India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <
மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer/ Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளது. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை, அவரது தந்தை சத்தியமூர்த்தி(48), பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கு விசாரணை தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி சத்தியமூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தஞ்சையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் செல்போன்கள் திருடப்படுவதாக காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. அதன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் திருச்சியை சேர்ந்த பழனிவேல் (50), ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் (52) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிப்பதாக பாப்பாநாடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், உரிய அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்த அதே பகுதியை சேர்ந்த அப்துல்லா(49), கலியமூர்த்தி(48) ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் நாட்டு வெடி தயாரிக்கும் மூல பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை மக்களே நாளை 24.09.2025 மறக்காதீங்க! உங்கள் கோரிக்கை அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!
1.கும்பகோணம்
மண்டல அலுவலகம்,
2.பெருமகளூர் – கே.பி.மஹால்
3.தஞ்சாவூர்
கிராம பொது சேவை மையக் கட்டிடம், கொள்ளங்கரை
4.பட்டுக்கோட்டை
எவர் கோல்ட் மண்டபம், மேலவெனிர்காடு
5.திருவிடைமருதூர்
S.J மஹால், திருநரையூர்
6.கும்பகோணம்
AP மஹால், ஏராகரம்
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
தஞ்சை மக்களே இன்று 23.09.2025 ஆம் தேதி செவ்வாய் கிழமை நமது தஞ்சையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்!
1.தஞ்சாவூர் 11KV Ratio only,
2.ஈஸ்வரி நகர்
3.மருத்துவ கல்லூரி
4.ரெட்டிபாளையம்
5.வீரக்குடி
6.ஒரத்தநாடு 11KV Ratio only
ஆகிய சுற்றுவட்டாரா பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது!
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள அரசு தொழிற் பயிற்சி மையத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நேரடி சேர்க்கையில், மாணவர்கள் தகுந்த ஆவணத்துடன் தங்களுக்கு தேவையான தொழில் பயிற்சி பிரிவில் சேர்ந்து பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.