Thanjavur

News January 30, 2025

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய‌ பகுதிகளில் வருவாய் துறை சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம்‌ 1,000 ரூபாய் தரவீதம் 4,17,999 பயணாளிகளுக்கு 41,79,99,000 பயன் பெற்று‌ வருவதாக தெரிவித்துள்ளார்.

News January 30, 2025

தஞ்சையில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று (ஜன.29) வெளியிட்டுள்ள செய்தி‌குறிப்பில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் போன்ற விண்ணப்பங்கள் கடந்த 2-ந்தேதி முதல் பெறப்பட்டு, இதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (பிப்.28) -ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News January 30, 2025

தஞ்சை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோழிக்கழிச்சல் நோய் பாதிப்பால் கிராம பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் ஆண்டுதோறும் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 3,19,200 கோழிகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் பிப்.1 முதல் பிப்.14-ந்தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்டுள்ளது.

News January 30, 2025

தஞ்சை: ஓடும் பேருந்தில் நகை திருடிய 2 இளைஞர்கள் கைது

image

ஒரத்தநாடு அருகே காட்டுக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்னலட்சுமி (27). இவர் சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிய போது மர்ம நபர்கள் அவர் பையில் வைத்திருந்த 12 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றுள்ளனர். புகாரின் பேரில் விசாரித்த தஞ்சை போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் சண்முகம் (26), கண்ணன் (23) ஆகிய இருவரை கைது செய்து, நகையை மீட்டனர்.

News January 29, 2025

தஞ்சையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பதிவு செய்ய லிங்க் 

image

தஞ்சை மாவட்டம் மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு வருகிற‌ (பிப்.1) ஆம் தேதி நடை பெற்ற உள்ளது. இந்நிலையில் விழாவிற்கு முன்பதிவு செய்ய தமிழக அரசு ஆன்லைன் பதிவை தற்போது தொடங்கியுள்ளது. மாடுபிடி வீரர்கள் https://thanjavur.nic.in/ மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய இறுதி நாள் வரும் (ஜன.31) ஆம் தேதி வரை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

News January 29, 2025

சமூக ஆர்வலர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தஞ்சை ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீர்நிலை (ம) சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடும் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளுக்கு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது மாவட்டத்தில் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. தகுதியுடையவர்கள் <>awards.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

News January 29, 2025

தஞ்சை பெண்ணிடம் வழிப்பறி: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

image

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை, இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (36). இவர் நேற்று முன்தினம் கல்யாண சுந்தரம் நகர் பகுதியில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் அவரது கைப்பை மற்றும் ரூ.4,000 பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் 15, 17 வயது சிறுவர்கள் மற்றும் பூபதிராஜா (20) உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். SHARE NOW!

News January 29, 2025

தஞ்சை மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு அறிவிப்பு

image

தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் வரும் பிப்.1-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் <>thanjavur.nic.in<<>> என்ற இணையதளத்தில் ஜன.29 (இன்று) காலை 10 மணி முதல் ஜன.31 (வெள்ளிக்கிழமை) வரை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News January 28, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் (30ம் தேதி) காலை 10 மணிக்கு பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

தஞ்சை மாவட்டம் நீர்நிலைப் பாதுகாவலர் விருதுக்கு விண்ணப்பிக்கலம் 

image

நீர் நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் போற்றி கவுரவிக்கவும் வகையில் மாவட்டத்திற்கு ஒருவர் என 38 பேருக்கு “முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர்” விருதும், பரிசும் வழங்கப்படும் விருதுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. எனவே, விண்ணப்பிக்க http://awards.tn.gov.in வலைதளம் மூலம் வருகின்ற 31 ஆம் கடைசி நாள் என ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!