Thanjavur

News April 28, 2025

பொதுமக்களிடம் இருந்து 710 புகார் மனுக்கள் பெறப்பட்டன

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 710 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News April 28, 2025

ஜவாஹிருல்லா வழக்கில் இடைக்கால தடை

image

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து ரூ.1.50 கோடி நிதி பெற்றதாக பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ஜவாஹிருல்லா ஐகோர்ட்டில் முறையிட அங்கும் தண்டனை உறுதிசெய்யப்பட அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓர் ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

News April 28, 2025

தஞ்சை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் எண்கள் ▶தஞ்சாவூர்-7402607361, ▶திருவையாறு-7402607363, ▶பூதலூர்-7402607362, ▶ஒரத்தநாடு-7402607364, ▶கும்பகோணம்-7402607366, ▶திருவிடைமருதூர்-7402607367, ▶பாபநாசம்-7402607369, ▶பட்டுக்கோட்டை-7402607371, ▶பேராவூரணி-7402607373. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க

News April 28, 2025

தஞ்சை சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி, விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் (ஏப்.29) இந்த லிங்க்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

தீப்பற்றி எரிந்த பள்ளி வகுப்பறை 

image

பட்டீஸ்வரம், கொற்கை பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வகுப்பறைக்குள் இருந்து நேற்று புகை வெளியேறிவுள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் வகுப்பறைக்குள் இருந்த கல்வி உபகரணங்கள், மேஜைகள், மின் ஒயர்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

News April 27, 2025

விண்ணமங்கலத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் மரணம்

image

திருக்காட்டுப்பள்ளி விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த சம்பத் மகன் யோகேஷ் (16). தனது பிறந்தநாள் அன்று வீட்டில் உள்ள குளியல் அறையில் மின்மோட்டாரை இயக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 27, 2025

தஞ்சாவூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு !

image

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..

News April 27, 2025

தஞ்சை மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

கோடைகாலம் நெருங்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் உங்கள் பகுதிகளில் ஏற்பட்டால் அதை குறித்து அறிய இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶செயற்பொறியாளா், தஞ்சாவூர்-04362-237010, ▶தஞ்சாவூா் மின்விநியோக சுற்றுவட்டாரம்- 04362-237448. இந்த எங்களை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 27, 2025

தஞ்சையில் வேலைவாய்ப்பு

image

தஞ்சாவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Digital Marketing Manager) வேலைக்கான காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 27, 2025

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

image

மானோஜிபட்டியைச் சேர்ந்தவர் கவியரசன் (24). இவருக்கும், அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சிறுமியைக் கவியரசன் தனது வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அச்சிறுமி 4 மாத கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின்கீழ் கவியரசனை கைது செய்தனர்.

error: Content is protected !!