமை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

News February 13, 2025

தஞ்சை: கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 13 பேருக்கு அபராதம்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் உத்தரவின்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் பொது இடத்தில் புகைபிடிக்க கூடாது. மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தநிலையில் பொது இடத்தில் புகைபிடித்த 13 பேரிடம் இருந்து அபராத தொகையாக ரூ.1300 வசூலிக்கப்பட்டது.

News February 12, 2025

காவிரியில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்

image

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் தைப்பூச தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. அப்போது காவிரி ஆற்றில் 14 வயது சிறுவன் புனித நீராடுவதற்காக ஆற்றில் இறங்கி உள்ளான். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதை கண்ட தீயணைப்பு வீரர்கள் உடனே ஆற்றில் குதித்து அந்த சிறுவனை மீட்டனர். மேலும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 11, 2025

புதிய பாடத்திட்டங்கள் பற்றிய பயிற்சி வகுப்பு: ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்( 12.02.2025) புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் அரசு பல் தொழில் நுட்பக் கல்லூரி பேராசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் பற்றிய பயிற்சி வகுப்பினை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் துவக்கி வைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News February 11, 2025

பேராவூரணி: பள்ளி மாணவி திடீர் உயிரிழப்பு

image

பேராவூரணி சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன்–பரிமளா தம்பதியினர். இவரது மகள் கவிபாலா (13). பள்ளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மூக்கில் இரத்தம் கசிந்து மயங்கி விழுந்து மாணவி உயிரிழந்துள்ளார். பள்ளியில் வழங்கப்பட்ட குடற்புழு மாத்திரைகளே காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News February 10, 2025

5.05 லட்சம் பேர் மருத்துவக் காப்பீடு அட்டைக்கு பதிவு: தஞ்சை ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை கோரி பதிவு செய்தவா்களின் எண்ணிகை 5,05,225 போ் என்றும், இவா்களில் காப்பீடு திட்ட அட்டை உபயோகித்து மருத்துவம் பாா்த்தவா்களின் எண்ணிகை 1.7 லட்சம் என்று தஞ்சை கலெக்டர் தெரிவித்துள்ளார். புதிய மருத்துவ காப்பீட்டுத் அட்டைக்கு இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

News February 10, 2025

போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திர பதிவு 

image

பாபநாசம் அருகே மேலவழுத்துார் பகுதியை சேர்ந்த ஷேக் தாவூத். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நிலத்தினை ஆதார் கார்டில் பெயர் மாற்றி ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்த முகம்மது யூசுப் அலி, உஸ்மான், அப்துல்காதர், ராஜசேகரன் ஆகிய நான்கு பேரை பாபநாசம் காவல்துறையினர் கைது செய்தனர்.

error: Content is protected !!