Thanjavur

News March 29, 2025

தஞ்சையில் மாநகரட்சி கூட்டம், பாதியிலேயே கிளம்பிய மேயர்

image

தஞ்சையில் பட்ஜெட் கூட்டம், நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர் சரவணன் திருவோடு ஏந்தி சாமியார் தோற்றத்தில் பங்கேற்றார். கவுன்சிலர் சரவணன், தஞ்சை மாநாட்டு அரங்கு திரையரங்கமாக மாற்றப்பட்டு தனியாருக்கு விட்டதில் ரூ.1 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கு மேயர் பதிலளிக்க வேண்டும், என கேள்வி எழுப்பினார். அதற்கு மேயர் ராமநாதன் பதிலளிக்காமல் அரங்கை விட்டு சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

News March 29, 2025

சம்பா பருவத்தில் 3,17,000 ஏக்கர் சாகுபடி 

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் தஞ்சை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் 3,22,00 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு, இதுவரை 3,17,000 ஏக்கரில் அறுவடை பணிகள் நிறைவடைந்தாகவும், கோடை பருவத்தில் 13,200 ஏக்கர், உளூந்து 36,279 ஏக்கர், மற்றும் எண்ணைய் வித்து பயிர்கள் 26,797 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.

News March 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.தெ.தியாகராஜன் அவர்கள் மற்றும் பலர் உடன் உள்ளனர். இதில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 28, 2025

பாவங்கள் போக்கும் சக்திவாய்ந்த ஆதனூர் கோயில்

image

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில், சுவாமிமலையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம். இந்த கோயிலில், கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் பெருமாளின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் உள்ளன. இவை மோட்ச தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த தூண்களை தொட்டு தரிசனம் செய்தால், பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். மோட்சம் கிட்ட இந்த கோயிலுக்கு போங்க. இதை SHARE பண்ணுங்க.

News March 28, 2025

தஞ்சையில் செல்போன் பழுது நீக்க இலவச பயிற்சி

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு மைய இயக்குனர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை ஈஸ்வரி நகரில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச செல்போன் பழுது நீக்கம் (ம) சேவைக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. 30 நாட்கள் நடைபெறும் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் 5 தேதி கடைசி நாளாகும். தகுந்த ஆவணத்துடன் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கூறப்பட்டுள்ளது.

News March 28, 2025

தஞ்சையில் இன்று எஸ்எஸ்எல்சி பொது தேர்வுகள் 

image

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வெள்ளி) தொடங்கி (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தமிழ் தேர்வு காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த தேர்வினை 136 மையங்களில் 30,017 மாணவர், மாணவிகள் எழுதுகிறார்கள். இதில் 14,409 மாணவர்களும், 15,108 மாணவிகளும் அடங்குவர். தனித்தேர்வர்கள் 500 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

News March 28, 2025

தஞ்சை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 98-102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 27, 2025

கடன் தொல்லையை தீர்க்கும் திருச்சேறை சாரநாத பெருமாள்

image

திருச்சேரை சாரநாதப் பெருமாள் கோயில்108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். இது 1000 ஆண்டு பழமையான கோயிலாகும். இங்குள்ள பெருமாளை ஒருமுறை வணங்கினால் காவிரியில் 108 முறை நீராடிய பலன் கிடைக்குமாம். கடன் தொல்லை நீங்க, செல்வம் பெருக, வறுமை விலக திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில், உத்தமர் கோயில், புருஷோத்தம பெருமாள் கோயில் ஆகிய கோயில்களைப் போற்றி வணங்கலாம். இந்த தகவலை SHARE செய்யவும்

News March 27, 2025

மார்ச் 31க்குள் வரி செலுத்த வேண்டும் – ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நடப்பாண்டு சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி ஆகியவற்றை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வரி பாக்கியினை ஊராட்சி அலுவலகத்திலோ, வரிவசூல் முகாம்களிலோ, செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம். மேலும், குடிநீர் வரி செலுத்தாதவர்களின் வீட்டுக் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க

News March 27, 2025

இது தான் சோழன் வாழ்ந்த அரண்மனையா?

image

தஞ்சையில் சோழர்கள் ஆட்சிக்கு பின்பு, மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாலிக்காபூர் படையெடுப்பின்போது, மாளிகைகள், மண்டபங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. இப்போதுள்ள அரண்மனைதான் ராஜராஜ சோழன் காலத்தில் அரண்மனையாக இருந்ததாக சில ஆய்வாளர்களும், தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் அரண்மனை இருந்ததாக சில ஆய்வாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். உங்கள் கருத்தை COMMENT-ல் சொல்லுங்க…SHARE பண்ணுங்க.

error: Content is protected !!