Thanjavur

News April 5, 2025

உலக வரலாற்றில் இடம் பிடித்த தஞ்சாவூர் பீரங்கி

image

தஞ்சையில் சுற்றுலா வரும் பயணிகள் பார்க்கவேண்டியவற்றில் முக்கிமானது, இந்த 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி ஆகும். வெள்ளை பிள்ளையார் கோயில் அருகில், காணப்படும் இந்த பீரங்கி உள்ள இடத்தை பீரங்கி மேடு என்றழைக்கின்றனர். ‘ராஜகோபால பீரங்கி’ என்று பிரபலமாக அறியப்படும் இப்பீரங்கி, ரகுநாத நாயக்கரின் ஆட்சிகாலத்தில், 1620ஆம் ஆண்டு வார்க்கப்பட்ட இது, உலகின் மிகப்பெரிய ஃபோர்ஜ் வெல்டிங் இரும்பு பீரங்கியில் ஒன்றாகும்.

News April 5, 2025

தஞ்சை: உணவக உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

image

தஞ்சவூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவக உரிமையாளர்கள் சங்க ஆய்வு கூட்டம் நேற்று (ஏப் 04) நடைபெற்றது. இதில், அனைத்து உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் விற்பனை செய்ய வேண்டும். பாலித்தீன் பைகளில் டீ, காபி, உணவு பொருட்கள் போன்றவை பார்சல் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

News April 5, 2025

தஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

image

தஞ்சையில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு, சிறப்பு முகாம் வருகிற 8-ந்தேதி(செவ்வாய்) நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ள இம்முகாமில், பல துறை மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் வழங்க உள்ளனர். இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News April 5, 2025

சுய உதவி குழுக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மகளிர் சுய உதவி குழுக்களில் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விலை நிர்ணயம் (அ) சந்தைப்படுத்தல் உருவாக்கும் வகையில் மண்டல பொது வசதி மையம் துவங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற தகுந்த ஆவணங்களுடன் வரும் 8ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 5, 2025

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை

image

தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 10ஆம் நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமையிடத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கு பெறுமாறு தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)

News April 5, 2025

தஞ்சை: வயலில் கிடந்த பச்சிளம் குழந்தை 

image

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை கிராமத்தில் நேற்று வயலில் பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் கிடந்துள்ளது. பிலோமினாள் என்ற பெண், குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்துள்ளார். உடனடியாக அவர் தனது கணவருடன் குழந்தையை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார். குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 4, 2025

தஞ்சையில் இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

image

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் TNPSC IV தேர்விற்கான கட்டணமில்லா இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருப்பனந்தாள், திருவோணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு பதிவு செய்ய ஆன்லைன் இணைய முகவரி ஆட்சியர் வழங்கியுள்ளார். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும்.

News April 4, 2025

பட்டுக்கோட்டையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குரூப்-4 தேர்வு ஜூலையில் நடைபெற உள்ளது. இதனால் பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பட்டுக்கோட்டை அறிவுசார் மையத்தில் வரும் 9ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார். இதை போட்டி தேர்வுக்கு தயாராவோருக்கு SHARE செய்து பயன்பெற உதவுங்கள்…

News April 4, 2025

தஞ்சை மாவட்டத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

News April 4, 2025

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்கள் நேர்காணல்

image

மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வணிகம் செய்வதற்காக நேரடி முகவர்கள் மற்றும் பல அலுவலர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் ஏப்ரல் 23ஆம் தேதி தஞ்சை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், 24ஆம் தேதி பாபநாசத்திலும், 25ஆம் தேதி மன்னார்குடி தலைமை தபால் நிலையத்திலும் நடைபெற உள்ளது. இதற்கு 18 வயது நிரம்பியவர்களாகவும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.

error: Content is protected !!